செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, அக்டோபர் 08, 2011

கிழிந்து போகும் போலி சாமியார்கள்!


போலி, போலி, போலி எங்கும் போலி எதிலும் போலி, எங்கே கொண்டு போய்த் தலையை முட்டிக் கொள்வது. அரசயல்வாதி யோக்கியனில்லை; அதிகாரி யோக்கியனில்லை; சாமியார் மட்டும் எப்படி யோக்கியனாக இருப் பான்? பிரோமானந்தர்களும், நித்யானந்தர்களும் நவீன காலச் சீரழிவுக் கலாசாரத்தின் தத்துப்பிள்ளைகள். வழி நடத்த வேண்டியவனெல்லாம் அயோக்கியனாக இருக்கும் உலகத்தில் மதிப்பீடுகளெல்லாம் போலியாகத் தானே இருக்கும்.!? விபூதிப் பைகளில் டாலர்களை வைத்திருக்கும் இவர்க ளுக்குச் செய்யும் சேவையை, பெருமையாக கருதும் மக்கள் இருக்கும் வரை எத்தனை சாமியார்கள் வந்தாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை. விவேக் சொன்னது போல் இன்னும் எத்தனை பெரியார்கள் வந்தாலும்... உங்களை... ?

அதனால் மக்களே...உழைத்து வாழுங்கள்...உண்மையாய் வாழுங்கள்... சமூகத்திற்கு சேவை செய்ய எந்த காவி உடையும்...ஜடா முடியும்...விபூதி பட்டையும் தேவையில்லை... எல்லா மனிதரையும் மதியுங்கள்...அது போதும் இறை நம்பிக்கைக்கு!

காலத்திற்கேற்றவாறு சாமியார்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்; அமெரிக்காவுக்குப் போகிறார்கள்; நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். "ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்" என்பதற்கு மாறாக,"அத்தனைக்கும் ஆசைப்படு" என்று வேறு போதிக் கிறார்கள். இன்னொருத்தர் "கதவைத் திறவுங்கள் காற்று வரட்டும்" என்றார். கதவைத்திறந்து பார்த்தால்தான் தெரிகிறது இவர்களின் 'துறவறம'¢. இப்படி இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? அவர்களை யார் கண்டு பிடிப்பது ? கண்டுபிடித்தால் அதுக்குப்பிறகு மக்கள் இப்படியானவர்களை நம்பாமல் இருப்பார்களா ? கட்டாயம் இல்லை.

இன்று கதவைத்திற காற்று வரட்டும் என்பான். இன்னொருத்தன் நான்தான் அவதாரம் என்று சொல்லுவான். இன்னொருத்தன் மாஜிக் பண்ணுவான். மக்கள் அதை நம்புவார்கள். பணத்தை வாரி இறைப்பார்கள். வாழ்க்கைத் தத்துவம் என்பான், அன்பு செலுத்துங்கள் என்பான் இதில் மயங்கி போவார் கள். இதைத்தானே பத்தாம் ஆண்டு சமயப்புத்தகத்திலும் சொல்லியிருக்கி றார்கள்.

புத்தர், ஏசு, நபிகள் நாயகம் போன்ற மகான்களும் இருந்தர்கள். ஆனால் இவர்கள் மாளிகைகள் கட்டவில்லை. மாலைபோடும் நிகழ்வு நடத்த வில்லை. ஏன் தாங்கள் அவதாரம் எனறு கூறியோ, மாஜிக்கோ செய்ய வில்லை. மக்களோடு வாழ்ந்தார்கள். இறைவனை மட்டும் வணங்கினார்கள். அவர்களின் வழியில் வருகிறேன்¢ என்று கூறுபவர்களை நம்பி பணத்தை வாரியிறைக்கும் சமூகம் எப்போது திருந்தப்போகிறது.?

இத்தனை சொன்னாலும் போலிகளை நம்பி ஏமாறும் கூட்டம் இருக்கத்தானே செய்கிறது. போலிச்சாமிகளிடம் மக்கள் போகத்தானே செய்கிறார்கள். அரசாங்கமும், காவல்துறையும் என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. அவர்களை சொல்லிக்குற்றமில்லை, அவர்கள் போலிகளைக் கைது பண்ணவோ ஏன் விசாரணைகூட செய்யமுடியாதபடி மேலிடத்து அதிகாரிகள் காவல் துறையின் கைகளை கட்டிப் போடுகிறார்கள்.

 அப்படி அதிகாரம் கிடைத்தாலும் ஏதாவது தவறுதலாக நடந்துவிட்டால் மதக்கலவரம் வந்துவிடுமோ என்ற பயம். இவற்றுக் கெல்லாம் ஒரே தீர்வுதான் இருக்கிறது. மக்கள் திருந்தணும் அல்லது போலிகள் திருந்தணும். போலிச்சாமிகள் திருந்துவது சாத்தியமல்ல. மக்களே மனிதனை வணங்குவதென்றால் தாய் தந்தையை வணங்குங்குள். கண்ட கண்ட கேவலங்களை அல்ல.

இன்றைய சாமியார்கள் எனப்படுவார்கள் யார் ? தனது பலவீனத்தை முற்றிலும் மறைக்கத் தெரிந்தவர்களே சாமியார்களாக உலா வருகிறார்கள். அதனால்தான் உதறித்தள்ளாத, வெறுமனே முற்றிலும் மறைத்து வைக்கப்பட்ட அவர்களுடைய பலவீனங்கள் ஏதோ ஒரு கட்டத்தில் எப்படியாவது வெளியாகிவிடுகின்றது.

இந்த பலவீனத்தை மறைக்கத்தான் அந்த, சாமியார்கள் தனி மனிதனாக நின்று போதிக்காமல் ஆசிரம், ஏ.சி., விமானம், பாதுகாவலர்கள், சிஷ்யர்கள் என்று ஒரு நிறுவனமாக மாறிப் போகின்றார்கள். எல்லாவற்றுக்கும் விலை வைக்கின்றார்கள்.

விவேகானந்தர் மறைந்து 70 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கேட்ட எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்கள் உருவாகவில்லை. அவர்கள் உருவாகியிருந்தால் போலி சாமியார்கள் உருவாக மாட்டார்கள். புழுக்களும், கொசுக்களும், கிருமிகளும் அசுத்தமாக இருக்கும் சாக்கடையில் இருந்தே உருவாகின்றன இதே வழிதான் நவீன கால சாமியார்களின் பிறப்பும்.!

லோக குரு என்று சொல்லப்பட்ட காஞ்சிபுரத்து ஆசாமி ஒருவர் வழக்கில் சிக்கவில்லையா? பெண்கள் விசயத்தில் ஆகட்டும் எவ்வளவு அசிங்கம்! ஆனாலும் அந்த ஆசாமி பெரிய மனுசராக பவள விழா கொண்டாடிக் கொண்டு வீதி உலா வந்து கொண்டுதானே இருக்கிறார்?

இயற்கையை அல்லது இயற்கை உண்டாக்கிய உணர்வுகளை வென்றுவிட்டேன் என்று சொல்பவர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒருவர் மகா...மகா...மகாத்மாவாக இருக்க வேண்டும். இல்லை மகா ஃபிராடாக இருக்க வேண்டும். பொதுவாக இந்த இரண்டாவது வகை ஆசாமிகள் தான் அதிகம்.


 மனிதனாகப் பிறந்தவன் தன் உடலின் இச்சைகளை தற்காலிகமாக வேண்டுமானால் ஒத்திப் போடலாம். அல்லது எஸ்க்பைரி ஆகிவிட்ட பிறகு சுவாமிஜி வேடம் போடலாம். அதிகபட்சம் அவ்வளவுதான்¢ முடியும். தனக்கு பின்னால் செயற்கை ஒளிவட்டத்தை பொருத்திக் கொண்டு ஊரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பார்க்க சுவாமிஜி பதவி வேண்டுபவர்கள், உபதேசம் செய்வதற்கு பிரம்மச்சரியமோ, இந்திரியங்களை அடக்கிவிட்டதன போலிப் பெருமையோ, கண்கட்டி வித்தைகளோ தேவை யில்லை. நேர்மை, ஒழுக்கம் மட்டும்தான் வேண்டும்.

எத்தனையோ சாமியார்கள் நன்கு ஆண்டு அனுபவித்து, உலகின் கள்ளம் மனங்கள் அத்தனையிலும் கரை கண்ட பிறகு, ஓய்ந்து போய் இளைஞர் களுக்கு உபதேசம் செய்வதைப் பார்க்கலாம். இவர்கள் சாதாரண மனிதனாக இருந்துவிட்டு போகவேண்டியதுதானே? ஏன் இந்த கபடத் தனம்.? சாமியார் தொழிலை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும்.

 ஒவ்வொரு சாமியாரையும் விசாரணைக்கு உட்படுத்தி குற்றங்களின் அடிப்படையில் கடும் தண்டனையைக் கொடுக்க வேடண்டும். இல்லாவிட்டால் நீங்களும் நானும் மாறாத வரை நாட்டில் ரமணிகளும், பிரேமானந்தா, ஜெயேந்திரர், நித்தியானந்தர் போன்ற கசடுகள் உருவாவதை தடுக்கமுடியாது. எச்சரிக்கை!

பழைய சாமியார்களும், மாடர்ன் வேதாந்திகளும், கம்ப்யூட்டர் கள்ளச் சாமிகளும், தங்கக் கோபுரம் கட்டி ஈயத்தை விட இளித்துப் போய்கிடக்கும், ஒழுங்கீனங்களை கொண்டவர்கள் நமக்கு வேண்டாம். நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வேண்டவே வேண்டாம்! புரிந்து கொள்ளுங்களேன்...!

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக