செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், அக்டோபர் 25, 2011

எக்ஸ்ட்ரா வெற்றி !


நம்முடைய சிந்தனையின் பிரமாண்டம் தான், நமது வெற்றி தோல்வியையே தீர்மானிப்பதாகச் சொல்கிறது ‘ The Magic Of Thinking BIG’ என்ற புத்தகம். இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் டேவிட் ஷாவர்ட்ஸ். நமது சிந்தனைதான் செயலைத் தூண்டுகிறது, பெரிய அளவில் சிந்திக்கிறபோது, நமது மனம் அகலமாகிறது, செயல்வேகம் உயர்கிறது, எல்லாவிதத்திலும் நாம் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்று அடித்துச் சொல்கிறார் டாக்டர் ஷாவர்ட்ஸ். அதை வளர்த்துக்கொள்ள தன்னம்பிக்கை வேண்டும். அதற்கு சில எளிய வழிகளைச் சொல்லித் தந்திருக்கிறார் டாக்டர் ஷாவர்ட்ஸ். அதில்,


ஒரு வெள்ளைக் காகிதம் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு கோடு கிழியுங்கள். அந்த கோட்டின் இடதுபக்கத்தில், உங்களுடைய மிகச் சிறந்த ஐந்து குணங்களைப் பட்டியல் போடுங்கள். சான்றாக நான் பொய்யே சொல்லமாட்டேன், ஒரு வேலையைக் கையில் எடுத்தால் இரவு, பகல் பார்க்காமல் உழைப்பேன், உங்களுடைய பலங்களை மட்டும் எழுதிக்கொள்ளுங்கள். அடுத்து, அதே காகிதத்தின் இன்னொரு பக்கத்தில் உங்களுக்குத் தெரிந்த பெரிய வெற்றியாளர்களின் பெயர்களை எழுதுங்கள்.

இவர்கள் உங்களுடைய பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், தூரத்து உறவாக இருக்கலாம், பள்ளியிலோ கல்லூரியிலோ கூடப் படித்தவர்களாக இருக்கலாம், அலுவலகத்தில் சக ஊழியர்களாக இருக்கலாம், அல்லது உங்களுக்குச் தொடர்பே இல்லாத பிரபல புள்ளியாகக்கூட இருக்கலாம், அவர்கள் பெரிய வெற்றியாளர்கள் என்று நீங்கள் நினைக்கவேண்டும், அதுதான் முக்கியம்.

லிஸ்ட் போட்டாச்சா ? இப்போது, அமைதியான ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு, நீங்கள் தயாரித்திருக்கும் இரண்டு பட்டியல்களையும் ஒப்பிடத் தொடங்குங்கள். இதற்காக, நீங்கள் உங்களுடைய ஸ்பெஷல் குணங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும், வலது பக்கம் உள்ள பிரபலங்கள், வெற்றியாளர்களில் அந்த குறிப்பிட்ட குணம் இல்லாத நபர்களை மட்டும் கண்டுபிடித்து எழுதிக் கொள்ளவேண்டும். சான்றாக நான் பொய்யே சொல்லமாட்டேன், ஆனால் எனக்குத் தெரிந்து பெரிய வெற்றி அடைந்திருக்கும் குப்புசாமி, கந்தசாமி, கோவிந்தசாமி மூன்று பேரும் வாயைத் திறந்தாலே அண்டப்புளுகு ஆகாசப்புளுகுதான் கொட்டும். அடுத்து, நான் ஒரு வேலையைக் கையில் எடுத்தால் இரவு, பகல் பார்க்காமல் உழைப்பேன். ஆனால் என்னுடைய மேனேஜருக்கு வேலை செய்வது என்றாலே சோம்பேறித்தனம், பக்கத்து வீட்டு பரமேஸ்வரனும் அப்படித்தான்.


முக்கியமான விசயம், இங்கே உங்களுடைய மேனேஜர் மீது பரமேஸ்வரன் மீது குறை சொல்வது நம்முடைய நோக்கம் இல்லை. உங்களிடம் இருக்கும் ஒரு நல்ல குணம், இன்னொருவரிடம் இல்லை, ஆனாலும், அவர் வெற்றியடைந்திருக்கிறார், அப்படியானால், உங்களால் அவரைவிட இன்னும் பெரிதாக வளரமுடியும், இல்லையா ? இந்த நம்பிக்கைதான் முக்கியம். இந்த சிறிய பயிற்சியைச் செய்து முடித்தபிறகு உங்களுடைய பட்டியலை முன்னால் வைத்துக்கொண்டு யோசித்துப்பாருங்கள்.

உங்களிடம் ஐந்து விசேஷ குணங்கள் இருக்கின்றன. அந்தக் குணங்கள் இல்லாத வேறு பலர், பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள், அவர்களோடு ஒப்பிடும்போது இந்த நல்ல குணங்கள் கொண்ட நீங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இல்லையா ? இப்படிக் கண்ணெதிரே ஆதாரத்தை வைத்துக்கொண்டு யோசிக்கிறபோது, நம் மனம் தானாக விரிவடைகிறது, தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.


எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள் யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்களுடைய கண்களைப் பார்த்துப் பேசுங்கள். நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்தச் சுறுசுறுப்பு, உற்சாகம் உங்களுடைய செயல்வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

எந்தக் கூட்டத்திலும், அடுத்தவர்கள் பேசட்டும் என்ற காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாக இருக்கட்டும். எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

2 கருத்துகள்:

  1. திரு பாலமுருகன், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    சிறந்த கருத்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள் யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்களுடைய கண்களைப் பார்த்துப் பேசுங்கள். நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்தச் சுறுசுறுப்பு, உற்சாகம் உங்களுடைய செயல்வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

    எந்தக் கூட்டத்திலும், அடுத்தவர்கள் பேசட்டும் என்ற காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாக இருக்கட்டும். எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.
    Very Very Good.....Good.... Words.
    s.a.abdul azeez www.pudumalar.blogspot.com

    பதிலளிநீக்கு