செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

“தி டிப்டெட்என்ட்”


ஒரு விசயம் கடினமாக இருக்கும் என்றால் இது நமக்கு வேண்டாம் என்று விட்டுடக்கூடாது. அதையே திரும்பத் திரும்ப நல்லா பயிற்சி செய்யவும். இந்த அறிவுரையைத்தான், உடைத்துப்போடுகிறார் தன்னுடைய “தி டிப்டெட்என்ட்” என்ற புத்தகத்தில் சேத் கோடின் என்ற புகழ் பெற்ற சுயமுன்னேற்ற எழுத்தாளர். எல்லா சந்தர்ப்பங்களிலும் தடைகளை மீறிச் செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சில சமயங்களில் விலகிச் செல்வதும் கூட புத்திசாலித்தனம்தான் என்று அடித்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

ஆக, நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் தடைகள் எதிர்ப்பட்டால், சில சமயங்களில் இன்னும் கடினப்பட்டு உழைக்க வேண்டும், வேறு சில சமயங்களில் விட்டு விலகிவிட வேண்டும். இந்த வித்தியாசத்தை துல்லியமாக புரிந்துகொள்வதுதான் வெற்றிக்கான சூத்திரம் என்கிறார் சேத் கோடின்.

எந்த ஒரு வேலையையும் நாம் தொடங்குகிறபோது நமக்குள் ஒரு பெரிய உற்சாகம் இருக்கும். இதை முடித்தே தீரவேண்டும் என்கிற ஆவேசத்துடன் சுறுசுறுப்பாக வேலை பார்ப்போம். புதுப்புது விசயங்களை கற்றுக் கொண்டு அதிவேகமாக முன்னேறுவோம். ஆனால் ஒரு கட்டத்தில் சுலபமான விசயங்கள் தீர்ந்துபோய், கொஞ்சம் கடினமான சமாசாரங்கள் எதிர்ப்படும். இதற்கு மேலும் இந்த வேலையை செய்வது அவசியமா என்று கூடத் தோன்றும். அதை சமாளிக்க பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என்கிறார் சேத் கோடின்.

இப்போது, உங்கள் முன் இரண்டு விருப்பங்கள் உள்ளன. அவற்றைத்தான் டிப் டெட்என்ட் என்று அழைக்கிறார் சேத்கோடின். டிப் என்றால் மிக கடினமான தடை. ஆனால் அப்போது இன்னும் கூடுதல் உழைப்போடு அதை எதிர்த்து முன்னேறிச் சென்றால் மூழ்கி முத்தெடுத்துவிடலாம்.

டெட்என்ட் என்பது இதற்கு நேர் எதிர். இங்கேயும் நீங்கள் ஒரு பெரிய தடையைச் சந்திக்கிறீர்கள். ஆனால், அந்த இடத்தில் நீங்கள் எவ்வளவுதான் முட்டி மோதினாலும் பலன் இருக்காது. முன்னேற வாய்ப்பே இல்லாத முட்டுச் சந்து. அதற்காக, கடினம் வரும்போதெல்லாம் அது முட்டுச்சுவர் என்று நினைத்து விலகிவிடக்கூடாது. அது சுத்த முட்டாள்தனம். ஓர் இடத்தில் பத்து அடி தோண்டி விட்டு தண்ணீர் வரவில்லை என்று நம்பிக்கை இழந்து, இன்னோர் இடத்தில் இன்னொரு பத்து அடி தோண்டி, மீண்டும் நம்பிக்கை இழப்பதைவிட, முதல் இடத்திலேயே இன்னும் ஆழமாக இருபது அடி தோண்டியவர்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இல்லையா?

ஆக, எப்போது விலகவேண்டும், எப்போது இன்னும் தீவிரத்துடன் போராடவேண்டும் என்கிற வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது அவசியம். நீங்கள் கேள்விப்பட்ட வெற்றியாளர்கள் எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் இதுமாதிரி பல தடைகளைச் சந்தித்திருப்பார்கள். டெட்என்ட் களைவிட்டு விலகி டிப்களை எதிர்த்துப் போராடி முன்னேறியிருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால்;

* தேவையில்லாத விசயங்களில் அதிக நேரம் செலவிடுவதன் மூலம் நாம் நம்முடைய உழைப்பை வீண்டிக்கிறோம்.

* பயனில்லாத முயற்சிகளை சீக்கிரத்தில் அடையாளம் காணவேண்டும், தயவு தாட்சண்யமே பார்க்காமல் அவற்றை விலக்கிவிடவேண்டும்.

* அதே நேரம் நமக்கு எது அவசியம் என்பதில் தௌ¤வாக இருக்க வேண்டும், எங்கே நம்முடைய முயற்சியைச் செலுத்தினால் வெற்றி உறுதிப்படும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப உழைப்பைப் புத்திசாலித்தனமாகச் செலவிட வேண்டும்.

இந்த மூன்று அம்சங்களை முக்கியமாக சொல்கிறது இந்தப் புத்தகம். நீங்களும் பழகிப் பாருங்கள் வெற்றி நிச்சயம்.!

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக