செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

ஆடை அலங்காரம்...புதிய கலாச்சாரம் !


என்னதான் பியூட்டி பார்லருக்குச் சென்றாலும் ஒருவருடைய இளமைத் தோற்றத்தை தீர்மானிப்பது அவர் அல்லது அவள் அணியும் ஆடைகளே. ஒருவருடைய நிறத்துக்கும், உருவத்துக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்தால், அவர் அதிக வயதுடையவராக இருந்தாலும், குறைந்த வயதுடையவர் போல இளமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பார் என்கிறார்கள் ஆடை வடிவமைப்பு வல்லுநர்கள்.

இன்றைக்கு பெரும்பாலானவர்கள் விரும்புவது தொளதொளவென்று இல்லாமல், அளவு குறைவாக இருக்கும் ஆடைகளைத்தான். முட்டியைத் தொடும் சட்டையும், தரையைக் கூட்டும் பேண்டும் அணிந்த காலம் மலையேறி போய்விட்டது. அதேபோல் பெண்களும் முழங்கை வரை நீளும் ரவிக்கையையும், 8 கஜம் புடவையையும் மறந்து, ஸ்கர்ட், டி-சர்ட், டாப்ஸ், கவுன் என்று மாறிவிட்டனர். அதிலும் தற்போது மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் டி-சர்ட் மற்றும் டாப்ஸ் என்று ஆடைகளின் அளவு குறைந்து கொண்டடே வருகிறது.

தற்போது நீங்கள் விரும்பும் பிரபல கம்பெனிகளின் ஆடைகளை தவணை முறையில் பணம் கொடுத்து வாங்கும் வசதியும் வந்துவிட்டதால், உங்களுக்கு விருப்பமான ஆடைகளை வாங்குவதற்குத் தடையேதுமில்லை. விழாக்காலங்களில் சேலை அணிவதை பெரும்பாலான இளம்பெண்கள் விரும்புகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சேலை கட்ட தெரியாததால் அவர்களின் அம்மாக்களே சேலை கட்ட உதவி செய்கின்றனர். இவர்களின் கவலையைத் தீர்க்கும் விதமாக தற்போது ரெடிமேட் சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதை 2 நிமிடத்திலேயே அணிந்து கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

கொசுவம், மடிப்பு என எந்நத் தொந்தரவும் இல்லாமல், ஏற்கனவே மடிக்கப்பட்டு பின் செய்யபட்டிருக்கும். இது தவிரவும், இரண்டு பக்கமும் அணிந்து கொள்ளக்கூடிய ரிவர்சபிள் சேலைகள் வஸ்திரகலா பட்டு என்று புதிய வடிவமைப்புடன் கூடிய சேலைகளைத் தயாரிப்பதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. ஆடை உலகில் ஒவ்வொரு நாளும் புது புது மாற்றங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பாவாடை சல்வார் கம்மீஸ், சுடிதார் ஆகியவற்றில் உள்ள நாடாவுக்கு பதிலாக எலாஸ்டிக் வைத்து பயன்படுத்துவது.

தற்போது கர்ப்பமான பெண்களுக்கான உடைகளும் வடிவமைக்கப்படுகின்றன. கர்ப்பிணிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் அவர்களின் உடலில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இவர்களுக்கென்று தனி ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் அணிவதற்கு எளிதாகவும், உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழ்ச்சி அடைவதாகவும் இருக்கும். சிந்தடிக், காட்டன் போன்ற துணிகளில் இவை தயாராகின்றன. இவற்றில் பிரிண்ட் மற்றும் எம்ராய்டரி செய்யப்பட்டவை பிளெய்ன் என பல வகைகள் உள்ளன.

இளசுகளை மட்டுமல்லாமல், நடுத்தரவயதினரையும் ஈர்த்துள்ள ஆடைகளுள் ஒன்று ஜீன்ஸ். அணிவதற்கு எளிதாக உள்ளது. துவைக்காமல் பயன்படுத்தலாம். உடற்கட்டை நன்கு எடுத்துக்காட்டுகிறது போன்ற காரணங்களால் ஜீன்சை விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. முதலில் ஆண்கள் மட்டும் பயன்படுத்தி வந்த ஜீன்ஸ், இன்று பெண்களாலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பூட்கட், ஸ்ட்ரெய்ட் பிட் என பல வகையான ஜீன்ஸ்கள் உள்ளன. பெண்களுக்கென்றுத் தனியாக ஜீன்ஸ்கள் வடிவமைக்கப்படுகின்றன.

தற்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது பருத்தி, வாழைமட்டை போன்ற இயற்கை பொருட்களிலிருந்து நூல் தயாரித்து, அதன் மூலம் ஆடைகள் நெய்யபடுகின்றன. இந்த மாதிரியான ஆடைகளை தற்போது பெரும்பாலானவர்கள் விரும்பி வாங்குகின்றனர்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து:

  1. annbu nanbare thanglen thalam miga nandraga ulladhu...
    V. Balamurugan
    System admin,
    P.T.Lee Chengalvaraya Naicker College of Engineering & Technology,
    Oovery, Kancheepuram.

    பதிலளிநீக்கு