செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, ஜனவரி 07, 2012

ஆதலால் படியுங்கள்!


‘மகாத்மா’ என்ற பத்திரிகையைத் தொடங்கியவரும் ‘கேசரி’ என்ற மகாராஷ்டிரப் பத்திரிகையையும் ‘மராட்டா’ என்ற ஆங்கிலப் பத்திரிகை யையும் ‘கீதாரகசியம’ என்ற நூலை மராட்டிய மொழியில் எழுதியவரும் ‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கியவருமான சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பாரதம் விடுதலை அடைந்த பிறகு நீங்கள் என்ன பொறுப்பை எடுத்துக் கொள்வீர்கள்? உள்துறையா? என்று கேள்வி கேட்டபோது இந்த அரசியலே எனக்குப் பிடிக்காது; பாரதம் விடுதலை அடைந்த பிறகு கால்குலஸ் பற்றி ஒரு கணிதப் புத்தகம் எழுத நேரத்தை ஒதுக்குவேன் என்றார்.


1952-ல் இஸ்ரேலின் முதல் ஜனாதிபதி காலமானபோது நோபல் பரிசு பெற்றவரும் அணுகுண்டைக் கண்டுபிடித்த பிரசித்தபெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை ஜனாதிபதியாகப் பதவியேற்க அழைத்த போது ‘நான் பௌதிக உலகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்புகிறேன். மனிதர்களை ஆட்சி செய்ய விரும்பவில்லை’ என்றார். சிறுவயதில் வறுமையும் கடனும் வாட்டியெடுக்க பத்திரிகை ஆசிரியராகி விடாப்பிடியாக படித்தும் எழுதியும் பிற்காலத்தில் அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை எழுத்தாளராகப் புகழ்பெற்றவர் மார்க் ட்வைன்.

அரசியல் சுழியில் சிக்கிக் கொள்ளாமல் கவிஞராகவோ, எழுத்தாளராகவோ இருந்திருந்தால் நிறைந்த மனநிம்மதியுடன் வாழ்ந்திருப்பேன் என்றார் மைசூர் புலி திப்புசுல்தான். தாம் ஆண்ட 7 ஆண்டுகளில் பெரும் பகுதியை போர்க்களத்திலேயே கழித்த இவர், இலக்கியத்தில் ஆர்வம் மிக்கவர். அறிஞர்களுக்கு ஊக்கமளித்து ஏராளமான நூல்களை இயற்றச் செய்தார். மிக உயர்ந்த கவர்னர் ஜெனரல் பதவியை வகித்த ராஜாஜி நான் செய்த பணிகளில் சிறந்ததாக நான் கருதுவது ராமாயணத்தையும் பாரதத்தையும் காந்திஜிக்கு அறிமுகப்படுத்தியதைதான் என்றார்.

புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி ஆய்வு நூலகத்தை ஏற்படுத்தி மகிழ்ந்தவர் முதல்வர் கருணாநிதி. இவர்கள் எல்லாம் படிப்பதையே விரும்பியவர்கள். ஆதலால் படிப்பதை நாமும் பழக்கிக் கொள்வோம்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக