செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், நவம்பர் 21, 2011

அண்ணா நூலகம் இடம் மாறுகிறது... !


இந்தியாவிலேயே நவீன வசதிகள் கொண்ட முதல் நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் எட்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்தான். 172 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ள இந்த நூலகம்தான் சிங்காரச் சென்னையின் தற்போதைய லேண்ட் மார்க். சுமார் மூன்று லட்சத்து 75 ஆயிரம் நூல்களுடன் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது இந்த நூலகம்.

ஆகஸ்ட்- 16, 2008 ல் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது, மூன்று லட்சத்து 75 ஆயிரம் சதுர அடியில்,எட்டுத்தளங்களோடு பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது. இந்த நூலகம் தேசிய விடுமுறை நாட்கள் தவிர, மற்ற எல்லா நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். இந்த பெருமைமிகு அண்ணா நூலகத்தினை அவரது பிறந்த தினமான செப்டம்பர்-15,2010 அன்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.


கட்டடத்தின் நுழைவாயிலில் ஐந்து அடி உயரத்தில், வெண்கலத்தினால் செய்யப்பட்ட, உட்கார்ந்தபடி புத்தகம் படிக்கும் அண்ணாதுரையின் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அ முதல் ஃ வரை அனைத்திலும் சர்வதேசத் தரம். எட்டுத் தளங்களைக் கொண்ட இந்நூலகத்தில் ஒவ்வொரு தளமும் ‘ஏ’ பிரிவு மற்றும் ‘பி’ பிரிவு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளுகுளு வசதியோடு கட்டப்பட்டுள்ளது.

நூலகத்தின் அனைத்துத் தளங்களிலும் சுற்றுச் சூழலுக்கு தீங்குவிளைவிக்காத சி.எஃப்.எல். விளக்குகள் பொறுத்தப்பட்டுளளன. இளநீலநிற, கண்ணாடி சுவர் வழியே சூரிய வெளிச்சம் முழுமையாக கட்டடத்திற்குள்ளே செல்லும் படியாக வடிவமைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘பசுமை கட்டடமாக’ இருப்பது இதன் மற்றொரு சிறப்பு.!

அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 493 இடங்களில் ரகசிய கேமராக்கள் (சி.சி.டி.சி.,) பொருத்தப்பட்டுள்ளன. எல்லா தளங்களிலும் யார் நுழைந்தாலும், வெளியே சென்றாலும் படமாக்கப்படும். செக்யூரிட்டி அதிகாரிகள் இந்த 493 கேமராக்கள் படமாக்குவதை தொடர்ந்து கண்காணித்து வருவர். அதோடுமட்டுமில்லாமல், நூலக கட்டடத்தின் எல்லா தளங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் விசேஷ கேமராக்கள், நூலகம் மூடிய பிறகு, இருட்டில் யாராவது அசைந்தால் கூட படம் பிடித்துவிடும். நூலகத்திற்கு 24 மணி நேரமும் முழுமையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

முதல்தளம் குழந்தைகளுக்கு: குழந்தைகள் உள்ளே நுழைந்ததும் அவர்கள் ரசிக்கும் வண்ணம், ஜங்கிள் புக் மற்றும் கார்ட்டூன் சேனல்களில் வரும் பிரபலமான கதாபாத்திரங்கள் போல் வித்விதமான சித்திரங்கள் சுவர் முழுவதும் காட்சியளிக்கின்றன. குழந்தைகள் சிரமமின்றி அமர்வதற்கும், தாங்களே புத்தகங்களைத் தேர்வு செய்வதற்கும் வசதியாக நாற்காலிகள், மேசைகள், அலமாரிகள் என அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்காகவே முதல் தளத்துக்கு எஸ்கலேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் அழகான மரம் ஒன்றும் உள்ளது. கலை இயக்குநர் தோட்டா தரணியால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை மரம் அது. அந்த மரத்தடியில் பெஞ்ச் அல்லது தரையில் அமர்ந்து குழந்தைகள் புத்தகங்களைப் படிக்கலாம். குழந்தைகளுக்காக தற்போது ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மல்டிமீடியா சி.டி.க்களும், 127 டாகுமெண்டரி சி.டி.க்களும் உள்ளன.

முதல் தளத்தின் மற்றொரு பகுதியில் செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களுக்கான பிரிவு உள்ளது. இரண்டாவது தளம் முழுக்க தமிழ்ப் புத்தகங்களும், மூன்றாவது தளம் முழுக்க ஆங்கில நூல்களும் இடம்பெற்றுள்ளன. அறிவியல், வரலாறு, பொருளாதாரம் ஆகியவற்றில் தொடங்கி புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் உள்ளிட்ட இலக்கிய நூல்கள் என இதுவொரு புத்தகச் சமுத்திரம். நான்காவது தளத்திலும் இதே வகையான நூல்கள்.


சர்வதேச அளவில் புகழ்பெற்ற செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களின் பழைய பதிப்புகள் (Back Issues Of News Papers And Periodicals) ஐந்தாவது தளத்தில் உள்ளன. ஆறாவது தளத்தில் அரசு ஆவணங்கள் வைக்கப்படுகின்றன. இந்நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நூல்கள் ஏழாவது தளத்தில் வைக்கப்படுகின்றன. ஜி.யு.போப், பாரதியார் போன்றோரின் கையெழுத்துப் பிரதிகள், ஓலைச் சுவடிகள், பழங்கால வரைபடங்கள் போன்ற அரிய பொக்கிஷங்கள் எட்டாவது தளத்தில் இடம் பெறுகின்றன. அங்கு டிஜிட்டல் நூலகமும் உண்டு.

மருத்துவம் தொடர்பான ஏராளமான அரிய நூல்கள் இடம்பெறுவது இந்நூலகத்தின் சிறப்புகளில் ஒன்று. மிகவும் விலை உயர்ந்த இத்தகைய மருத்துவ நூல்கள் இந்தியாவில் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தில் மட்டுமே உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மட்டுமே இத்தனை அரிய மருத்துவ நூல்கள் உள்ளன. மொத்தம் 10 ஆயிரம் மருத்துவ நூல்கள் இடம் பெற்றுள்ளன.

1,200 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம் ஒன்றும், 850 பேர் அமரக்கூடிய ஓர் அரங்கமும்,151 பேர் அமரக்கூடிய மினி கான்ஃபரஸ் ஹாலும், 60 பேர் அமரக்கூடிய அரங்கம், 31 பேர் அமரக்கூடிய இன்னொரு அரங்கமும் உள்ளன. வெளிநாடுகளிலிருந்து நிகழ்ச்சிகளுக்கு வரும் அறிஞர்கள் தங்குவதற்காக அதிநவீன தங்கும் விடுதி ஒன்றும் இங்கு உள்ளது. நூலக வளாகத்தில் நட்சத்திர அந்தஸ்துடைய உணவகம் ஒன்றும் செயல்படுகிறது. வட இந்திய, தென் இந்திய உணவு வகைகளும், சைனீஸ் உள்ளிட்ட வெளிநாட்டு உணவு வகைகளும் இங்கு கிடைக்கும். ஒரே நேரத்தில் 170 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு வசதிகள் உள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் அனைத்துத் தீர்ப்புகளும் இந்த நூலகத்தில் கிடைக்கும். தமிழக வழக்கறிஞர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம். ஏனென்றால், இவற்றைப் பெற வேண்டுமானால் ஓராண்டுக்கு 10 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இங்கு அவற்றை இலவசமாகவே படிக்கலாம். சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான அனைத்து நூல்களும் இங்கு உள்ளன. மத்திய அரசு வெளியிடும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இந்நூலகத்தில் கிடைக்கும். இவை சிவில் சர்வீஸ் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது என ஒவ்வொரு மொழிக்கும் ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக ‘தி கார்டியன்’, ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ போன்ற 1,500 சர்வதேச செய்தித்தாள்கள், 11 ஆயிரம் இதழ்களையும் (Journals) வாசிக்கலாம். அவற்றின் பழைய பதிப்புகளையும் இங்கு வாசிக்க முடியும். 95 நாடுகளில் வெளியாகும் 2 ஆயிரம் வார, மாத இதழ்களை (Magazines) வாசிக்கலாம். இந்த ஆன்லைன் புத்தகங்கள் மற்றும் இதழ்கள் அனைத்தையும் கன்னிமாரா நூலகம் மற்றும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நூலகங்கள், தாலுகா நூலகங்கள் ஆகியவற்றிலும் வாசிக்க முடியுமாம்.


ஆன்லைனில் உள்ள செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களை வாசிப்பது மட்டுமின்றி, அவற்றை செவி வழியாகக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கும் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இ-புக்ஸ் எனப்படும் மின்னணு நூல்களையும் வாசிப்பது மட்டுமின்றி, செவி வழியாகவும் கேட்கலாம். கண்பார்வையில் லேசான குறைபாடு உடையவர்கள் புத்தகங்களைத் திரையில் ஓடவிட்டு அதை வாசிக்கும் வசதியும் உள்ளது. தற்போது, ஒரு லட்சத்துக்கும் மேல் இ-புக்ஸ் உள்ளன.

ஆர்.எப்.ஐ.டி., என்ற மைக்ரோ சாதனம், இந்த நூலகத்தில் உள்ள எல்லா புத்தகங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலம் புத்தகங்களை தேடுவது சுலபமாகும். நூலக ஊழியர்களுக்கு தெரியாமல், யாராவது புத்தகங்களை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முயற்சித்தால், இந்த மைக்ரோ சாதனம் காட்டிக் கொடுத்துவிடும்.

வாங்கிப் படித்த புத்தகத்தை திருப்பி தருவதற்காக தாம்பரம், அண்ணா நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் உள்ள பொது நூலகங்களில் இதற்கென்று அமைக்கப்பட உள்ள, ‘ட்ராப் பாக்ஸ்’ மூலம் போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இப்படி போடும் புத்தகத்தின் தகவல் உடனே ஸ்கிரீனில் தெரிந்து விடும்.

நூலகமாக மட்டுமில்லாமல், இதுவொரு கல்வி மையமாகவும் செயல்படுகிறது. சி.ஏ., எம்.பி.ஏ., வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு அந்தந்த துறைகளில் ஏற்பட்டுள்ள தற்கால வளர்ச்சி தொடர்பாக மாஸ்டர் வகுப்புகள் அவ்வப்போது நடைபெறும். உலகின் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த வல்லுநர்கள் வகுப்புகள் நடத்தி சான்றிதழும் வழங்குவார்கள்.

முழுக்க முழுக்க தானியங்கி நூலகமாக இருக்கிறது இந்த அண்ணா நூற்றாண்டு நூலகம். வாசகர்களுக்கு ஏ.டி.எம்.கார்டு மாதிரியான உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. உறுப்பினர்கள் தங்கள் கார்டு மூலம் ‘ஸ்வைப்’ செய்து தாங்களே நூல்களை எடுத்துச் செல்லலாம். திருப்பிக் கொடுக்கும் போது அங்குள்ள பெட்டியில் வைத்துவிட்டுச் செல்லலாம்.


இந்நூலகத்தில் மொத்தம் 550 கணினிகள் வைக்கப்பட்டுள்ளன. நூலகத்தின் நிர்வாகத்துக்காக 230 கணினிகளும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 270 கணினிகளிலும் வாசகர்களின் உபயோகத்திற்காக இன்டர்நெட் வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்காக ஏராளமான சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வயதானவர்களுக்காக எல்லா தளங்களிலும் ஓய்வறைகளும் உண்டு. சற்று நேரம் ஓய்வு எடுக்கலாமே தவிர, அங்கு தூங்குவதற்கு அனுமதி இல்லை.

புதிது புதிதாக வரும் புத்தகங்கள் உடனடியாக காட்சிக்கு வைக்கப்படும். தினந்தோறும் ஒரு கருப்பொருள் (தீம் பேஸ்டு) அடிப்படையாகக் கொண்டு புத்தகங்கள் வைக்கப்படும். பெண்கள் தினம், பெற்றோர் தினம், ஆசிரியர் தினம் என வரும் போது அவை தொடர்பான நூல்கள் வைக்கப்படும். பொங்கல் திருநாள் போன்ற பண்டிகை தினத்தின் போதும் அது தொடர்பான நூல்கள், படங்கள் வைக்கப்படும். இதற்காக ஒரு தனி குழுவே செயல்படுகிறது.

நகரத்துக் குழந்தைகளுக்கு கிராமங்களை அறிமுகப்படுத்தும் வகையில் கிராமத்துப் பண்பாடு, கலாச்சாரம், விளையாட்டு ஆகியவற்றை நூல்கள், படங்கள் மற்றும் வீடியோ மூலம் அறிமுகம் செய்யப்படும். அதுமட்டுமில்ல! பிறந்தநாள், நினைவு நாள் போன்ற தினங்களில் தேசத் தலைவரகள், அரசியல் தலைவர்களது பேச்சுக்கள், அவர்களது சொந்தக் குரலிலேயே நூலகத்தில் ஒலிபரப்பப்படும். இது, இளம் தலைமுறையினருக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

இந்த பெருமை மிகு நூலகத்தைத்தான் தமிழக அரசு குழந்தைகள்நல சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என அறிவித்திருக்கிறது. இது நியாயமா என்பதை நீங்களே கூறுங்கள்.!

கருத்துகளை வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக