செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

புதன், அக்டோபர் 27, 2010

மக்கள் தொகை கணக்கெடுப்பு!


இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட மக்களின் புள்ளி விவரங்களை பட்டியலாக தருவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவுகிறது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்கி வைத்தவர் (கி.பி.320) சந்திர குப்¢த மௌரியர். அமைச்சராக இருந்த சாணக்கியரின் ஆலோசனைப்படி விவசாயம், உற்பத்தி, இளைஞர்களின் எண்ணிக்கை என விரிவாகக் கணக்கெடுப்பு செய்து பதிவேடுகள் பராமரிக்கப்பட்டன. பிரிட்டிஷ் காலத்தில் 1824-ல் அலகாபாத் நகரிலும், 1827-ல் பனாரஸ் நகரிலும், 1830-ல் டாக்காவிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதிகாரபூர்வமான கணக்கெடுப்பு 1860-ல் தொடங்கி 1871-ல் நிறைவுற்றது. பகுதி பகுதியாக நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பு ஒன்றாக்கப்பட்டு ஆங்கிலேயர் ஆட்சியில் 1872 ஆம் ஆண்டு, முதல் முறையாக வெளியிடப் பட்டது. அதன்பின் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக் கெடுப்பு எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் எடுக்கப்பட்ட சில மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள், பல்வேறு அரசியல் காரணங்களால் பாதிக்கப்பட்டதும் உண்டு. முதல் முதலில் கடந்த 1861 ஆம் ஆண்டு எடுக்கப்பட இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் சுதந்திர போர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 1981-ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை பதிவேடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. பின், 1921 மற்றும் 1931 ஆகிய ஆண்டுகளில் எடுக்கப்பட இருந்த கணக்கெடுப்பு ஒத்துழையாமை இயக்கம் காரணமாக பாதிக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டம், தேசப் பிரிவினை, போர், நிலநடுக்க காலங்களில்கூட திட்டமிட்டப்படி கணக்கெடுப்பு நடந்தது. ஏதேனும் ஒரு பகுதியில் கணக்கெடுப்பு நடத்தும் நிலை இல்லையெனில் இடைக்கணிப்பு முறையில் மக்கள் தொகை தீர்மானிக்கப்பட்டு பட்டியலில் சேர்க்கப்படும்.

கடந்த 1941 ஆம் ஆண்டு நடைபெற இருந்த கணக்கெடுப்பு இரண்டாம் உலகப்போர் காரணமாக நிறுத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின்னும் கூட 1981 ஆம் ஆண்டு அசாமிலும், 1991 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரிலும் சில அரசியல் காரணங்களுக்காக கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டது. 15-வது கணக்கெடுக்கும் பணி 2010 ஆம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. நாடு முழுவதும் ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் உள்பட 25 லட்சம் பேர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். ஒரு அலுவலர் 120 முதல் 150 வீடுகள் அல்லது 600 நபர்கள் வரை கணக்கெடுப்பார். இந்த கணக்கெடுப்புப் பணிக்கு ரூ.2209 கோடியும், பதிவேடு தயாரிக்கும் பணிக்கு ரூ.3540 கோடியும் செலவிடப்படட்டது.


மற்ற ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு போல் அல்லாமல் இம்முறை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான தகவல்களும், இந்த கணக்கெடுப்பு பணியின் போது எடுக்கப்பட்டது. இதன் மூலம், உள்நாட்டு பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள் போன்றவற்றிற்கு ஆதாரமாக தேவைப்படும் அடையாள அட்டைகள் தயாரிக்க முடியும்.

இந்தியாவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு மாபெரும் பணியாகும். கடந்த 1948 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து சட்டம் இயற்றப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின், முதல் முறையாக கடந்த 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின் 1969 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த சட்டப்படி பிறப்பு மற்றும் இறப்பு குறித்து பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டமும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒருங்கே நடத்தப்பட்டது.

இதையடுத்து, 12 மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் உள்ள 31 லட்சம் மக்களிடம் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்றன. தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது என்ன?
இதனால் பயன் என்ன?

பிறப்பு, இறப்பு, நோய், பொருளியல், மக்கள் தொடர்பான விவரங்கள், மக்களின் சமுதாய வாழ்க்கை, புள்ளி விவரங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிந்து கொள்ளமுடியும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பால், இந்தியாவின் பொருளாதார நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம், மக்கள்தொகை கணக்கெடுக்கும் ஆணையர் மற்றும் பதிவாளர் அலுவலகம் ஆகியவை மக்கள் தொகை கணக்கெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ஏஜென்சிகள், அறிஞர்கள், தொழில் நிறுவன அதிபர்கள் உள்ளிட்ட பலருக்கும் தேவையான விவரங்கள் கிடைக்கும்.

அரசியல் அமைப்பு அளித்துள்ள இடஒதுக்கீடு, நாடாளுமன்ற தொகுதிகள், சட்டசபை தொகுதிகள், உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஆகியவை மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டே அமைக்கப் படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம், அமல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளில் ஏற்பட்ட முன்னேற்றம், எதிர் காலத்தில் செய்ய வேண்டிய திட்டங்கள் ஆகியவைகளை அரசு அறிந்து கொள்ள உதவுகிறது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக