செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, நவம்பர் 19, 2010

வாழும் வரலாறு ஆங் சான் சூச்சி !


மியான்மரின் விடுதலைக்கு வித்திட்ட ஆங்சானின் மகள்தான் ஆங்சான் சூச்சி. ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்ட ஆங்சானை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இரண்டு வயதிலேயே தந்தையை இழந்த சூச்சி, இ¢தியாவிலும், இங்கிலாந்திலும் தனது படிப்பைத் தொடர்ந்தார்.

படிப்பை முடித்து லண்டனில் திருமணமாக இரண்டு குழந்தைகளுடன் வசித்த வந்த அவர், உடல் நலமில்லாத தனது தாயை பார்க்க மியான்மர் வந்தபோது சுதந்திரத்திற்கான போராட்டம் வெடித்தது. சுமார் 5000 போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொங்கி எழுந்த சூச்சி ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக களமிறங்கினார். இவரின் ஆக்ரோஷமான செயல்பாட்டால் ராணுவம் திணறிப் போனது.

1990-ல் பொதுத் தேர்தல் நடத்த ஒப்புக் கொண்ட போது சூச்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்தனர். அப்படியும் 82 விழுக்காடு வாக்குகளுடன் சூச்சியின் சுதந்திரத்துக்கான தேசியக் கட்சி வெற்றி பெற்றபோது அந்தத் தேர்தலை, ராணுவம் ஏற்றுக் கொள்ளவில்லை. சூச்சி அவரது வீட்டிலேயே தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.

1989-ல் முதன் முறையாகக் கைது செய்யப்பட்டது முதல் மூன்று முறை விடுதலை செய்து உடனே மீண்டும் கைது செய்யப்பட்டுவிட்டார் சூச்சி. யாங்கூனை விட்டு வெளியே போகக் கூடாது என்று ராணுவம் தடை விதித்த போது, ஆறு நாள்கள் காரிலேயே இருந்து போராடிக் கைதானவர்.


ஆங்சானின் கணவர் மைக்கேல் ஆரிஸ் புற்றுநோய் காரணமாக 1999-ல் இறந்தார். அவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த கல்வியாளர். அவர் இறப்பதற்கு முன்னால் தன்னுடைய மனைவியைப் பார்க்க விரும்பினார். ஆனால் அவருக்கு விசா தருவதற்கு மியான்மர் அரசு மறுத்துவிட்டது. கணவர் இறந்ததற்கு கூட அனுமதி வழங்காத கொடுமைகள் எல்லாவற்றையும் சொல்லி மாளா.

மியான்மரின் ஸ்தாபகர் என்று கொண்டாடப்படும் சூச்சி கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகச் சிறைவாசம் செய்த பின்னர் நவம்பர் 14 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு அவரைச் ஆளும் ராணுவ அரசு சுதந்திரமாக நடமாடவிடும் என்பது யாருக்கும் தெரியாது.

ராணுவ சர்வாதிகாரிகளை எதிர்த்து கடந்த இருபது ஆண்டுகளாக போராடி வரும் ஆங்சான் சூச்சி நோபல் பரிசு பெற்றவர். ஆனால் தான் எதிர்கொண்ட சவால்கள், துன்பங்கள் எல்லாம் ஒருநாள் நிச்சயம் வெல்லக்கூடும் என்ற நம்பிக்கையோடு செயல்படுகிறார். உலக வரலாற்றில் நெல்சன் மண்டேலாவுக்குப் பிறகு அதிக காலம் அரசியலுக்காகச் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் ஆங்சான் சூச்சிதான்.! ஆனால் சுதந்திரம், ஜனநாயகம் என்று மார்தட்டிக் கொள்ளும் உலக நாடுகள், மியான்மரில் நடக்கும் அடக்கு முறைகளை வேடிக்கை பார்ப்பது நியாயமா?

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்களுக்காக பாலமுருகன்...

வியாழன், நவம்பர் 18, 2010

உண்மையே கடவுள்.!


நாராயணமூர்த்தியின் வெற்றி பயணம் பத்தாயிரம் ரூபாயில் தொடங்கியது. பொறியியல் பட்டதாரியான நாராயணமூர்த்தி, தனது நண்பர்கள் ஆறு பேரோடு சேர்ந்து இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார்.

1981-ல் சொற்பமான முதலீட்டில், மாபெரும் கனவுடன் தொடங்கப்பட்ட இன்போசிஸ் இன்று, இந்திய ஐ.டி. துறையின் மதிப்புமிகு பெயராக இருக்கிறது. தொழில் முனைவோராக வேண்டும் என்ற ஆர்வத்தை பலருக்கு ஏற்படுத்தியிருக்கும் இவரது சொல்லும், செயலும் முன்னேற்றத்தின் பாதையை உணர்த்தக் கூடியவை. நேர்மையின் அடையாளமாகவும் அறியப்படும், நாராயணமூர்த்தி பேட்டிகளிலும், உரைகளிலும் தனது நம்பிக்கைகளையும், வெற்றிக்கான வழிகளையும் உற்சாகத் தோடு பகிர்ந்து கொள்வார். அவற்றில் நமது வெற்றிக்கு உதவும் ரகசியங்கள் சில...

 100 விழுக்காடு சுதந்திரச் சந்தையின் ஆதரவாளன் நான். ஆனால், என்னை ஒரு இதயமுள்ள முதலாளி என்றே அழைத்துக் கொள்வேன்.
 முதலாளித்துவம், மார்க்சியம் இரண்டுமே மனித குலத்திற்கு தொண் டாற்றவே பிறந்தது. பொறுப்புள்ள முதலாளித்துவம், செல்வத்தை உருவாக்கி கீழ் நோக்கி பாயச் செய்கிறது.

 தொழில் முனைவோரின் பயணம் என்பது மாராத்தானைப் போல நீண்டது. உண்மையே கடவுள். தொடர்ந்து கற்பதே எங்களின் வேதம்.

 கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவ வசதி, உபரி வருமானம் கொண்ட வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்றால், நாமும் சீனாவைப் போல முதலில் மலிவு விலை உற்பத்தியை தொடங்கி பின்னர் பெரிய அளவிலான உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்

 உலகமயமாதல் என்பது என்னைப் பொறுத்த வரை மலிவான இடத்திலிருந்து பொருள்களை வாங்கி, சிறந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தி, குறைந்த செலவில் உற்பத்தி செய்து, தடைகளற்ற சந்தையில் விற்பதாகும்.

 நாம் எல்லோருமே யாரோ வைத்த மரங்களின் கனிகளை சுவைத்து வளர்ந்திருக்கிறோம். இப்போது, வருங்கால தலைமுறை சுவைப்ப தற்கான கனிகளை தரும் தோட்டத்தை உருவாக்க வேண்டியது நம்முடைய கடமை.

 சமூக சிக்கலை தீர்ப்பதில் அக்கறை இல்லாததே வளர்ச்சியை தடுக்கிறது. பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோர் தன்மையே வறுமையை போக்குவதற்கான வழியாகும்.

 சமூக நலனை விட தனிநபர் மற்றும் குடும்ப நலனை முக்கியமாக கருதுவதே வசூலுக்கான காரணம். மேற்கில் இந்த அளவுக்கு ஊழல் கிடையாது.

 உழைப்பை மதிப்பது மேற்கத்திய நாடுகளில் பழக்கமாக இருக்கிறது. அங்கே இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வேலையை பெருமையாக கருதுகின்றனர். இந்தியாவில் மட்டும்தான் ஒரு சில வேலைகளே கவுரமாக கருதப்படுகின்றன.

 அங்கீகாரம் மதிப்பை தேடித் தருகிறது. மதிப்பு அதிகாரத்தை தருகிறது. அதிகாரம் பெறும்போது பணிவுடனும், பெருந்தன்மை யோடும் நடந்து கொள்வது ஒரு நிறுவனத்தின் மதிப்பை உயர்த்துகிறது.

 வேறுபாடு என்பது இயல்பானது. பரஸ்பரம் மதிப்பு கொண்டவர்கள் ஒரே குழுவாக செயல்படும்போது மேற்கொள்ளப்படும் பணி மேம்படும். இன்போசிஸில் உணர்ந்த அனுபவம் இது.

 நிறுவனங்களுக்கு சமூகத்திற்கு சேவை செய்யும் கடமை இருக்கிறது. தனது சமூகத்திற்கு பங்களிப்பு செலுத்தாத எந்த ஒரு நிறுவனமும் நீடித்த வளர்ச்சியை பெற முடியாது. நிறுவனங்களே மனமுவந்து இத்தகைய சேவையில் ஈடுபட வேண்டும். எல்லா விசயங்களிலும் ஒருவர் நம்பிக்கை உள்ளவராக திகழ வேண்டும். இத்தகைய அடிப்படையை கொண்ட நிறுவனங்கள் முன்னேறுகின்றன.

 தன்னை விடவும் அதிகமாக சாதித்தவர்களை மதித்து நடப்பதே முன்னேறிய சமூகத்தின் அடையாளமாகும். இந்தியா போன்ற நாட்டின் முதலாளித்துவத்தை ஏற்புடையதாக மாற்ற வேண்டும். ஏழைகள் மீது பரிவு கொள்வது முக்கியமானதாகும்.

 அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். அவநம்பிக்கை உற்சாகத்தை உறிஞ்சி எதிர்மறையான சிந்தனைகளை வளர்த்துவிடுகிறது. புலம்பலில் இருந்து விடுபட்டு செயலில் இறங்குங்கள். முன்னனி இடத்தை பிடிக்க முதலில் செயல்படுங்கள்.

 சொந்த நலனை விட பொது நலனுக்கு முன்னுரிமை தருவது நீண்ட கால நோக்கில் நல்ல பயனைத்தரும். நல்ல மனிதராக இருந்தால் மட்டும் போதாது. நல்ல குடிமகனாக இருப்பதும் முக்கியம்.

 எங்கே தொடங்குகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல. எதனை, எவ்வாறு கற்றுக் கொள்கிறீர்கள் என்பதே முக்கியமானது. கற்றுக் கொள்ளும் திறன் உயர்வாக இருந்தால் வளர்ச்சியும் உறுதியாக இருக்கும். அதன்பிறகு உயர்ந்த இடம் தானாக கிடைக்கும்.

 நேர்மை, கடின உழைப்பு மற்றும் சிறப்பு ஆகியவற்றை கொண்ட சூழலை உருவாக்குங்கள். நீண்ட நேரம் உழைப்பது, ஊழியருக்கும், நிறுவனத்திற்கும் ஏற்றதல்ல.

 சமூக உணர்வை ஏற்படுத்தி மிகச் சிறந்தவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். நேர்மையோடு துணிச்சலாக செயல்படுங்கள். கற்பனை ஆற்றல் மற்றும் மனநிலை மற்ற மூலப் பொருட்களை விட முக்கியமானது.

 ஒரு அளவிற்கு மேல் ஒருவருடைய செல்வமானது, சமூகத்தில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பாக கருதப்பட வேண்டும்.

 எப்போதும் உண்மையை நாடுங்கள். அயல் நாடுகளின் முன்னேற்ற ங்களில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். பள்ளி போன்ற உங்கள் வளர்ச்சிக்கு வித்திட்ட அமைப்புகளுக்கு பதில் உதவி செய்யுங்கள்.

 எளிமை, மன உறுதி மற்றும் முன்னுதாரணமாக திகழ்வதன் மூலம் மகாத்மா காந்தி தலைமை பண்புக்கான உறைகல்லாக விளங்குகிறார். அறிவு சார்ந்த நிறுவனங்களின் தலைமையில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

 24 மணி நேரமும் உழைப்பது சாத்தியம் இல்லை. நடுவே குட்டித் தூக்கம் போடுங்கள். அது புத்துணர்ச்சியை அளிக்கும். உங்கள் நிறுவனத்தை நேசிப்பதை விட வேலையை நேசியுங்கள். பயணத்தை அனுபவியுங்கள். இலக்கை அல்ல!

நாராயணமூர்த்தியின் கருத்துகள் எவரையும் ஊக்கம் பெற வைத்துவிடும். நேர்மையையும், நாட்டு நலனையும் பிரதானமாக வலியுறுத்துபவர். அதனால்தான் அவர் தனித்து நிற்கிறார்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்களுக்காக பாலமுருகன்...

உண்மை மட்டும்தான் ஜெயிக்கும்.!


‘உலகின் ஒட்டுமொத்த ஹீரோ அவர்தான்’-அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது உதிர்த்த வார்த்தை இது. ‘வருங்காலச் சமூகம் இவரை புத்தருக்கும் ஏசுவுக்கும் இணையாக வைத்துப் பேசும்!’ சுதந்திர இந்தியாவுடைய முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட்பேட்டன் பிரபு மகாத்மா காந்தியைப் பற்றிச் சொன்ன வாசகம். ஆம் ஒவ்வொரு நாடும் காந்தியைப் பற்றி வியந்து பேசுகின்றன.


காந்தி மறைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் சென்று விட்டதால், கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் அவரைப் பற்றிக் கதைகளில் மட்டுமே கேட்டிருக்கின்றன. அவை நிஜமா, பொய்யா என்று நம்ப முடியாமல் சிரமப்படும் அளவுக்கு நேர்மையானதொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அவரின் வாழ்க்கைப் பாடத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை:

முடிவெடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஒருவருக்காக மட்டுமல்ல. எல்லோரு க்காகவும்.! நன்றாக யோசித்து ஒரு செயலில் இறங்க வேண்டும். ஆனால் அப்படி இறங்கிய பிறகு சலனங்கள் கூடாது. பலன்களை எண்ணிக் கவலைப்படக் கூடாது.

ஒத்துழையாமை என்பது அற்புதமான ஆயுதம். நமக்குப் பிடிக்காதவர்கள் மீது கல் எடுத்து வீசுவதை விட அவர்களைப் புறக்கணித்துப் பாருங்கள். தானாக உங்கள் வழிக்கு இறங்கி வருவார்கள். உங்களுடைய நண்பர் அல்லது உறவினர் அல்லது உங்களுக்கு பிடித்தவர் என்பதற்காகச் சிலருக்கு மட்டும். அதிக முக்கியத்துவம் தந்து பழகாதீர்கள். எல்லோருக்கும் சமஅளவு வாய்ப்புக் கொடுங்கள்.

புதுப்புதுவிசயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். உங்களுடைய கற்பனைகள் வானத்தில் பறந்தாலும் கால்கள் எப்போதும் தரையில் இருக்கட்டும். வெற்றுக் கனவுகள் யாருக்கும் உபயோகப்படாது.

ஆயிரம் கட்டுரைகள், கதைகள், தத்துவ அலசல்கள், புத்தகங்கள், திரைப்படங்கள் தராத ஞானத்தை நன்கு வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கை சொல்லித் தந்துவிடும். நாம் முடியாது என்று நினைக்கிற விசயத்தை கண்ணெதிரே சாதித்து முடித்தவர்கள் நிச்சயம் இருப்பார்கள்.


வன்முறை எதையும் சாதிக்காது. ஒரு வேளை நீங்கள் வன்முறையின் மூலம் வெற்றி பெற்றாலும் அதனால் வாழ்நாள் முழுவதும் ஏற்படுகிற குற்றவுணர்ச்சியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற உறுதியை, கட்டுப்பாட்டை, ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்தவர்களை அதிகாரத்தின் மூலம் ஜெயித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். சர்வாதிகாரத் தனத்தை தவிர்த்து அனைவரையும் அன்பால் கட்டிப் போடப் பாருங்கள். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் ஒரு விசயத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். எதையும் கேள்வி கேட்கப் பழகுங்கள்.

அதிகாரம் கைக்கு வந்தவுடன் கூடவே ஆடம்பரமும் ஒட்டிக் கொள்ளப் பார்க்கும் அனுமதிக்காதீர்கள். எப்போதும் சேவை மனப்பான்மை உங்கள் உள்ளத்தில் இருக்கட்டும். உண்மை என்பது உங்களுடைய வாழ்க்கையின் ஒற்றைவரி விளக்கமாக இருக்கட்டும். ஏனெனில் கடைசியில் உண்மைதான் ஜெயிக்கும். உண்மை மட்டும்தான் ஜெயிக்கும்.! கேள்வி கேட்காமல் நான் சொல்வதை செய் என்று அதிகாரம் செய்யாமல், அவர்களோடு அன்போடு பேசி வெற்றியை பெறுங்கள்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்களுக்காக பாலமுருகன்...