வாஜ்பாய், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களை அடிக்கடி சந்தித்துப் பேசும் பழக்கம் உடையவர். அவர்களுடன் பேசும் போது இடையிடையே ஜோக் சொல்லி சிரிக்கவைப்பார். எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருப்பார். ஆனால், அவரை ஒருநாள் நான் சந்திக்கச் சென்று இருந்த போது, வழக்கத்துக்கு மாறாக சோகமாக இருந்தார். ‘என்னாச்சு உங்களுக்கு? என்றைக்கும் இல்லாத அளவுக்கு இவ்வளவு இறுக்கம்?’ என்றேன் நான்.
‘இன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்னைச் சந்திக்க வரப் போகிறார்’ என்று சிரித்தார். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது! - இது அவுட்லுக்கின் முதன்மை ஆசிரியர் வினோத் மேத்தா ஒரு விழாவில் சொன்னது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அணு குண்டு சோதனையை நடத்தி உலக நாடுகளை அதிரவைத்தவர் வாஜ்பாய். அவர் மீதே அணு குண்டுகளை வீசியவர் ஒருவர் உண்டென் றால், அது நமது புரட்சித் தலைவிதான்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
abv is a great man
பதிலளிநீக்கு