செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

புதன், நவம்பர் 16, 2011

கலக்கத்துடன் சிரித்தார்!


வாஜ்பாய், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களை அடிக்கடி சந்தித்துப் பேசும் பழக்கம் உடையவர். அவர்களுடன் பேசும் போது இடையிடையே ஜோக் சொல்லி சிரிக்கவைப்பார். எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருப்பார். ஆனால், அவரை ஒருநாள் நான் சந்திக்கச் சென்று இருந்த போது, வழக்கத்துக்கு மாறாக சோகமாக இருந்தார். ‘என்னாச்சு உங்களுக்கு? என்றைக்கும் இல்லாத அளவுக்கு இவ்வளவு இறுக்கம்?’ என்றேன் நான்.

‘இன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்னைச் சந்திக்க வரப் போகிறார்’ என்று சிரித்தார். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது! - இது அவுட்லுக்கின் முதன்மை ஆசிரியர் வினோத் மேத்தா ஒரு விழாவில் சொன்னது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அணு குண்டு சோதனையை நடத்தி உலக நாடுகளை அதிரவைத்தவர் வாஜ்பாய். அவர் மீதே அணு குண்டுகளை வீசியவர் ஒருவர் உண்டென் றால், அது நமது புரட்சித் தலைவிதான்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து: