செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, நவம்பர் 19, 2010

வாழும் வரலாறு ஆங் சான் சூச்சி !


மியான்மரின் விடுதலைக்கு வித்திட்ட ஆங்சானின் மகள்தான் ஆங்சான் சூச்சி. ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்ட ஆங்சானை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இரண்டு வயதிலேயே தந்தையை இழந்த சூச்சி, இ¢தியாவிலும், இங்கிலாந்திலும் தனது படிப்பைத் தொடர்ந்தார்.

படிப்பை முடித்து லண்டனில் திருமணமாக இரண்டு குழந்தைகளுடன் வசித்த வந்த அவர், உடல் நலமில்லாத தனது தாயை பார்க்க மியான்மர் வந்தபோது சுதந்திரத்திற்கான போராட்டம் வெடித்தது. சுமார் 5000 போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொங்கி எழுந்த சூச்சி ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக களமிறங்கினார். இவரின் ஆக்ரோஷமான செயல்பாட்டால் ராணுவம் திணறிப் போனது.

1990-ல் பொதுத் தேர்தல் நடத்த ஒப்புக் கொண்ட போது சூச்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்தனர். அப்படியும் 82 விழுக்காடு வாக்குகளுடன் சூச்சியின் சுதந்திரத்துக்கான தேசியக் கட்சி வெற்றி பெற்றபோது அந்தத் தேர்தலை, ராணுவம் ஏற்றுக் கொள்ளவில்லை. சூச்சி அவரது வீட்டிலேயே தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.

1989-ல் முதன் முறையாகக் கைது செய்யப்பட்டது முதல் மூன்று முறை விடுதலை செய்து உடனே மீண்டும் கைது செய்யப்பட்டுவிட்டார் சூச்சி. யாங்கூனை விட்டு வெளியே போகக் கூடாது என்று ராணுவம் தடை விதித்த போது, ஆறு நாள்கள் காரிலேயே இருந்து போராடிக் கைதானவர்.


ஆங்சானின் கணவர் மைக்கேல் ஆரிஸ் புற்றுநோய் காரணமாக 1999-ல் இறந்தார். அவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த கல்வியாளர். அவர் இறப்பதற்கு முன்னால் தன்னுடைய மனைவியைப் பார்க்க விரும்பினார். ஆனால் அவருக்கு விசா தருவதற்கு மியான்மர் அரசு மறுத்துவிட்டது. கணவர் இறந்ததற்கு கூட அனுமதி வழங்காத கொடுமைகள் எல்லாவற்றையும் சொல்லி மாளா.

மியான்மரின் ஸ்தாபகர் என்று கொண்டாடப்படும் சூச்சி கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகச் சிறைவாசம் செய்த பின்னர் நவம்பர் 14 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு அவரைச் ஆளும் ராணுவ அரசு சுதந்திரமாக நடமாடவிடும் என்பது யாருக்கும் தெரியாது.

ராணுவ சர்வாதிகாரிகளை எதிர்த்து கடந்த இருபது ஆண்டுகளாக போராடி வரும் ஆங்சான் சூச்சி நோபல் பரிசு பெற்றவர். ஆனால் தான் எதிர்கொண்ட சவால்கள், துன்பங்கள் எல்லாம் ஒருநாள் நிச்சயம் வெல்லக்கூடும் என்ற நம்பிக்கையோடு செயல்படுகிறார். உலக வரலாற்றில் நெல்சன் மண்டேலாவுக்குப் பிறகு அதிக காலம் அரசியலுக்காகச் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் ஆங்சான் சூச்சிதான்.! ஆனால் சுதந்திரம், ஜனநாயகம் என்று மார்தட்டிக் கொள்ளும் உலக நாடுகள், மியான்மரில் நடக்கும் அடக்கு முறைகளை வேடிக்கை பார்ப்பது நியாயமா?

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்களுக்காக பாலமுருகன்...

1 கருத்து: