செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, நவம்பர் 27, 2011

ஜே.பி.சி. விசாரணை பலன் தருமா?



அரசாங்கத்தின் அலுவல்கள் மற்றும் விவகாரங்கள் அனைத்திற்கும், பாராளுமன்றம் நடைபெறும் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காண்பது என்பது இயலாத காரியம். எனவே அரசாங்கத்தின் வேலைப்பளுவை குறைத்து, அனைத்து விவகாரங்களையும் பரிசீலனை செய்து, தீர்வு காணும் வகையில், மத்திய அரசு பல்வேறு குழுக்களை அமைக்கிறது.

இந்த குழுக்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. ஒன்று பாராளுமன்ற நிலைக் குழு என்றும் மற்றொன்று தற்காலிக கூட்டுக் குழு (எச்.ஒ.சி.,) என்றும் அழைக்கப்படுகிறது. பாராளுமன்ற நிலைக்குழு ஆண்டுதோறும் அமைக்கப்படும். ஆனால், எச்.ஓ.சி., எனப்படும் தற்காலிக பாராளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.,) தேவை ஏற்பட்டால் மட்டுமே அமைக்கப்படும்.

ஜே.பி.சி., அமைப்பதற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலும் வேண்டும். ஒரு அவையில் ஜே.பி.சி., அமைக்க மசோதா நிறைவேற்றப் பட்டாலும், மற்றொரு அவையின் ஒப்புதலும் பெற வேண்டும். இல்லையென்றால், இரு அவைகளின் தலைவர்களும் கலந்து பேசி முடிவு எட்டுவர். பாராளுமன்றத்தில் கட்சிகளின் எம்.பி.,க்கள் பலத்தை அடிப்படையாக கொண்டே உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

தவிர, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மக்களவையிலும், ஒரு பங்கு உறுப்பினர்கள் மாநிலங்களவையிலும் இருந்தும் 2:1 என்ற விகிதத்தில் நியமிக்கப்படுவர். ஜே.பி.சி.,யின் விசாரனை மிகவும் ரகசியமாக நடை பெறும். ஆனால், விசாரனையின் தன்மைகள் குறித்து ஜே.பி.சி., தலைவர் அவ்வப்போது பத்திரிகையாளர்களுக்கு செய்திகளை வெளியிடுவார்

இதுவரை அமைக்கப்பட்ட ஜே.பி.சி., விசாரணை?

கடந்த 25 ஆண்டுகால பாராளுன்ற வரலாற்றில் முக்கியப் பிரச்னைகள் குறித்து விசாரிக்க இதுவரை நான்கு ஜே.பி.சி.,க்கள் அமைக்கப்பட்டன. ஆனால், நான்கு ஜே.பி.சி., விசாரணை அறிக்கைகளால், பிரச்னைகளுக்கு எந்த ஒரு குறிப்பிடத்தக்க தீர்வுகளும் எட்டப்படவில்லை.

போபர்ஸ் பீரங்கி ஊழல்: கடந்த 1987 ஆம் ஆண்டு, நாட்டின் பெரிய ஊழலாக கூறப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து, ஜே.பி.சி., விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் போர் கொடி தூக்கின. இதனால், பாராளுமன்ற அலுவல்கள் பல நாட்கள் முடங்கின. மேலும், அப்போதைய மத்திய நிதி அமைச்சர் வி.பி.சிங், ஜே.பி.சி., அமைக்க வலியுறுத்தி எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவாக களமிறங்கினார். இதனால், விழிபிதுங்கிய நடுவண் அரசு வேறு வழியின்றி, ஜே.பி.சி., அமைக்க ஒப்புக் கொண்டது.


VP SING
 நாட்டில் முதன் முதலாக அமைக்கப்பட்ட இந்த ஜே.பி.சி., பெரும் சர்ச்சையில் சிக்கியது. நடுவண் அரசு அமைத்த ஜே.பி.சி., யில் காங்கிரஸ் எம்.பி.க்களே அதிகம் இடம் பெற்றிருந்தனர். எனவே, ஜே.பி.சி.,யை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதனால், போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து அமைக்கப்பட்ட ஜே.பி.சி., பயனற்று போனது.

பங்கு சந்தை ஊழல்: கடந்த 1992 ஆம் ஆண்டு, ஹர்ஷத் மேத்தாவின் பங்கு சந்தை ஊழல் குறித்து விசாரணை நடத்த இரண்டாவது முறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு வர்த்தகத்தில் ஹர்ஷத் மேத்தா உள்ளிட்ட பங்கு சந்தை தரகர்கள் 1000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தனர். இதன் எதிரொலியால் இந்திய பங்கு சந்தை வர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டது.

நாட்டின் பங்கு வர்த்தக துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த மெகா ஊழல் குறித்து ஜே.பி.சி., விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்தது. ஆனால், அறிக்கையின் பரிந்துரையை ஏற்று, சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை தொடங்க ஐந்து ஆண்டு காலம் பிடித்தது. மேலும் விசாரணை அறிக்கையின் பெரும்பாலான பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. இதுவே, பங்கு சந்தை வர்த்தகத்தில் அடுத்து ஒரு மெகா மோசடி நடக்க காரணமாக அமைந்தது.

KETHAN BARAK
மும்பையை சேர்ந்த பங்குச் சந்தை தரகர் கேதன் பரேக், கடந்த 1999 முதல் 2001 வரை பங்கு சந்தையில் பல நூறு கோடி மோசடி செய்தான். இதனால், இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் பலத்த அடி விழுந்தது. இந்த மெகா மோசடி குறித்து விசாரணை நடத்த மூன்றாவது முறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. பங்கு சந்தை தரகர் கேதனுக்கும், வங்கி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்தி நடுவண் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால், மூன்றாவது ஜே.பி.சி., அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தியதால், பங்கு வர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பங்கு வரத்தக துறையில், ஜே.பி.சி.,யின் பரிந்துரைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. இதனால், மூன்றாவது ஜே.பி.சி., விசாரனையிலும் எந்த வித தீர்வும் கிடைக்கவில்லை.

கோலா ஊழல்: 2003 ஆம் ஆண்டு குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத் தன்மை வாய்ந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதாக எழுந்தப் புகார் குறித்து, விசாரணை நடத்த ஜே.பி.சி., கமிட்டி, 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதில் குளிர்பானங்களில் நச்சுத்தன்மை கலந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதை உறுதி செய்தது. மேலும், குளிர்பான நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், இந்த நடைமுறைகள் எந்த அளவுக்கு பின்பற்றப்படுகின்றன என்பது வெளிப்படையாக தெரியவில்லை. இது புரியாத புதிராகவே உள்ளது.

இந்நிலையில் 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து ஜே.பி.சி., விசாரணை நடத்த பாராளுமன்றத்தை இரண்டு வார காலத்திற்கும் மேலாக எதிர்க்கட்சிகள் முடக்கின. ஆனால் நடுவண் அரசு அலைக்கற்றை ஊழல் குறித்து ஜே.பி.சி. அமைக்க ஒத்துக்கொள்ளவில்லை. அப்படியே அமைத்தாலும் அதுவும் விழலுக்கு இரைத்த நீராகவே இருக்கும்!

நன்றி: தினமலர்- சென்னை பதிப்பு.
கருத்துகள் வரவேற்கப் படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக