செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், நவம்பர் 18, 2010

உண்மை மட்டும்தான் ஜெயிக்கும்.!


‘உலகின் ஒட்டுமொத்த ஹீரோ அவர்தான்’-அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது உதிர்த்த வார்த்தை இது. ‘வருங்காலச் சமூகம் இவரை புத்தருக்கும் ஏசுவுக்கும் இணையாக வைத்துப் பேசும்!’ சுதந்திர இந்தியாவுடைய முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட்பேட்டன் பிரபு மகாத்மா காந்தியைப் பற்றிச் சொன்ன வாசகம். ஆம் ஒவ்வொரு நாடும் காந்தியைப் பற்றி வியந்து பேசுகின்றன.


காந்தி மறைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் சென்று விட்டதால், கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் அவரைப் பற்றிக் கதைகளில் மட்டுமே கேட்டிருக்கின்றன. அவை நிஜமா, பொய்யா என்று நம்ப முடியாமல் சிரமப்படும் அளவுக்கு நேர்மையானதொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அவரின் வாழ்க்கைப் பாடத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை:

முடிவெடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஒருவருக்காக மட்டுமல்ல. எல்லோரு க்காகவும்.! நன்றாக யோசித்து ஒரு செயலில் இறங்க வேண்டும். ஆனால் அப்படி இறங்கிய பிறகு சலனங்கள் கூடாது. பலன்களை எண்ணிக் கவலைப்படக் கூடாது.

ஒத்துழையாமை என்பது அற்புதமான ஆயுதம். நமக்குப் பிடிக்காதவர்கள் மீது கல் எடுத்து வீசுவதை விட அவர்களைப் புறக்கணித்துப் பாருங்கள். தானாக உங்கள் வழிக்கு இறங்கி வருவார்கள். உங்களுடைய நண்பர் அல்லது உறவினர் அல்லது உங்களுக்கு பிடித்தவர் என்பதற்காகச் சிலருக்கு மட்டும். அதிக முக்கியத்துவம் தந்து பழகாதீர்கள். எல்லோருக்கும் சமஅளவு வாய்ப்புக் கொடுங்கள்.

புதுப்புதுவிசயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். உங்களுடைய கற்பனைகள் வானத்தில் பறந்தாலும் கால்கள் எப்போதும் தரையில் இருக்கட்டும். வெற்றுக் கனவுகள் யாருக்கும் உபயோகப்படாது.

ஆயிரம் கட்டுரைகள், கதைகள், தத்துவ அலசல்கள், புத்தகங்கள், திரைப்படங்கள் தராத ஞானத்தை நன்கு வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கை சொல்லித் தந்துவிடும். நாம் முடியாது என்று நினைக்கிற விசயத்தை கண்ணெதிரே சாதித்து முடித்தவர்கள் நிச்சயம் இருப்பார்கள்.


வன்முறை எதையும் சாதிக்காது. ஒரு வேளை நீங்கள் வன்முறையின் மூலம் வெற்றி பெற்றாலும் அதனால் வாழ்நாள் முழுவதும் ஏற்படுகிற குற்றவுணர்ச்சியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற உறுதியை, கட்டுப்பாட்டை, ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்தவர்களை அதிகாரத்தின் மூலம் ஜெயித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். சர்வாதிகாரத் தனத்தை தவிர்த்து அனைவரையும் அன்பால் கட்டிப் போடப் பாருங்கள். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் ஒரு விசயத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். எதையும் கேள்வி கேட்கப் பழகுங்கள்.

அதிகாரம் கைக்கு வந்தவுடன் கூடவே ஆடம்பரமும் ஒட்டிக் கொள்ளப் பார்க்கும் அனுமதிக்காதீர்கள். எப்போதும் சேவை மனப்பான்மை உங்கள் உள்ளத்தில் இருக்கட்டும். உண்மை என்பது உங்களுடைய வாழ்க்கையின் ஒற்றைவரி விளக்கமாக இருக்கட்டும். ஏனெனில் கடைசியில் உண்மைதான் ஜெயிக்கும். உண்மை மட்டும்தான் ஜெயிக்கும்.! கேள்வி கேட்காமல் நான் சொல்வதை செய் என்று அதிகாரம் செய்யாமல், அவர்களோடு அன்போடு பேசி வெற்றியை பெறுங்கள்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்களுக்காக பாலமுருகன்...

1 கருத்து: