செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், நவம்பர் 08, 2011

வாழ்க்கை பாடங்கள் பத்து!


நமது நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடி கட்டிப்பறக்கும் முக்கிய நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜீம் பிரேம்ஜி, ஒரு விழாவில் மாணவர்கள் கற்க வேண்டிய பத்துப் பாடங்களை விளக்கினார். அவை...


1. பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்

உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதேபோல மிகப்பெரிய சவாலைச் சந்திக்கும் போது, நீங்கள் அதைவிட்டு ஓடிவிட நினைக்கலாம். அல்லது பிரச்சினையை மற்றவர்களிடம் தள்ளிவிட நினைக்கலாம். அல்லது அதில் உங்களது தலையை நுழைக்கலாம். அப்படி இல்லாமல், உங்களது பணிகளை நீங்களே தீர்மானியுங்கள்.

2. மகிழ்ச்சியைச் சம்பாதியுங்கள்

நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும்போது, நினைவில் கொள்ளத்தக்க சாதனைகளை விளக்குகிறார்கள். அதேசமயம் அவர்கள் சந்தித்த கடினங் களும்கூட அவர்களது மகிழ்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதிதான். பாராட்டை சம்பாதிப்பதில் இருப்பதைப்போல வேறு பெரிய திருப்தி இல்லை என்பதைக் கண்டறிந்தேன். கஷ்டப்பட்டு போராடி சம்பாதித்தால்தான் அதன் மதிப்பு நமக்குத் தெரியும்.

3. தோல்வியே வெற்றிக்கு வழி

ஒவ்வொரு முறையும் பாராட்டே கிடைத்துக் கொண்டிருக்காது. வாழ்க்கையில் பல சவால்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். சில வெற்றிகளைப் பெறலாம். சில தோல்விகளைப் பெறலாம். வெற்றியால் மகிழலாம். ஆனால், அதைத் தலையில் ஏற்றிக் கொள்ளக்கூடாது. அவ்வாறு, தலையில் ஏற்றிக் கொள்ளும் கணத்திலிருந்தே நீங்கள் தோல்விப் பாதையில் பயணம் செய்யத் தொடங்கி விடுவீர்கள். தோல்வியை எதிர்கொள்ள நேர்ந்தால் கவலைப்படாதீர்கள். வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுங்கள். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள். இழப்பைச் சந்திக்கும் போது இழப்பிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதை இழந்துவிடாதீர்கள்.

4. வெற்றியைப் போல தோல்வி

தன்னம்பிக்கைக்கும் கர்வத்துக்கும் இடையே மெல்லிய கோடுதான் இருக்கிறது. தன்னம்பிக்கை உள்ளவர்கள் எப்போதும் கற்றுக் கொள்ள திறந்த மனதுடன் இருப்பார்கள். எந்த நிலையிலும் கற்றுக் கொள்ள விரும்புவதே தலைமைப் பண்புக்கு முக்கியமானது. மற்றொருபுறம் கர்வம். அனைத்தும் நமக்குத் தெரியும் என்று நினைப்பது, நாம் கற்றுக் கொள்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. மாறி வரும் உலகில் விதிமுறைகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும். பிரச்சினைகளின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் மனநிறைவு கொள்வது உங்களது உணர்வுகளை சோம்பேறி ஆக்கும். உங்களைச் சுற்றி நடப்பதைப் புரிந்து கொள்வதைத் தடுக்கும். இதுதான் தோல்விக்கு முதல்படி.

5. சிறந்த வழி இருக்கிறது.

சிறப்புடன் செயல்படுதல் என்பது இலக்கு அல்ல. அது தொடர்ந்து செல்ல வேண்டிய பயணம். தொடர்ந்து முன்னேற்றம் நிகழ வேண்டுமானால், அதில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்காக உழைக்கவும் விரும்ப வேண்டும். நமது படைப்பாக்கத்திற்கும் புத்தாக்கத்திற்கும் மற்ற துறைகளிலிருந்து ஊக்கம் பெற வேண்டியது அவசியம். இயற்பியலில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவுக்கு இசையிலும் ஆர்வம் காட்டினார் ஐன்ஸ்டீன். பெட்ரண்ட் ரஸ்ஸல் தத்துவமேதை மட்டுமல்ல, கணிதவியலாளரும் கூட. திறமையும் படைப்பாக்கமும் ஒன்றிணைந்து நடைபோட வேண்டும்.

6. சாதகமான எதிர்வினை, எதிர்நிலைச் செயல்பாடு

அமைதியான மனநிலையில் நாம் மதிப்பீடு செய்யும்போது சாதகமாக எதிர்வினை செய்கிறோம். நமது செயல்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. ஆனால், எதிர் நிலையாக செயல்படும்போது, எதிராளிகள் நாம் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறார்களோ அதையே செய்து கொண்டிருக் கிறோம். ஒரு விசயத்தை ஏற்க இயலாத நிலையில், மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் சாதகமான எதிர் வினை இருக்க வேண்டும். அதுவே தற்போதைய நிலைமைக்க்கு சவா லையும் வளங்குன்றாத சமூக சீர்திருத்தத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.

7. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்



இளம் வயதில் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. 24 வயதில் நுழையும்போது நேரப்படி செயல்பட வேண்டியதிருக்கும். நேர நெருக்கடிக்குள் ஆளாகாமல் இருக்க பிசிக்கல் பிட்னஸ் அவசியம். உடற் பயிற்சி, நாம் உழைக்கச் செலவழிக்கும் நேரத்தின் தரத்தை மேம்படுத்துவ துடன், படுக்கச் சென்றதும் சீக்கிரம் தூக்கம் வரவும் உதவியாக இருக்கும். மன உளைச்சலை தவிர்க்கவும் உதவியாக இருக்கும்.

8. அடிப்படை நெறிகளில் சமரசம் வேண்டாம்

‘மனதின் ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். அதேசமயம், காற்றில் நமது கால்கள் அடித்துக் கொண்டு போய்விடக்கூடாது’ என்று மகாத்மா காந்தியடிகள் அடிக்கடி கூறுவார். நீங்கள் எதற்காக நிற்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அறநெறி என்பது சொல்லும் வார்த்தைகளில் இல்லை. செயல்களில் இருக்க வேண்டும். அடிப்படை நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் சமரசம் வேண்டாம்.

9. வெற்றி பெற விளையாடு

வெற்றி பெற விளையாடு. எப்படியாவது விளையாடு என்று அர்த்தம் அல்ல. கண்ணியமற்ற விளையாட்டு வேண்டாம். ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. மற்றவர்களின் உழைப்பில் வெற்றி பெற வேண்டாம். கடந்த முறை செய்ததைவிட இந்த முறை மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும். நோக்கத்தில் வெற்றி பெற முழுத் திறமையைக் காட்ட வேண்டும். இதற்கான உறுதி இருக்க வேண்டும்.

10.சமூகத்திற்குத் திருப்பிக் கொடு

இந்தியா மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்றாலும், பல சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இதற்குத் தீர்வு காணும் வகையில் நம் அனைவருக்கும் ஒருங்கிணைந்த சமூகப் பொறுப்புணர்வு அவசியம் தேவை. அனைத்துச் சவால்களிலும் முக்கியமானது கல்வி. ஒரு புறம் வேலைக்குத் தகுந்த திறமையாளர்கள் கிடைக்காத நிலை உள்ளது. மற்றொருபுறம் வேலை இன்மையும், வறுமையும் உள்ளன. இந்த இரு முனைகளையும் இணைப்பதற்கு அனைவருக்கும் தரமான கல்வியை கிடைக்கச் செய்ய வேண்டும்.

 கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பால முருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக