2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த ஊழலை கண்டுபிடிக்க, பார்லிமென்டின் கூட்டுக்குழு நடவடிக்கை தேவை என்று எதிர்க்கட்சிகளும், தேவை இல்லை என்று அரசும் கூறிவருகின்றன. ஒருவேளை கூட்டுக்குழு அமைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டால், எப்படி அமைக்கப்படும்?
ஊழல் நடந்துள்ள துறை அமைச்சர், இதற்கான தீர்மானத்தை லோக் சபாவில் முன்மொழிந்து பேசுவார். அப்படி இல்லையெனில், பொதுவாக பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சரே கூட, இதற்கான தீர்மானத்தை முன்மொழி வாய்ப்புள்ளது. அத்தீர்மானத்திலேயே கூட, கூட்டுக்குழு குறித்த அனைத்து தகவல்களும் இடம் பெறும். பொதுவாக அக்குழுவில் எத்தனை உறுப்பினர்கள், அவர்களில் எத்தனை பேர் ராஜ்யசபா, எத்தனை பேர் லோக்சபா என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும். பெரும்பாலும் ஒவ்வொரு கட்சியின் மொத்த எம்.பி.க்களின் எண்ணிகைக்கு ஏற்ப உறுப்பினர் ஒதுக்கீடு இக்குழுவில் இருக்கும். இந்த உறுப்பினர்களில் ஒருவரை தலைவராக லோக்சபா சபாநாயகர் அறிவிக்கக்கூடும்.
கூட்டுக்குழு அமைக்கப்பட்ட தேதியில் இருந்தே பணிகள் தொடங்கிவிட்டதாக கருதப்படும். குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, அதற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். கூட்டுக்குழுவை ஒரு முறை கூட்ட வேண்டுமென்றால், கோரம் முறை கடைபிடிக்கப்படும். அதாவது அக்குழுவில் உள்ள உறுப்பினர் களில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை உறுப்பினர்கள் கலந்து கொண்டால் மட்டுமே கூட்டம் நடத்த முடியும். ஏதாவது ஒரு சிக்கலான தருணங்கள் வரும்போது, அதில் முடிவெடுக்கும் முன் சபாநாயகரின் ஒப்புதலை பெற வேண்டும்.
quvathrochi |
இரண்டாவது முறையாக பணபத்திரங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட முறைகேடுகளை விசாரிக்க கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதற்கான தீர்மானம் 1992 ஆகஸ்ட் 6 ஆம் தேதி லோக்சபாவில், அப்போதைய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தால் முன்மொழியப் பட்டு நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, 20 லோக்சபா எம்.பி.க்களும், 10 ராஜ்யசபா எம்.பி.க்களும் அந்த குழுவில் அங்கம் வகித்தனர். இதன் தலைவராக ராம்நிவாஸ் மிர்தா இருந்தார். மொத்தம் 96 முறை இக்குழு கூடி, விசாரணை நடத்திவிட்டு இறுதியாக 1993 டிசம்பர் 21 ஆம் தேதி அன்று தனது அறிக்கையை அரசிடம் அளித்தது.
gulamnabi asath |
குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி கலக்கப்படுவதாக எழுந்த பிரச்னையை விசாரிக்க, நான்காவது முறையாக கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை 2003 ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று லோக்சபாவில் அப்போதையை சுகாதாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜால் முன்மொழியப் பட்டு நிறைவேற்றப்பட்டது. அன்றே கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டது. அதில், லோக்சபா எம்.பி.க்கள் 10 பேரும், ராஜ்யசபா எம்.பி.க்கள் 5 பேரும் அங்கம் வகித்தனர். இக்குழுவிற்கு சரத்பவார் தலைவராக இருந்தார். மொத்தம் 17 முறை இந்த குழு கூடி விவாதம் நடத்திவிட்டு, இறுதியாக 2004 பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று தனது அறிக்கையை அரசிடம் சமர்பித்தது.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக