செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, மே 05, 2012

போபர்ஸ் ஊழல் என்ன ஆகிறது?


போபர்ஸ் என்றால் என்ன?

போபர்ஸ் என்பது, சுவீடனின் பிரபல இரும்பு தொழில் நிறுவனம். சுவீடனின் கார்லஸ்கோ என்ற இடத்தில் இந்த நிறுவனம் உள்ளது. பீரங்கி தயாரிப்பில் சிறந்த நிறுவனமாக இது பிரபலம் அடைந்தது. இந்த நிறுவனம் கடந்த 1873-ல் தொடங்ப்பட்ட பழமையான நிறுவனம். தற்போது பி.ஏ.இ.போபர்ஸ், சாப் போபர்ஸ் என 2 பிரிவுகளாக செயல்படுகிறது. 2-ம் உலகப்போரின் போது, இந்நிறுவனம் தயாரித்த பீரங்கிகள்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

போபர்ஸ் ஒப்பந்தம்:

கடந்த 1985-ம் ஆண்டின் மத்தியில், நாட்டின் பாதுகாப்பு கருதி, ராணுவத் துக்காக நவீன பீரங்கிகள் வாங்க நடுவண் அரசு முடிவு செய்தது. அப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. ராஜிவ் பிரதமராக இருந்தார். சுவீடனின் ஏ.பி.போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ‘ஹவிட்சர்’ ரக பீரங்கிகள் வாங்க அரசு முடிவு செய்தது. 

ராஜீவ் காந்தி
இந்த விவகாரம், போபர்ஸ் நிறுவனத்தின் காது களுக்கு எட்டியது. உடனடியாக அந்த நிறுவனம் களத்தில் இறங்கியது. கடந்த 1985-ம் ஆண்டு நவம்பர் 15-ல், இத்தாலியை சேர்ந்த தொழிலதிபர் குட்ரோச்சியை, இந்த பேரத்தில் இடைத்தரகராக ஈடுபடுத்த முடிவு செய்தது. 1986 மார்ச் 31-ம் தேதிக்குள், இந்தியாவிடமிருந்து இந்த ஒப்பந்தத்தை பெற்று தந்தால், ஒப்பந்தத்தின் மொத்த தொகையில் 3 விழுக்காட்டை, குட்ரோச்சியின் ஏ.இ. சர்வீஸ் நிறுவனத்துக்கு தருவதாக, போபர்ஸ் நிறுவனம் கூறியது.

இதையடுத்து, போபர்ஸ் நிறுவனத்துக்கும், இந்தியாவுக்கும் இடையே, 1986 மார்ச் 24-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. 1437 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு 400 பீரங்கிகளை போபர்ஸ் நிறுவனம் டெலிவரி செய்ய வேண்டும். முதல் தவணையாக போபர்ஸ் நிறுவனத்துக்கு 1986 மே 2-ம் தேதி, 296 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்தியாவை பொறுத்த வரை, ராணுவத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் இடைத்தரகர் களை பணியில் அமர்த்த கூடாது என்ற விதிமுறை உள்ளது.

குட்ரோச்சி
அந்த விதிமுறைகளை மீறி, குட்ரோச்சி இந்த பேரத்தில் இடைத்தரகராக ஈடுபடுத்தப்பட்டார். குட்ரோச்சியை தவிர துபாயை மையமாக கொண்டு செயல்படும் நிறுவனங்களின் அதிபரான வின்சத்தா என்பவரும் இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக தகவல் வெளியானது.

வின்சத்தா:

Win Chadha

பீரங்கி பேரத்தில் இவரும் இடைத்தரகராக செயல்பட்டதாகவும், அதற்காக இவரது நிறுவனத்துக்கு கமிஷன் கொடுக்கப்பட்டதாக வும், மத்திய வருமான வரி தீர்ப்பாயம் கருத்து தெரிவித்தது. இவருக்கு எதிராக, 1999-ல் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த 2001 அக்டோபர் 24-ல் வின்சத்தா, மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். 

குட்டு உடைந்தது:

கடந்த 1987-ல் சுவீடன் ரேடியோ, ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டது. போபர்ஸ் நிறுவனம், இந்திய அரசிடம் இருந்து ஒப்பந்தத்தை பெறுவ தற்காக, இந்தியாவை சேர்ந்த வி.ஐ.பி.,களுக்கும், அதிகாரிகளுக்கும் 64 கோடி ரூபாய் கமிஷன் கொடுக்கப்பட்டதாக அதில் கூறப் பட்டது. இது, இந்திய அரசியலில் மட்டும் அல்லாமல், சுவீடனிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை பூதாகரமாக்கின. தற்போது ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்தியாவின் மூலை, முடுக்கெல்லாம் எப்படி பேசப்படுகிறதோ அதைபோல், அப்போது போபர்ஸ் விவகாரம் பேசப்பட்டது. இடைத்தரகராக செயல்பட்ட குட்ரோச்சி, இத்தாலியை சேர்ந்தவர் என்பதா லும், சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவர் என கூறப்பட்டதாலும், போபர்ஸ் விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. மக்களும் இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கவனிக்க தொடங்கினர்.

ராஜிவ் மறுப்பு:

இதுகுறித்து லோக்சபாவில் பேசிய அப்போதைய பிரதமர் ராஜிவ், போபர்ஸ் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக கூறப்படுவதை மறுத்தார். எதிர்க்கட்சிகள் சமாதானம் அடையவில்லை. போபர்ஸ் விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. கடந்த 1990-ல், இதுகுறித்து சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. குட்ரோச்சி மற்றும் வின்சத்தா ஆகியோரை கைது செய்யவும், நாடு கடத்தவும் மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் போலீசாருக்கு, சி.பி.ஐ., சார்பில் கடிதம் எழுதப் பட்டது.

குட்ரோச்சி மனு தள்ளுபடி:

கடந்த 1998-ல் தனக்கு எதிரான விசாரணையை தள்ளுபடி செய்யும்படி, குட்ரோச்சி சார்பில் டில்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, குட்ரோச்சி, வின்சத்தா, முன்னாள் பாதுகாப்பு துறை செயலர் பட்நாகர், போபர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மார்டின் அர்ட்போ ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது. குட்ரோச்சிக்கு எதிராக கைது வாரண்டும் பிறப்பிக்கப் பட்டது.

இந்துஜா சகோதரர்களுக்கும் சிக்கல்:

வெளிநாடுவாழ் இந்திய தொழில் அதிபர்களான இந்துஜா சகோதரர்களும் போபர்ஸ் விவகாரத்தில் மோசடி, ஊழல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 2002 நவம்பரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மலேசியாவில் இருந்த குட்ரோச்சியை, சி.பி.ஐ., கண்டுபிடித்தது. ஆனால், அவரை நாடு கடத்த முடியாது என, மலேசிய அரசு கூறிவிட்டது. கடந்த 2003-ல் குட்ரோச்சியின் வங்கி கணக்குகளை பிரிட்டன் அரசு முடக்கியது.


hinduja brothers

கடந்த 2004 பிப்ரவரி 4-ம் தேதி, போபர்ஸ் வழக்கில் இருந்து, முன்னாள் பிரதமர் ராஜிவை விடுவித்தது டில்லி ஐகோர்ட். அடுத்த ஆண்டிலேயே இந்துஜா சகோதரர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த 2009-ல் குட்ரோச்சியை கைது செய்ய முடியாததாலும், அவருக்கு எதிரான ஆதாரங்கள் இல்லாததாலும், இந்த வழக்கை முடித்து கொள்ள விருப்பம் தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப் பட்டது. இதையடுத்து வழக்கு முடிவுக்கு வந்தது. டில்லி பெருநகர கோர்ட்டில் சி.பி.ஐ.யும் இதேபோல் மனுதாக்கல் செய்துள்ளது.

போபர்ஸ் கதை முடிகிறதா?

போபர்ஸ் பேரத்துக்காக குட்ரோச்சிக்கு வழங்கப்பட்ட கமிஷன் தொகை, பல வங்கி கணக்குகளுக்கு பயணித்து, இறுதியாக அவரது லண்டன் வங்கி கணக்குக்கு வந்தபோது, பிரிட்டன் அரசு அதை முடக்கியது. கடந்த 2004-ல், ஐ.மு.கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, அந்த வங்கி கணக்கை பிரிட்டன் அரசு திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பணத்தை வேறொரு வங்கி கணக்குக்கு மாற்றி கொண்ட குட்ரோச்சி, அந்த பணம் முழுவதையும் வசப்படுத்திக் கொண்டார்.

இன்றுவரை, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு, மூச்சுக்கூட விடவில்லை. இந்நிலையில்தான் நாடாளுமன்றத்தில் போபர்ஸ் விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது போபர்ஸ் பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தி பணம் பெற்றதற்கான ஆவணங்கள் இல்லை என இவ் வழக்கை விசாரித்த சுவீடன் காவல்துறை தலைவர் லின்டர்ஸ்டிரோம் தெரிவித்ததுள்ளார்.

இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக நீதி விசாரணைத் தேவை என்றும் பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளன. ஆனால், போபர்ஸ் வழக்கு முடிந்து போன ஒன்று என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக