செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, டிசம்பர் 17, 2011

சிலிர்த்து எழுபவர்கள் எழுத்தாளர்கள்!


நூல்கள் எப்போதும் ஒரு நாகரிகத்தின் சின்னம்; பண்பாட்டின் அடையாளம்; அறிவு வளர்ச்சியின் குறியீடு; வளர்ந்து வரும் சமுதாயத்தின் முன்னோடி; அந்தந்த காலச்சூழலை எடுத்துக்காட்டும் கண்ணாடி; இது வெறும் காகித மல்ல, ஆயுதம்; அதுவும் அறிவாயுதம். அத்தகைய அறிவை வளர்க் கவும், சிந்தனையைத் தூண்டவும் துணையாக இருப்பவை நூல்களே! மிகப் பெரிய சமுதாய மாற்றங்களுக்கும், பூமியையே புரட்டிப் போட்ட புரட்சி களுக்கும் நூல்களே ஆயுதங்களாகப் பயன்பட்டன.

பிளேட்டோ
புத்தகம் இல்லாத வீடு, ஜன்னல் இல்லாத அறை போன்றது. எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது என்று சிந்தனை யாளர் பிளேட்டோ கூறியுள்ளார். நாடும், வீடும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 18-ஆம் நூற்றாண்டை ‘புரட்சியின் யுகம்’ என்று கூறுவர். இந்த நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் மத்தியதர வர்க்கம் விழித் தெழிந்து செல்வத்தையும், செல்வாக்கையும் பெற முயன்றது. நிலப் பிரபுத்து வத்தின் ஆதிக்கத்திலிருந்து மத்தியதர வர்க்கத்தின் ஆளுகை க்குப் பொருளாதார, அரசியல் துறைகள் பெயரளவில் மாறுவதற்கு வால்டேர், ரூசோ ஆகிய சிந்தனை யாளர்களின் நூல்களே காரணம் ஆகும்.

‘‘பொதுமக்களே! விழித்து எழுங்கள். உங்கள் கைவிலங்குகளை உடைத் தெறியுங்கள்!’’ என்ற வால்டேரின் சுதந்திரக் குரல் பிரெஞ்சு மக்களைத் தட்டி எழுப்பியது. கொடுங்கோலர்களை எதிர்த்துப் போராடும் நெஞ் சுரத்தைப் பெற்றுத் தந்தது. மன்னர் ஆட்சியைத் தூக்கியெறிந்து மக்களாட் சியை உருவாக்கும் மாபெரும் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டது. ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற அந்தப் புரட்சி முழக்கம் வானை முட்டி எங்கும் எதிரொலித்தது.

வால்டேர்
‘‘என்னுடைய தொழில் நான் சிந்திப்பதைச் சொல்வதுதான்!’’ என்றார் வால்டேர். அவர் சிந்தித்தவை நாடகங்கள், நவீனங்கள், கவிதைகள், கட்டுரைகள், அறிக்கைகள், கடிதங்கள் என 99 நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை காலத்தை வென்று இன்றும் நின்று நிலவுகின்றன. பிரெஞ்சு மொழிக்கே இவை பெருமையைத் தேடித் தந்தன.

மனித சமுதாயத்தையே மாற்றியமைத்த ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’ அதிகார வெறியர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. ‘‘அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கும் வார்த்தைகளை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். ஆனால், அவைகளைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக நான் சாகும்வரை போராடுவேன்’’ என்று வால்டேர் குமுறி எழுந்து அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் அவரே சுதந்திரத்தின் விடுதலைக்காகப் பாடுபட்டார்.

மாமேதை ராகுல்ஜி சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் முதலியவைகளைப் பற்றி தத்துவரீதியாக ‘மனித சமுதாயம்’ என்ற பெரிய நூலைப் படைத்துள்ளார். அவரே கூறியிருப்பதுபோல, அந்த முக்கியப் பிரச்னைகளைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காக, ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ எழுதியிருக்கிறார்.


ராகுல்ஜி அறிவைச் சேகரிப்பதற்காக உலகத்தின் மூலை முடுக்குகளை யெல்லாம் சுற்றியிருக்கிறார். உத்திரப் பிரதேச மாநிலத்தின் ஆஜம்கட் மாவட்ட த்தைச் சேர்ந்த ஒரு சிறு கிராமத்தில் பிறந்த இவர், காசி நகரிலே தொடங்கிய தமது அறிவு சேகரிக்கும் முயற்சியை, லெனின்கிராடு பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவியைப் பெற்ற பிறகும் தொடர்ந்து செய்து வருகிறார். ஆயுள் முழுவதும் உழைத்துச் சேகரித்த அறிவுக் கருவூலத்தை அவருடைய நூல்களிலே அள்ளித் தந்திருக்கிறார்.

‘‘இந்தக் கதைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் அந்தந்தக் காலத்தைப் பொறுத்த பலமான ஆதாரங்கள் இருக்கின்றன. உலகத்தில் எத்தனையோ மொழிகளில் உள்ள தர்க்கரீதியான, மொழியாராய்ச்சி, மண், கல், தாமிரம், பித்தளை, இரும்பு இவைகளில் எழுதப்பட்டும், செதுக்கப்பட்டும் உள்ள வரலாறு, இலக்கியங்கள் எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள், பல நாட்டின் பழக்க வழக்கங்கள், புதை பொருள்கள் இவைகளில் இருந்தெல் லாம் ஆதாரங்கள் தேடப்பட்டிருக்கின்றன...’’ என்று கூறும் ராகுல்ஜி, இந்தக் கதைகளுக்கு ஆதாரமான நூல்கள் முதலியவற்றின் பட்டியலைச் சேர்த்தால் அது இந்நூலின் இணைப்பாக இல்லாமல் இதைவிடப் பெரியதோர் நூலாக ஆகிவிடும் என்பதால் சேர்க்கவில்லை என்று கூறியுள்ளதைப் பார்த்தால், அவரின் கடும் உழைப்பை புரிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு பலகாலம் முயன்று உருவாக்கப்பட்ட படைப்புகள் அந்தந்த காலத்தில் வரவேற்கப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பழமை வாதிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு ஆளாகியுள்ளன. அவற்றை எழுதிய குற்றத்துக்காகவே அவர்கள் தண்டிக்கப்பட்டனர்; நாடு கடத்தப் பட்டனர்; அவர்களது அரிய படைப்புகளும் எரியூட்டப்பட்டன. என்னே கொடுமை இது! ஆனால் அவர்களோ காலம் கடந்து பாராட்டப்படுகின்றனர்.

ரூசோ
பிரெஞ்சுப் புரட்சியின் பிதாமகர்களாகக் கருதப்படும் இரட்டையர்களான வால்டேர், ரூசோ இவர்களும் அக்கால ஆட்சியாளர்களால் பெரிதும் பாதிக்கப் பட்டவர்களே! வால்டேர் சமூக ஒழுக்கத்தைக் கெடுப்பவன் என அரசாங்கம் குற்றம் சாட்டியது; மத விரோதி என்று மதவெறியர்கள் பழி தூற்றினர்; ‘நரகத்தின் வாசற்படி’ என்று அவரை வைதீகர்கள் கண்டு நடுங்கினர். இறுதியில் சிறையில் தள்ளப்பட்டு, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டார்.

1791-ஆம் ஆண்டு வெடித்தெழுந்த பிரெஞ்சுப் புரட்சியின்போது, வால்டேரின் பூதவுடல் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டு பாரிஸ் நகருக்குள் மாபெரும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. கொடுங்கோன்மையின் சின்னமாக விளங்கிய ‘பாஸ்டில்’ சிறைக்கோட்டத்தைத் தரைமட்டமாக்கி, அதன் அழிவுக் குவியல் மீது வால்டேரின் சடலம் வெற்றிச் சின்னமாக ஓர் இரவு முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு உலகம் முழுவதும் சிந்தனையாளர்கள் தங்கள் படைப்புகளுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் சரி, சுதந்திர இந்தியா விலும் சரி, எழுத்தாளர்களின் படைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. எழுத்தாளர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாரதி தலைமறைவாகி புதுவை போகவில்லையா? இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் போது இலங்கை தமிழ்ப் பத்திரிகையாளர் ஜே.எஸ். திசை நாயகத்துக்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லையா? கடந்த சில ஆண்டுகளில் பல பத்திரிகையா ளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

எத்தனை அடக்கு முறைகள் வந்தால் என்ன, அடிக்க அடிக்கப் பந்து எழுவது போலவும், அரைக்க அரைக்கச் சந்தனம் மணப்பது போலவும் சிந்தனை யாளர்கள் சிலித்து எழுகின்றனர். அவர்களால் ஆக்கப்பட்ட நூல்கள் இப்போது உலகத்தையே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.


‘‘அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்களைப் பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும், புரிதல், சகிப்புத் தன்மை போன்றவை மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக இருப்பதால் ஏப்ரல்-23 உலகப் புத்தக தினமாகக் கருதப்படும்’’ என்று 1995-ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; இதுவே படைப்பாளர்களுக்கான உலக அங்கீகார மாகும்.

‘புத்தகங்களுக்காகச் செலவிடுபவை செலவினங்கள் அல்ல. மூலதனம்’ என்றார் அறிஞர் எமர்சன். எல்லாச் செல்வங்களும் அழியும் தன்மை கொண்டவை; ஆனால், அறிவுச் செல்வம் மட்டுமே வளரும் தன்மை கொண்டது; அதற்கான கருவிகளாக இருப்பவை புத்தகங்களே!’ உலகில் தீமைகளை எதிர்த்துப் போராடும் போர்க்கருவிகளாகவே புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மனிதரின் கடமையாகும்.

நன்றி: தினமணி கட்டுரையாளர் உதயை மு.வீரையன்.17-01-2011
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக