உலகில் நான்கு வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்கள் என்கிறது அரபு இலக்கியம்.
1. ஒருவனுக்கு ஒன்றும் தெரியாது, தனக்கு ஒன்றும் தெரியாது என்பது கூட அவனுக்குத் தெரியாது. அவன் முட்டாள். அவனை விட்டு விலகி விடு!
2. ஒருவனுக்கு ஒன்றும் தெரியாது, தனக்கு ஒன்றும் தெரியாது என்பது மட்டும் அவனுக்கு தெரியும். அவன் எளியவன். அவனுக்கு கற்றுக் கொடு!
3. ஒருவனுக்கு எல்லாம் தெரியும், தனக்கு யாவும் தெரியும் என்பது மட்டும் அவனுக்குத் தெரியாது. அவன் தூங்குகிறான். அவனை எழுப்பிவிடு!
4. ஒருவனுக்கு எல்லாம் தெரியும், தனக்கு எல்லாம் தெரியும் என்பதும் அவனுக்குத் தெரியும். அவன்தான் அறிவில் சிறந்தவன். அவனைப் பின் தொடர்ந்து செல்!
நன்றி: ஜுனியர் விகடன்
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.