செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், பிப்ரவரி 02, 2012

இவர்களா கட்சித் தலைவர்கள்?


கவிஞர் கண்ணதாசன் திரைப்படம், அரசியல் என அனைத்திலும் பிரபலமா னவர். அவர் 1990 ஆம் ஆண்டு வாக்கில் எழுதிய, ‘நான் பார்த்த அரசியல்’ என்ற தலைப்பில், தமிழகத்தின் பிரபலமான அரசியல் தலைவர்கள் பற்றி விமர்சித்துள்ளார். அதிலிருந்து...

ஈ.வெ.ராமசாமி: பெரியாரிடம் சலியாத உழைப்பிருந்தது. கொச்சையான பாஷை இருந்தது. பலர் சொல்லத் தயங்கிய விசயங்களை அவர் சொன் னார். ஆனால், அவரைப் பொறுத்தவரை ஒரு சுயேச்சையான அபிப்பி ராயக்காரராக மட்டும் இல்லாமல், மற்ற யாரையும் நம்புவதில்லை. ‘யாரும் யோக்கியர் இல்லை’ என்று கூறியபடி சம்பாதிக்கின்ற ஒருவராகவே காட்சி யளித்தார். கடைசி வரை அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

அண்ணாதுரை: அண்ணா மிகவும் உத்தமமானவர். தங்கமானவர். பழகுவதற்கு அவரைவிட இனிமை யானவர் கிடையாது. என் குடும்பத்தில் ஒரு இழப்பு என்றால் முதல் கண்ணீர் அவரின் கண்களில் இருந்துதான் வரும். அன்புக்கு உறைவிடம். அற்புதமான பேச்சாளர். ஆனால், ஒரு கட்சியின் தலை வராக கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும், மற்றவர்களை கட்டி மேய்க்கவும் இயலாதவராகவே அவர் விளங்கினார். அதனால்தான், ‘கட்டுப்பாடு’ என்ற கோசத்தோடு தி.மு.க., விளங்கிற்று. ஆகவேதான், அவரை மீறிக்கொண்டு கருணாநிதி உருவாக முடிந்தது.

காமராஜர்: நாணயம், திறமை இரண்டும் அவரிடம் குடிகொண்டிருந்தன. ஆனால், ஒரே ஒரு சுபாவம் அவரிடம் காணப்பட்டது. இன்னொருவன் மேலேறி வரும்பொழுது, அவனை தலையில் தட்டி வைத்துக் கொண்டே இருப்பதுதான் ராஜதந்திரம் என்பது. ஆனால், அதை என்னிடம் காட்டிய தில்லை. மற்ற தலைவர் களோடு ஒப்பிடுகையில் அவர் உன்னதமானவர், உயர்ந்தவர்.

கருணாநிதி: கருணாநிதியை ஒரு தலைவராக பார்த்திருக்கிறேன். அவரைப் பொறுத்தவரை, ‘பணம் கிடைத்தால் குடும்பத்திற்கு, பதவி கிடைத்தால் மருமகனுக்கு’ என்று வாழ்க்கை நடத்துபவராகவே அன்றிலிருந்து இன்று வரை இருந்து வருகிறார். வீட்டை மறந்து நாட்டுக்குப் பாடுபட்டவராக அவர் ஒரு காலத்திலேயும் வாழ்ந்ததில்லை.

அரசியலிலும் சரி, சாதாரண காலங்களிலும் சரி, முக்கியமான நேரங் களிலும் சரி, தனக்கு, தனக்கு என்பதிலேயேதான் முக்கியமாக இருப்பார். அந்த நினைவுகள்தான் அவருக்கு இருக்கும். எழுத்தாளர் என்றால் தான் தான்; கலைஞர் என்றால் தான் தான்; நடிகன் என்றால் தான் என்றுதான் உலகத்தைக் கணித்தாரே தவிர, பிறருக்கும் அந்த திறமை உண்டு என அவர் ஒரு நாளும் மதித்ததில்லை.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக