செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், பிப்ரவரி 16, 2012

நூலகம் ஒரு கோவில், நூல்கள் தெய்வம்!




‘அறிவு ஆற்றலுடையது’ என்பார்கள். ஆமாம், பல வெற்றியாளர்கள் தாங்கள் பெற்ற அறிவாற்றலால்தான் வாழ்க்கையில் தங்களை நிரூபித்துள்ளனர். கல்வியால் அறிவாற்றலைப் பெற முடியும். கல்வி இளமையில் தொடங்கி இருபதுகளில் வளர்ச்சி அடைகிறது. வெற்றிக்குத் தேவை நல்ல சிந்தனை. நல்ல சிந்தனைக்கு தேவை நல்ல நூல்கள். நல்ல நூல்கள் சிந்தனையை சிறகடிக்கும். சிறகடித்து வானம் தொடும். பார்த்தல், கேட்டல் அறிவை விட, படித்தல் அறிவு சிறந்தது. வாசித்தல் அனுபவத்திற்கு வார்த்தைகள் இல்லை.

புத்தகங்களும், ஆசிரியர்களும் கடைசி வரை நல்ல வழிகாட்டிகளாக இருப்பார்கள். அவர்களே நமது நல்ல நண்பர்கள். இளமையில் நமக்கு நிறைய நண்பர்கள் இருக்கலாம். இளமை பருவத்திற்குப் பிறகு தனிமையை உணரும் போது புத்தகம் படித்தல்தான் உண்மையான துணையாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கும்.



ஒருவனை ‘புழு’ என்றால் கோபம் கொள்வான். புத்தக விரும்பியை ‘புத்தக புழு’ எனக் கூறி பாருங்கள். ரசித்து சிரிப்பான்.! புத்தக பைத்தியம் என்றால் புன்னகை பூப்பான்.! படித்தவர்களுக்கே அதன் சுகம் தெரியும். புத்தகப் பிரியர்களுக்கு புத்தகம் சொர்க்கம். எழுத்துக்கள் அமுதம். புத்தகம் நமக்கு தோழன். புத்தகம் நமது அறிவின் குரு. புத்தகம் வாழ்வின் வழிகாட்டி. கன்னிமாரா நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் படித்தவர் என்று அண்ணாவை சொல்வார்கள். தூக்கு மேடைக்குச் செல்லும் சில நிமிடங் களுக்கு முன்னால்கூட லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ என்ற நூலை வாசித்து விட்டுதான் கயிற்றை முத்தமிடப் போனான் பகத்சிங்.

ராபர்ட் சவுதே எனும் ஆங்கிலக் கவிஞர், தன் கடைசிக் காலம் வரை புத்தகங்களே தனக்கு உண்மையான நண்பர்களாக இருந்தன என்று கூறியுள்ளார். புத்தகம் படிப்பது ஒரு நல்ல பொழுது போக்காகவும், அதிக மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கும். புத்தகம் படிப்பது மனித நேயம் வளர்ப்பதற்கும் புதுமையாகச் சிந்திப்பதற்கும், சமுதாயத்தைப் புரிந்து கொள்வதற்கும், பல்துறை அறிவு வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. புத்தகம் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் தொடர்ந்து நூலகம் செல்வதன் மூலமும் அங்கு புத்தகங்களைப் படிப்பதன் மூலமும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

புத்தகங்கள் மட்டும் இல்லையென்றால் கடவுள் இல்லை. நீதி சகிக்க முடியாததாக இருக்கும். இயற்கை விஞ்ஞானம் குத்திட்டு அசையாமல் நின்றுவிடும். தத்துவங்கள் ஊமையாகிவிடும். சகலமும் இருண்டு விடும். வாசிப்பின் பலத்தை இப்படி மிகைப்படுத்தியுள்ளனர் அறிஞர்கள். அவர்கள் சொல்வது போல் புத்தகம் என்ன செய்யும்? புத்தகம் புது உலகம் காட்டும். புரட்சி செய்யும். புதுமை படைக்கும். தாலாட்டும். தாகம் தீர்க்கும். வலிக்கச் செய்யும். வலியை மறக்கச் செய்யும். நல்ல வாசிப்பாளருக்கு, ‘நூலகம் ஒரு கோவில், நூல்கள் தெய்வம்’.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

2 கருத்துகள்:

  1. வாசிக்கும் பழக்கம் குறைந்துவரும் இக்காலத்தில் புத்தகங்கள் குறித்து ஒரு அருமையான விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள்.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு