இந்த பிரபஞ்சம் தோன்றியபோதே காமமும் தோன்றிவிட்டதாக ரிக்வேதம் கூறுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த காமத்தை தேவையில்லையே என்று யாரும் வற்புறுத்தாமல், ஒரு மனிதன் தானாகவே புறக்கணித்தால் அது தவறில்லை. அதைப்பற்றி கவலைப்படவும் தேவையில்லை. ஆனால் செக்ஸில் ஈடுபட்டால் ஆரோக்கியம் கெட்டுவிடும். உடல் பலவீனமாகி விடும் என்று கூறி வலுக்கட்டாயமாக செக்ஸை தவிர்ப்பது சரியில்லாதது. ஒரு காலக்கட்டத்தில் இந்த தவிப்பு பூதாகரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். செக்ஸ் ஆர்வத்தை தவிர்த்தல் அல்லது தள்ளிப் போடுதல் முறையற்ற செயல் பாட்டுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதே கருத்தை இந்த நூற்றாண்டின் நவீன உளவியலின் தந்தை சிக்மண்ட் பிராய்டும் செக்ஸ் ஆர்வத்தை தடுத்தால் மனசும் உடம்பும் தனித்தனியாகவோ அல்லது இரண்டும் சேர்ந்தோ கூட பாதிக்கப்படலாம் என்கிறார். ஆண்கள் அனைவருக்குமே ‘பிராஸ்டேட்’ என்ற சுரப்பி அடிவயிற்றின் உள்ளே இருக்கிறது. சிலருக்கு இது வீங்கிப் போய் சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இவர்களை பரிசோதித்தால் செக்ஸை வலுக் கட்டாயமாக கட்டுப்படுத்தியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு செயற்கையாக விந்தை வெளியேற்றுவதன் மூலம் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்.
பெண்கள் இப்படி உணர்வை கட்டுப்படுத்தினால் அவர்களுக்கு மனரீதியாக பிரச்சனை ஏற்பட்டு விநோதமாக நடந்து கொள்வார்கள். இதற்கு ‘ஹிஸ்டீரியா’ என்று பெயர் வைத்தார்கள், மருத்துவர்கள். இந்த பெண்கள் அடிவயிறு, இடுப்பு வலிக்கிறது என்பார்கள். இவர்களுக்காக டாக்டர் ஜார்ஜ் டெய்லர் என்பவர் ஒரு வைப்ரேட்டரை கண்டுபிடித்தார். அதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செக்ஸ் இன்பம் கொடுத்து குணப்படுத்தினார். கணவனிடம் பெறும் இன்பத்தின் மூலம் தீர வேண்டிய பிரச்சனையை டாக்டரிடம் சென்று பணத்தை செலவு செய்து எந்திரத்தின் மூலம் தீர்த்துக் கொள்கிறார்கள்.
சரி, ஆண்களுக்கு மனரீதியாக என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்த்தால், சில ஆண்களுக்கு ‘செக்சுவல் அப்யூல்’ என்ற மன மாற்றம் ஏற்படும். இவர்கள்தான் பெண்களிடம் தவறாக நடப்பது, சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை தருவது போன்ற விரும்பதகாத செயல்களில் ஈடுபடுவது எல்லாமே வலுக்கட்டாயமாக செக்ஸை தவிர்ப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்.
மேலும், இப்படி கட்டுப்படுத்துவதால் பிரஷர் அதிகரிக்கும். டென்ஷன், தலைவலி ஏற்படும். அல்சர் போன்றவையும் வரலாம். அடக்கப்படும் செக்ஸ் உணர்ச்சி, உடலின் மன அழுத்தத்தை அதிகப்படுத்துவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. மனச்சங்கடம் இன்றி முறையாக கிடைக்கும் செக்ஸ் இன்பம் அனுபவிக்கிற போதுதான் படைப்புக்கான பலன் இயற்கையாக சென்று சேரும். வலுக் கட்டாயமாக செக்ஸை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை விட முறையற்ற கள்ளத் தனமான செக்ஸ்தான் அதிகம் பிரச்சனையை ஏற்படுத்தும்.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.