செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், ஜூலை 12, 2011

யார் சிந்திப்பது?


அண்மையில் ஒரு புத்தகத்தில் நான் படித்த செய்தி இது. ‘‘அன்பான அப்பா, தன் மகளை பள்ளியில் சேர்க்க போகிறார். அப்பா எந்த மதத்தையும் விரும்பாதவர். பள்ளியில் சேர்க்கும் போது மதத்தை கேட்கிறார்கள். வாக்கு வாதம் நடக்கிறது.’’ பின்பு சேர்த்தாரா? இல்லையா? என்பது இருக்கட்டும். மதமே பிடிக்காத ஒருவரிடம் ஏதாவது ஒரு மதத்தை சொல்லுங்கள் என்று அவர் கேட்பது வெட்கக்கேடான ஒரு செயல். நமக்கு பிடிக்காத ஒரு விசயத்தை நம்மிடம் கேட்பது நாகரீகமா? 



‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் மட்டும் ஜாதி வாரியாக பிரிக்கப்படுகின்றனரே! என்ன (அ) நியாயம்? மதத்தின் பெயரையோ, சாதியின் பெயரையோ சொன்னால்தான் பள்ளியில் சேர்ப்பீர் என்று அடம் பிடித்தால் அக்குழந்தையின் எதிர்காலம் என்னாவது?

உங்களுக்கு ஓட்டு வேனும் என்பதற்காக சாதியை பிரித்து வைத்து இன்னும் அடிமைப்படுத்துகின்ற அரசியல் மூடர்களே. உங்களுக்கு கோடிகளில் லாபம் கிடைக்கிறதென்றால் புதியதொரு சட்டத்தை இயற்றுவீர்கள். ஆனால், நாமெல்லாம் ஒரே ஜாதி அது தமிழன் என்றோ இல்லை எந்த மதத்தையும் எந்த ஜாதியையும் விரும்பாதவர் மதச்சார்பற்றவர் என்று சொல்லிக் கொள்ள ஒரு சட்டம் இயற்றுங்களேன்...! இப்படி ஒரு சட்டத்தை இயற்றி அதற்கு ஒரு ஜாதிய தலைவரை போடாதீர். எல்லோரும் ஒரே குலம், ஒரு இனம், ஒரே மக்கள் என்றால் யாரையும் யாரும் ஆள வேண்டிவராது. இதை உணர்வது யார் என்பதுதான் என்னுடைய கேள்வி?

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து:

  1. உண்மைதான் பாலா, இந்த மாதிரி விசயங்களால் அரசியல் வாதிகளுக்கு ஆதாயம் இல்லாததால் அவர்கள் அதை செய்வதில்லை. 49ஓ பொத்தானை வாக்குப்பதிவு எந்திரத்தில் வைக்காததும் இந்த வகையறாவே..

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு