குருஷேத்திரப் போரில் நூறு பிள்ளைகளையும் பறிகொடுத்த திருதராஷ்டிரன், ‘‘இந்த உலகில் என்னை விட அதிகமாக துயரத்தை அனுபவிப்பவன் வேறு எவரும் இருக்க முடியாது” என்று அமைச்சர் சஞ்ச யனிடம் புலம்பினான். அமைச்சரோ, ‘‘தவறுகளின் மூலம் துன்பங்கள் விளையாமல் இருக்க, தொடக்கத்திலேயே நெறி தவறாமல் ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்றார்.
மேலும், துக்கத்தில் மூழ்கிய வனிடம் செல்வம் சேர்வதில்லை. வெற்றியும் வாய்ப்பதில்லை. துக்கப்படுவதால் அமைதியின்மை கூடுமே தவிர குறையாது. ஆடையில் நெருப்பைச் சுமந்தவன், ‘சுட்டு விட்டதே’ என்று தனது செயலுக்காக நொந்து பயன் இல்லை. துயரம் அனுபவித்தால் வளரும்; மறந்தால் மறையும். உடலைப் பற்றிய நோயை மருந்தினால் ஒழிப்பது போல், துக்கத்தை அறிவினால் அழிக்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கினான்.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
அருமையான படைப்பு.. துக்கத்தில் இருந்து விடுபட அருமையான வழி சொல்லி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/