எதிரிகளை அழிக்க வேண்டிய போர் களத்திலும் கூட, தன் தாய்க்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றியவன் கர்ணன். அவனுடைய தாக்குதலில் நிராயுதபாணியான பீமனை அவன் கொல்ல விரும்பவில்லை. ஏன் தெரியுமா? ‘‘அருச்சுணனைத் தவிர உன் மக்களில் மற்ற நால்வரை நான் கொல்ல மாட்டேன்’’ என்று தாயார் குந்திக்குத் தான் கொடுத்திருந்த வாக்கு கர்ணன் நினைவுக்கு வந்தது. எனவே தன் வாக்குறுதியைக் காப்பாற்று வதற்காக, பீமனைக் கொல்லாமல் அவன் விட்டுவிட்டான்.
Kaikeyi and Dasaratha |
தசரதன் மனைவியருள் ஒருத்தி கைகேயி. போர்க் களத்தில் அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவந்தான். அவளது பணிவிடையில் தசரதன் மனம் நெகிழ்ந்தான். இரண்டு வரங்கள் அவளுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். அவள் எப்போதும் கேட்டாலும் அந்த வரங்களைக் கொடுப்பதற்குத் தான் சித்தமாயிருப்பதாகவும் சொன்னான்.
இராமனுக்கு ‘நாளை முடிசூட்டு விழா’ என்று கேள்விப்பட்டாள் கைகேயி. கைகேயி தசரதனிடம், தனக்கு கொடுப்பதாகச் சொன்ன இரண்டு வரங்களைத் தருமாறு வேண்டினாள். பரதன் முடிசூட்டிக் கொண்டு நாடாள வேண்டும். இராமன் பதினான்கு ஆண்டுகள் காடாள வேண்டும். இவையே அவள் கேட்ட இரண்டு வரங்கள்.
தசரதன் மனம் பதறினான். கேட்ட வரங்களைக் கைவிடும்படி கைகேயிடம் மன்றாடினாள். அவளோ வாதாடினாள். இறுதியில், தசரதன் மனம் நொந்து அவளைப் பார்த்து, ‘ஈந்தேன்! ஈந்தேன்! இவ்வரம்; என் சேய் வனம் ஆள மாய்ந்தே நான் போய்வான் உலகு ஆள்வான்; வசை வெள்ளம் நீந்தாய், நீந்தாய் என மகனொடும் நெடிது’ என்றானாம்.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
தசரதன் சொல்வது சரியாக புரியவில்லை.. சற்று விளக்கினால் நலம்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/