செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, ஜூலை 16, 2011

வாக்கு கற்பு போன்றது!


எதிரிகளை அழிக்க வேண்டிய போர் களத்திலும் கூட, தன் தாய்க்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றியவன் கர்ணன். அவனுடைய தாக்குதலில் நிராயுதபாணியான பீமனை அவன் கொல்ல விரும்பவில்லை. ஏன் தெரியுமா? ‘‘அருச்சுணனைத் தவிர உன் மக்களில் மற்ற நால்வரை நான் கொல்ல மாட்டேன்’’ என்று தாயார் குந்திக்குத் தான் கொடுத்திருந்த வாக்கு கர்ணன் நினைவுக்கு வந்தது. எனவே தன் வாக்குறுதியைக் காப்பாற்று வதற்காக, பீமனைக் கொல்லாமல் அவன் விட்டுவிட்டான்.

Kaikeyi and Dasaratha
தசரதன் மனைவியருள் ஒருத்தி கைகேயி. போர்க் களத்தில் அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவந்தான். அவளது பணிவிடையில் தசரதன் மனம் நெகிழ்ந்தான். இரண்டு வரங்கள் அவளுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். அவள் எப்போதும் கேட்டாலும் அந்த வரங்களைக் கொடுப்பதற்குத் தான் சித்தமாயிருப்பதாகவும் சொன்னான்.

இராமனுக்கு ‘நாளை முடிசூட்டு விழா’ என்று கேள்விப்பட்டாள் கைகேயி. கைகேயி தசரதனிடம், தனக்கு கொடுப்பதாகச் சொன்ன இரண்டு வரங்களைத் தருமாறு வேண்டினாள். பரதன் முடிசூட்டிக் கொண்டு நாடாள வேண்டும். இராமன் பதினான்கு ஆண்டுகள் காடாள வேண்டும். இவையே அவள் கேட்ட இரண்டு வரங்கள்.

தசரதன் மனம் பதறினான். கேட்ட வரங்களைக் கைவிடும்படி கைகேயிடம் மன்றாடினாள். அவளோ வாதாடினாள். இறுதியில், தசரதன் மனம் நொந்து அவளைப் பார்த்து, ‘ஈந்தேன்! ஈந்தேன்! இவ்வரம்; என் சேய் வனம் ஆள மாய்ந்தே நான் போய்வான் உலகு ஆள்வான்; வசை வெள்ளம் நீந்தாய், நீந்தாய் என மகனொடும் நெடிது’ என்றானாம்.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து:

  1. தசரதன் சொல்வது சரியாக புரியவில்லை.. சற்று விளக்கினால் நலம்.

    பகிர்வுக்கு நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு