செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

புதன், ஜூலை 20, 2011

உலகின் ஒப்பற்ற அதிசயம்!


ஹோவெர்டு பாஸ்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் பூமியின் பொக்கிஷம் என்று ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். வேற்றுக் கிரகத்திலிருந்து இருவர் பூமிக்கு வருகிறார்கள். பூமியில் மனிதர்கள் உருவாக்கியதில் மிக விசித்திரமானதும் விலை மதிப்பு இல்லாததும் எது என்று தேடி அலைகிறார்கள். வைரம், தங்கம், வியப்பூட்டும் விஞ்ஞானப் பொருள்கள் என்று எதைக் கண்ட போதும் அதைவிடச் சிறப்பாகத் ஏதோ ஒன்று இருக்கிறது என்கிறார்கள்.


WILLIAM SHAKESPEARE
முடிவில் அவர்கள் மியூஸியம் ஒன்றுக்குப் போகிறார்கள். அங்கே ஷேக்ஸ் பியர் நாடகங்களில் முதல் பிரதிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. அதை இரவு பகலாக வாசிக்கின்றனர். முடிவில் வேற்றுக் கிரக வாசிகள் எங்கள் கிரகத்தில் இல்லாதது, பூமியில் இருப்பதில் சிறந்தது ஷேக்ஸ்பியர் நாடகங்களே. இந்தப் பூமியில் உள்ள எல்லா செல்வங்களை விடவும் அற்புதமானது புத்தகம் மட்டுமே என்று ஒரு குறிப்பை வைத்து சென்று விடுகின்றனர் என்று முடிகிறது அந்த சிறு கதை.

மனிதர்களோடு நினைவுகள் அழிந்து போவது இல்லை. அவை எழுத்தில், சொல்லில், வரிகளில் ஒளிந்து கொண்டு தன்னை உயிர்பித்துக் கொள் கின்றன. புத்தகம் என்பது மூன்று கரை உள்ள ஆறு என்கிறார் கவிஞர் தேவதச்சன். உலகின் நினைவுகளும், கனவுகளும், நம்பிக்கைகளும் ஒன்று கலந்து உருவானதே புத்தகம். அதுவே உலகின் ஒப்பற்ற அதிசயம்.!

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

2 கருத்துகள்:

  1. புத்தகங்களைப் பற்றிய விழிப்புணர்வு இப்போது ஓரளவுக்கு இருக்கிறது.. ஆனால் காலப்போக்கில் எப்படி இருக்கும் என்று தெரிய வில்லை.

    அருமையான பதிவு.. பகிர்வுக்கு நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு... , பாராட்டுகள்

    பதிலளிநீக்கு