ஹோவெர்டு பாஸ்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் பூமியின் பொக்கிஷம் என்று ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். வேற்றுக் கிரகத்திலிருந்து இருவர் பூமிக்கு வருகிறார்கள். பூமியில் மனிதர்கள் உருவாக்கியதில் மிக விசித்திரமானதும் விலை மதிப்பு இல்லாததும் எது என்று தேடி அலைகிறார்கள். வைரம், தங்கம், வியப்பூட்டும் விஞ்ஞானப் பொருள்கள் என்று எதைக் கண்ட போதும் அதைவிடச் சிறப்பாகத் ஏதோ ஒன்று இருக்கிறது என்கிறார்கள்.
முடிவில் அவர்கள் மியூஸியம் ஒன்றுக்குப் போகிறார்கள். அங்கே ஷேக்ஸ் பியர் நாடகங்களில் முதல் பிரதிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. அதை இரவு பகலாக வாசிக்கின்றனர். முடிவில் வேற்றுக் கிரக வாசிகள் எங்கள் கிரகத்தில் இல்லாதது, பூமியில் இருப்பதில் சிறந்தது ஷேக்ஸ்பியர் நாடகங்களே. இந்தப் பூமியில் உள்ள எல்லா செல்வங்களை விடவும் அற்புதமானது புத்தகம் மட்டுமே என்று ஒரு குறிப்பை வைத்து சென்று விடுகின்றனர் என்று முடிகிறது அந்த சிறு கதை.
மனிதர்களோடு நினைவுகள் அழிந்து போவது இல்லை. அவை எழுத்தில், சொல்லில், வரிகளில் ஒளிந்து கொண்டு தன்னை உயிர்பித்துக் கொள் கின்றன. புத்தகம் என்பது மூன்று கரை உள்ள ஆறு என்கிறார் கவிஞர் தேவதச்சன். உலகின் நினைவுகளும், கனவுகளும், நம்பிக்கைகளும் ஒன்று கலந்து உருவானதே புத்தகம். அதுவே உலகின் ஒப்பற்ற அதிசயம்.!
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
புத்தகங்களைப் பற்றிய விழிப்புணர்வு இப்போது ஓரளவுக்கு இருக்கிறது.. ஆனால் காலப்போக்கில் எப்படி இருக்கும் என்று தெரிய வில்லை.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.. பகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/
அருமையான பதிவு... , பாராட்டுகள்
பதிலளிநீக்கு