பணம் உருவான நாள் முதலே லஞ்சமும் உருவாகிவிட்டன. ரோமானிய பேரரசு, பிரெஞ்சுப் புரட்சி, ரஷியாவின் அக்டோபர் புரட்சி மற்றும் சீனாவின் சியாங்-கை-செக் ராஜியம் போன்ற சரித்திர முக்கியத்துவம் பெற்று உருவான இப்பேரரசுகள் இழிவான முறையில் சரித்திரத்தில் இடம் பெற்றதற்கு முக்கியமான காரணம் ஊழல். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியே ஊழலுடன் தான் தொடங்கப்பட்டது. லண்டனில் உள்ள தன் சகாக்களுக்கு இந்தியாவில் ஊழல் செய்து லட்சக் கணக்கில் பணம் அனுப்பியதாக இந்தியாவின் முதல் ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் வாரன் ஹோஸ்டிங்ஸ் மீது 1797 ஆம் ஆண்டு பிரிட்ஷ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வேத, புராண காலத்திலேயே ஊழலுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. ஒன்பது தீய தலைகளைக் கொண்டு 99 வகை பேராசை மூலம் மனிதனுக்கு ஊழல் எண்ணம் உருவாவதாக சாம வேதப்பிரிவு 179 மற்றும் 913 தெரிவிக்கிறது. ராமாயணத்தில், ராவணுக்குள்ள பத்து கலைகளுள் ஒன்பது தலைகள் ‘கரப்ட்’ வகையைச் சார்ந்தது என்பதால்தான், ‘தசரா’ அன்று அந்த ஒன்பது தலைகளையும் எரிக்கும் வழக்கம் இன்று வரை உள்ளது.
அதேபோல் கவுரவ அரசன் திருதராஷ்ட்ரதனுக்கு 99 ஊழல் எண்ணம் கொண்ட மகன்கள் பிறந்ததாக மகாபாரதத்தில் தெரிவிக்கப்படுள்ளது. அரசாங்கப் பணத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் கள்வர் களுக்குச் சமம் என ரிக் வேதத்தின் 1-104-3 பிரிவு கூறுகிறது. முகஸ்துதி பாடுபவர்களும் ஒரு வகையில் ஊழல் எண்ணம் கொண்டவர்கள்தான் என்கிறது யசூர் வேதம்.
உலகில் ஏழை நாடுகளில்தான் ஊழல் பிரச்சனை அதிகமாகவும், பணக்கார நாடுகளில் குறை வாகவும் உள்ளது. அதேபோல் ஜனநாயக நாடுகளில் அதிகமாகவும், சர்வாதிகார நாடுகளில் குறை வாகவும் உள்ளது. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ‘அதுவின்றி ஒரு அணுவும் அசையாது’ என்கிற அளவில் லஞ்சம் கொடிகட்டிப் பறக்கிறது. ‘அமெரிக்காவில் ஊழல் செய்தால் ஜெயிலில் செட்டில் ஆக வேண்டியிருக்கும்; ஆனால் பிலிப்பைன்சில் ஊழல் செய்தால் அமெரிக்காவில் செட்டிலாகி விடலாம்’ என்பது பிரபல ஜோக்.
‘‘கட்சியை குழி தோண்டி புதைத்தாலும் புதைத்து விடலாமே தவிர, ஊழலை மட்டும் அனுமதிக்கவே கூடாது’’ என்று தன் காலத்தில் நிலவிய லஞ்சப் புகார்கள் குறித்து மகாத்மா காந்தி உறுதிபடக் கூறினார். ஆனால் இன்று ‘‘நம் நாட்டில் ஒரு ஆண்டில் லாரி டிரைவர்கள் தரும் சம்திங் மட்டும் 3500 கோடி ரூபாய் என்கிறது, உலகத்தில் லஞ்சத்தை ஒழிக்க தொடங்கப்பட்டிருக்கும் ஜெர்மனி நிறுவன மான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அதைம்ப்பு.’’ இப்படியே போனால்...?!
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
ஊழலின் ஊற்றுக் கண்கள் பற்றிய தகவல்கள் அருமை...திருடர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். தண்டனைகள் கடுமையானால் இது சற்று குறைய வாய்ப்பு உண்டு. ஆட்சியாளர்கள் மனசு வைக்கணும்...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/