செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, ஜூலை 22, 2011

திருடுபவர்கள் மட்டும்தான் கள்வர்களா?


பணம் உருவான நாள் முதலே லஞ்சமும் உருவாகிவிட்டன. ரோமானிய பேரரசு, பிரெஞ்சுப் புரட்சி, ரஷியாவின் அக்டோபர் புரட்சி மற்றும் சீனாவின் சியாங்-கை-செக் ராஜியம் போன்ற சரித்திர முக்கியத்துவம் பெற்று உருவான இப்பேரரசுகள் இழிவான முறையில் சரித்திரத்தில் இடம் பெற்றதற்கு முக்கியமான காரணம் ஊழல். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியே ஊழலுடன் தான் தொடங்கப்பட்டது. லண்டனில் உள்ள தன் சகாக்களுக்கு இந்தியாவில் ஊழல் செய்து லட்சக் கணக்கில் பணம் அனுப்பியதாக இந்தியாவின் முதல் ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் வாரன் ஹோஸ்டிங்ஸ் மீது 1797 ஆம் ஆண்டு பிரிட்ஷ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


வேத, புராண காலத்திலேயே ஊழலுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. ஒன்பது தீய தலைகளைக் கொண்டு 99 வகை பேராசை மூலம் மனிதனுக்கு ஊழல் எண்ணம் உருவாவதாக சாம வேதப்பிரிவு 179 மற்றும் 913 தெரிவிக்கிறது. ராமாயணத்தில், ராவணுக்குள்ள பத்து கலைகளுள் ஒன்பது தலைகள் ‘கரப்ட்’ வகையைச் சார்ந்தது என்பதால்தான், ‘தசரா’ அன்று அந்த ஒன்பது தலைகளையும் எரிக்கும் வழக்கம் இன்று வரை உள்ளது.

அதேபோல் கவுரவ அரசன் திருதராஷ்ட்ரதனுக்கு 99 ஊழல் எண்ணம் கொண்ட மகன்கள் பிறந்ததாக மகாபாரதத்தில் தெரிவிக்கப்படுள்ளது. அரசாங்கப் பணத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் கள்வர் களுக்குச் சமம் என ரிக் வேதத்தின் 1-104-3 பிரிவு கூறுகிறது. முகஸ்துதி பாடுபவர்களும் ஒரு வகையில் ஊழல் எண்ணம் கொண்டவர்கள்தான் என்கிறது யசூர் வேதம்.


உலகில் ஏழை நாடுகளில்தான் ஊழல் பிரச்சனை அதிகமாகவும், பணக்கார நாடுகளில் குறை வாகவும் உள்ளது. அதேபோல் ஜனநாயக நாடுகளில் அதிகமாகவும், சர்வாதிகார நாடுகளில் குறை வாகவும் உள்ளது. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ‘அதுவின்றி ஒரு அணுவும் அசையாது’ என்கிற அளவில் லஞ்சம் கொடிகட்டிப் பறக்கிறது. ‘அமெரிக்காவில் ஊழல் செய்தால் ஜெயிலில் செட்டில் ஆக வேண்டியிருக்கும்; ஆனால் பிலிப்பைன்சில் ஊழல் செய்தால் அமெரிக்காவில் செட்டிலாகி விடலாம்’ என்பது பிரபல ஜோக்.

‘‘கட்சியை குழி தோண்டி புதைத்தாலும் புதைத்து விடலாமே தவிர, ஊழலை மட்டும் அனுமதிக்கவே கூடாது’’ என்று தன் காலத்தில் நிலவிய லஞ்சப் புகார்கள் குறித்து மகாத்மா காந்தி உறுதிபடக் கூறினார். ஆனால் இன்று ‘‘நம் நாட்டில் ஒரு ஆண்டில் லாரி டிரைவர்கள் தரும் சம்திங் மட்டும் 3500 கோடி ரூபாய் என்கிறது, உலகத்தில் லஞ்சத்தை ஒழிக்க தொடங்கப்பட்டிருக்கும் ஜெர்மனி நிறுவன மான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அதைம்ப்பு.’’ இப்படியே போனால்...?!
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து:

  1. ஊழலின் ஊற்றுக் கண்கள் பற்றிய தகவல்கள் அருமை...திருடர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். தண்டனைகள் கடுமையானால் இது சற்று குறைய வாய்ப்பு உண்டு. ஆட்சியாளர்கள் மனசு வைக்கணும்...

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு