சரித்திர காலங்களில் ஆண், பெண் உறவுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. காட்டு மிராண்டிகளாகத் திரிந்த மனிதர்கள், நாகரீகம் அடைந்த பிறகுதான் கூட்டமாக சேர்ந்து குடியேற்றங்களை நிர்மாணித்து வாழத் தொடங்கி னார்கள். அப்போதுதான் அரசாங்கம் தோன்றியது. காலப் போக்கில் அரசு மக்களை அடிமைகளாக வைத்திருக்க ஆசைப்பட்டது. சுதந்திரம் தந்தால், மக்கள் அரசுக்கு கட்டுப்படமாட்டார்கள் என்று நினைத்தது. கடுமையான உணர்வுகள் எப்போதும் இருப்பது போல் பார்த்துக் கொண்டார்கள்.
அதே வேளையில் மேல்தட்டு ஆண்கள் எல்லை இல்லாத சுதந்திரத்தில் திளைத்தார்கள். அவர்களுக்கு ஏராளமான மனைவிகள், வேலைக்காரிகள், அடிமைகளின் மனைவிகள், போரில் பிணைக் கைதிகளாக பிடித்து வரப் பட்ட அந்நிய பெண்கள் என்று தங்கள் ஆசைக்கு எல்லாப் பெண்களையும் பயன் படுத்திக் கொண்டார்கள். அந்த ஆண்கள் எந்த அழகான பெண்ணை விரும்பினாலும் தங்கள் படுக்கையறைக்கு கூட்டி வந்து விடலாம். ஆணும், பெண்ணும் சந்தித்து, காதல் புரிந்து, பரவசத்தால் இணையும் அனுபவங்கள் எல்லாம் அப்போது கிடையாது. திருமணம் என்பது கூட சொத்து பரிவர்த்த னைக்காகதான் நடந்தது.
வேண்டா வெறுப்பாக பலர் திருமண பந்தத்தில் சிக்கினர். இதனால் திருமண உறவுக்கு வெளியே ஆண்கள் சுகம் தேட தொடங்கினர். பிரபுக்களின் குடியில் பிறந்த பலர் தங்களுக்கு சுகம் தர ஊர் முழுக்க நூற்றுக் கணக்கில் பெண்களை வைத்திருப்பது சகஜமாக இருந்தது. இந்த செக்ஸ் விசயத்தை முதன் முதலில் மேற்கத்திய நாடுகளில் ஒழுங்குப்படுத்தியது யூத மதம்தான். செக்ஸ் என்பது திருமண வாழ்க்கை யின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும். திருமணம் என்பது குழந்தை பெற்றுக் கொள்வதற்கும், அதை வளர்ப்பதற்கும் மட்டுமே உருவான உறவுமுறை என்று போதித்தது.
திருமணம் வேண்டாம் என்று பிரம்மச்சாரிகளாக வாழ்பவர்களையும், திருமணம் செய்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களையும் ஏதோ குறையுள்ள நபர்களைப் போல அன்றைய யூத சமுதாயம் பார்த்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதம் தழைக்க தொடங்கிய பிறகு, செக்ஸ் பற்றிய கட்டுப்பாடுகளும் வந்து சேர்ந்தன. அப்பட்டமாக பொது இடங்களில் செக்ஸில் ஈடுபட்ட ரோமானியர்களை கண்டித்தார், புனித பால். அவர்தான் செக்சுக்கான விதிகளை வகுத்தார். இல்லற சுகத்தை நிராகரித்து துறவற வாழ்க்கையில் பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிப்பதே மேலான வாழ்க்கை என்றார்.
ஆனால், எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. கண்ட பெண்களுடன் உறவு வைத்து நரகத்துக்கு போவதை விட திருமணம் செய்து கொண்டு மனைவியிடம் மட்டும் உறவு கொள்வது பாவம் குறையும் செயல் என்று போதித்தார். நான்காம் நூற்றாண்டில் புனித அகஸ்டின் இதை இன்னும் கடுமையாக்கினார். செக்ஸ் பற்றிய மோசமான நினைப்பை மனதில் கொண்டிருப்பது கூட பாவம் என்றார். கணவன்-மனைவி எப்படி உறவு கொள்ள வேண்டும்? என்ற முறையை தீர்மானித்தார். இந்தமுறைக்கு ‘மிஷனரி பொசிசன்’ என்று பெயர் கூட உண்டு. உலகம் முழுவதும் உள்ள மக்களில் 75 விழுக்காட்டினர் இந்த முறையில்தான் உறவை வைத்துக் கொள்கின்றனர்.
இதற்குபின் வந்த புனித தாமஸ் ஆக்யூனாஸ் திருமண உறவுக்கு வெளியே வேற்று நபர்களுடன் செக்ஸில் ஈடுபடுவது குற்றம். செக்ஸ் உறவை குழந்தை பெற்றுக் கொள்ள மட்டுமே செய்ய வேண்டும். கருவுறுதலில் முடியாத செக்ஸ் உறவு பாவம் என்றார் அவர். இதற்குபின் நிறைய மாற்றங்கள், எதிர்ப்புகள் ஏற்பட்டன. இருந்தாலும் கட்டுப்பாடற்று இருந்த செக்ஸை கட்டுக்குள் கொண்டு வந்தவை மதங்கள்தான். மேற்கத்திய நாடுகளில் இந்த மாற்றங்கள் எல்லாம் ஏற்படுவதற்கு முன்பே இந்தியாவில் குடும்ப ரீதியான அமைப்பு முறையும், செக்ஸ் பற்றிய தௌ¤வான கருத்தும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
மேல்நாட்டில் இன்னும் இது கட்டுப்பாட்டில் இல்லை. இதற்கு இன்னும் யாராவது வந்து கட்டுப்பாடுகள் கொண்டுவந்தால் தேவலாம்.
பதிலளிநீக்குஇவர்கள் நம் நாட்டையும் கெடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.
பகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/