உலகப் புகழ்பெற்ற சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ முழுமையாகப் படைத்ததே 14 சிற்பங்கள்தான். ஆனால், அவர் கை வைத்து அரை குறையாக நிற்கும் கற்களோ 30. ஒரு கால், இரண்டு கை, கண்கள், முகம் என அங்கொன்றும் இங்கொன்றுமாக வடிவமெடுத்து நின்ற கற்கள் இன்னமும் இத்தாலியிலுள்ள மியூஸியத்தில் கிடக்கின்றன. ஆனால், மைக்கேல் ஏஞ்சலோவை ஜீனியஸ் என்று உலகம் கொண்டாடுகிறது. தங்களது திறமையில் 25 விழுக்காட்டை வெளிப்படுத்துபவர்களை ஜீனியஸ் என்கிறார்கள்.
வெறுமனே 10 விழுக்காட்டை மட்டும் பயன்படுத்துவர்கள் சராசரி. அந்த ஒளிந்து கிடக்கும் 15 விழுக்காட்டைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வாழ்நாள் பயணமாக இருக்க வேண்டும். மியூஸியத்தில் கிடக்கும் அரைகுறை கற்களாக நிலைத்திருக்க வேண்டுமா என்பதை நீங்களோ அல்லது உங்கள் மனமோ முடிவெடுத்துக் கொள்ள விடுங்கள்.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
அருமையான கருத்துக்கள். உண்மையில் நம்மில் இருக்கும் நம்மை கண்டுகொண்டால் வாழ்க்கை சொர்க்கமே...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/