செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

செக்ஸ் பற்றிய பழங்கால ஆராய்ச்சிகள்!


உண்பது, வாழ்வது, இனப்பெருக்கம் செய்வது ஆகிய மூன்றும் மனித சமூகத்தின் முக்கிய கடமைகளாக கருதப்படுகின்றன.இதில் முக்கியமானது இனப்பெருக்கம் செய்தல். இதற்கான வழிமுறைகளை பல நூற்றாண்டுக ளுக்கு முன்னர், வாத்சாயனர், கொக்கோகர், வஜீகரன், பத்மஸ்ரீ, கவிசேகரன், ஜெயதேவா, கல்யானமல்லா, யசோதரா போன்ற பல அறிஞர்கள் பாலியலை ஒரு அறிவியல் துறையாக கருதி, ஆராய்ச்சி செய்து பல உண்மைகளை தொகுத்து வழங்கியுள்ளனர்.

மனித இனம் தோன்றிய போதே... ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, அனுபவ ரீதியாக வளர்க்கப்பட்டு, முதல் அறிவியல் துறையாக பாலியல்துறை இருந்துள்ளது. பழங்காலத்தில் நம் நாட்டில் காமத்தை ஒரு அறிவியல் ரீதீயாக கருதினர். காமம் என்பது நம்முடைய உள்ளுணர்வாக இருந்தாலும், அதை கலையாக வளர்த்தனர். அதற்கான விதிமுறைகள், நெறிமுறைகளை விளக்கி நூல்கள் எழுதப்பட்டன.

‘ரதி ரகஷ்யா’ என்ற நூலை கொக்கோகர் தொகுத்துள்ளார். இவர் கி.பி.1000- க்கும் 1200-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். பெண்கள் எளிதில் பாலுணர்வுத் தூண்டுதலுக்கு ஆளாகும் பகுதிகள் மற்றும் தூண்டப்படும் காலம் பற்றிய விசயங்களை மிகவும் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆண்கள், பெண்களின் 3 பிரிவுகளையும், பிறப்புறுப்பின் அளவைக் கொண்டு பாலுறவில் ஒன்பது நிலைகள் இருப்பதையும் விவரமாக குறிப்பிட்டுள்ளார்.

கவிசேகரா என்பவர் கி.பி.1300 ஆம் ஆண்டில் 'பஞ்சயாகா' என்ற பாலியல் நூலை எழுதியுள்ளார். பாலுணர்வைத் தூண்டும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வாசனைப் பொருட்கள் பற்றி நிறைய எழுதியுள்ளார். தளர்ந்த மார்பகத்தை உயர்த்தி நிறுத்தும் மருந்து போன்ற சில குறிப்பிட்ட மருந்துப் பொருட்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். இதில் மாதவிலக்கு, கருத்தரிப்பு மற்றும் மலட்டுத் தன்மை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

காம சாஸ்திரத்துக்கு 'ஜெயமங்களா' என்ற உரையை எழுதியவர் யசோதரா. கி.பி.1000-க்கும் 1300-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். ஜெயமங்களா நூல் உரையாக அல்லாமல், தனிப்பட்ட புத்தகத்தைப் போல் விளங்குகிறது. இதில் வாத்சாயனார் மற்றும் பிறரால் கையாளப்பட்ட பதங்களைப் பயன்படுத்தியுள்ளார் யசோதரா.

ஆன்மிகமும், இல்லறமும் எல்லா மனிதனுக்கும் தேவை. இந்த இரண்டையும் முழுமையாக பெறுவதன் வாழ்க்கையின் அடையாளம் என்று முன்னோர்கள் கருதினர். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை. தர்ம சாஸ்திரம்... நீதி, நெறி மற்றும் ஒழுக்கத்தின் அவசியத்தை கூறுகிறது. அர்த்தசாஸ்திரம்... பொருளாதா ரத்தைப் பற்றி விளக்குகிறது. காமசாஸ்திரம்... நம்முடைய உடலின் ஆசைகளை விவரிக்கிறது. ‘மோட்சம்’ என்பது இந்த மூன்றையும் அனுபவிப் பதால் அடையும் நிலை என்கிறது.

பாலுணர்வைப் பற்றிய முதல் நூல் ‘காமசூத்ரா.’ இதை எழுதியவர் வாத்சா யனார். இவர் கி.பி.300 முதல் கி.பி.400 வரையில் உள்ள இடைப்பட்ட காலத்தில், வாழ்ந்தவர். இந்த நூலில், காமம் என்பது கேட்டல், பார்த்தல், உணர்தல், நுகர்தல், முகர்தல் என்ற ஐம்புலன்கள் மட்டுமின்றி, மனமும், ஆத்மாவும் இணைந்து தோன்றுவது என்று குறிப்பிடுகிறார். இதில் பாலு ணர்வு நிலைகள், இன்பத்தை நீடிக்க வைக்கும் வழிமுறைகள் பயன் படுத்தும் பொருட்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.


காதல் நுணுக்கங்களைப் பற்றி விவரிக்கும் ‘ரதி மஞ்சரி’ என்ற கவிதை நூலை எழுதியவர் ஜெயதேவா. கி.பி. 1500ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் மிகச் சிறியது. அதேசமயம், சிறந்த நடையில், பாலியல் குறித்து எழுதப்பட்டுள்ளது. கி.பி. 1600 ஆம் ஆண்டில் ‘கல்யாண மல்லா’ என்பவர், தனது அரசரை மகிழ்விப்பதற்காக 'அனங்கரங்கா' என்ற நூலை எழுதி உள்ளார். இதில் தாம்பத்திய உறவை வெற்றிகரமாக நடத்துவது பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

கி.பி.1000 ஆம் ஆண்டில் வாழ்ந்த பத்மஸ்ரீ என்பவர் 'நகர சர்வஸ்வம்' என்ற நூலில் சங்கத் எனப்படும் பாலுறவுக் குறிப்புச் செய்கைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இவர், ஒரு பவுத்த துறவி. நகர சர்வஸ்வம் நூலில் காதல் மட்டுமன்றி பல்வேறு விசயங்கள் குறித்தும் விரிவாகக் எழுதியுள்ளார். மேலும் காமம் மற்றும் இனப்பெருக்கம் பற்றி அழகாக இந்த புத்தகத்தில் எழுதி உள்ளார்.

பண்டைக்கால ஆயுர்வேத மருத்துவர்களுள் சிறந்த எட்டு பேர்களில் ஒருவர் ‘வஜிகரன்’. பாலுறவில் பயன் படுத்தப்படும் வாஜிகாராணா என்ற மருத்துவப் பொருளைப் பற்றி ஆழமாக விவரித்துள்ளார். இவர், குதிரையைப் போன்ற திறனும், நீண்ட நேரம் பாலுறவு கொள்ளவும் ஏதுவான மருந்துகளைக் கண்டு பிடித்தவர். இந்த நூலில் ஆகார உணவுகள், மருந்து உணவுகள், பாலுறவுக் கான சூழல்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆழமாக விளக்கியுள்ளார்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து:

  1. மிக நுணுக்கமாக தகவல்கள் சேகரித்து கொடுத்துள்ளீர்கள். இந்த நூல்கள் இப்போதும் கிடைக்கிறதா என்பதைப்பற்றியும் விளக்கி இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு