செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

பறவைகள் நாடு விட்டு நாடு பறந்து போவது எப்படி?



இந்த இயற்கையின் அற்புதத்திற்கு பெயர் ‘பேர்ட் மைக்ரேஷன்.’ பறவைகளில் இரண்டு வகை உண்டு. 1. பிறந்த மண்ணை விட்டுப் போகாத பாசக்காரப் பறவைகள். 2. பல்வேறு காரணங்க ளுக்காக அடிக்கடி டூர் அடிக்கும் சாகசப் பறவைகள். வானிலை மாற்றங்களைச் சமாளிக்கவும், இனப்பெருக்க மாற்றங்களைச் சமாளிக்கவும், இனப் பெருக்கம் செய்யவும், குட்டிகளைப் பெற்றுப் போடவும், உணவு, தண்ணீருக்காகவும்தான் இந்த இரண்டாவது ரகப் பறவைகள் ஊர் சுற்றுகின்றன. பொதுவாக இடம் பெயரும் பறவைகள் கூட்டமாகவும், ‘வி’ வடிவத்திலும் பறக்கும்.

அப்படிப் பறக்கும்போது அவை செலவழிக்க வேண்டிய சக்தி பலமடங்கு குறைகிறதாம். எவரெஸ்ட் சிகரத்தின் அருகில் கூட பல இடம் பெயர்ந்த பறவைகளின் எலும்புக் கூடுகள் கிடைத்திருக்கின் றன. பெங்குவின் பறவைகள் 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலில் நீந்தியே இடம் பெயர்கின்றன. காட்விட்ஸ் பறவைகள் நடுவில் ஓய்வே எடுக்காமல் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நான் ஸ்டாப்பாகப் பறக்கக்கூடிய அபார ஆற்றல் கொண்டவை. பறத்தலின் போது, உடலில் உள்ள கொழுப்பே எரிசக்தியாக அமைகிறதாம்.


ஆர்டிக் கண்டத்தி லிருந்து அண்டார்டிகா கண்டம் வரை பயணம் செய்யும் ஆர்டிக் டர்ன் எனப்படும் பறவைதான் இடம் பெயர்தலில் நீண்ட தூரப் பறப்பவை. 22 ஆயிரம் கிலோமீட்டர்கள் இவை பறக்கின்றன. இடம்பெறும் பறவைகளுக்கு, தான் போக வேண்டிய வழியின் தடங்கள் எப்படித் தெரிகின்றன? ‘இன்ஸ்டிங்கட்’ என்னும் உள்ளுணர்வு என்கிறார்கள் விஞ்ஞானிகள். தான் செல்ல வேண்டிய இடம், அவற்றை காந்தம் போல் இழுக்கிறதாம். இடம் பெயரும் பறவையைத் தொடர்ந்து கண்காணித்த விஞ்ஞானிகள் அவை பாலங்கள், பெரிய கட்டடங்கள் போன்றவற்றைக் கூட அடையாளங்களாக வைத்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து: