செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, நவம்பர் 06, 2011

தூக்குத்தண்டனையிலிருந்து விடுதலை...!


1972 ஆம் ஆண்டு பஞ்சாப் முதல் மந்திரியாக இருந்த பிரதாப்சிங் கெயரோன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தயாசிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அவருடைய கடிதத்தையே மனுவாகக் கொண்டு விசாரித்த நீதிபதிகள் ஜெ.எஸ்.வர்மா, எல்.எம்.சர்மா ஆகியோர் நீண்ட காலம் அவர் சிறையில் அடைக்கப் பட்டிருந்ததை கருத்தில் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையாக குறைத்தனர்.


1983ஆம் ஆண்டு சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள், மர்மமான முறையில் உயிரிழந்தனர். இவர்களை வைத்தி என்கிற வைத்தீஸ்வரம் (19), என்பவர் விஷ ஊசி போட்டு கொன்றது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட வைத்தீஸ்வரத்திற்கு, 8 ஆண்டுகளுக்கு பிறகு, ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்து ஆணையிட்டது.

கேரள மாநிலத்தில் சி.ஏ.பாலன் என்பவருக்கு தூக்குத்தண்டனை உறுதி செய்தபோது, அப்போதைய முதலமைச்சர் இ.எம்.எஸ்.நம்பூதிபாட், சட்ட அமைச்சரும், முன்னாள் நீதிபதியுமான வி.ஆர். கிருஷ்ணய்யர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நீங்கள் ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் 161ன் விதியின்படி நாங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்கிறோம் என்றார். அதன் பின்னர் சி.ஏ.பாலனின் மரண தண்டனை நிறுத்தப்பட்டது.


கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நாயர், ஈரோட்டை சேர்ந்த கோவிந்தசாமி, தோழர் தியாகு, ஆகியோரும் தூக்கு தண்டனையில் இருந்து உயிர் தப்பியவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாவ் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் தூக்குத்தண்டனை கைதிகள் தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். இதில், அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக