1972 ஆம் ஆண்டு பஞ்சாப் முதல் மந்திரியாக இருந்த பிரதாப்சிங் கெயரோன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தயாசிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அவருடைய கடிதத்தையே மனுவாகக் கொண்டு விசாரித்த நீதிபதிகள் ஜெ.எஸ்.வர்மா, எல்.எம்.சர்மா ஆகியோர் நீண்ட காலம் அவர் சிறையில் அடைக்கப் பட்டிருந்ததை கருத்தில் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையாக குறைத்தனர்.
1983ஆம் ஆண்டு சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள், மர்மமான முறையில் உயிரிழந்தனர். இவர்களை வைத்தி என்கிற வைத்தீஸ்வரம் (19), என்பவர் விஷ ஊசி போட்டு கொன்றது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட வைத்தீஸ்வரத்திற்கு, 8 ஆண்டுகளுக்கு பிறகு, ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்து ஆணையிட்டது.
கேரள மாநிலத்தில் சி.ஏ.பாலன் என்பவருக்கு தூக்குத்தண்டனை உறுதி செய்தபோது, அப்போதைய முதலமைச்சர் இ.எம்.எஸ்.நம்பூதிபாட், சட்ட அமைச்சரும், முன்னாள் நீதிபதியுமான வி.ஆர். கிருஷ்ணய்யர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நீங்கள் ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் 161ன் விதியின்படி நாங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்கிறோம் என்றார். அதன் பின்னர் சி.ஏ.பாலனின் மரண தண்டனை நிறுத்தப்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நாயர், ஈரோட்டை சேர்ந்த கோவிந்தசாமி, தோழர் தியாகு, ஆகியோரும் தூக்கு தண்டனையில் இருந்து உயிர் தப்பியவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாவ் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் தூக்குத்தண்டனை கைதிகள் தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். இதில், அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக