செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

இதான்யா காதல்...!


முதலில் காதல் ஆண்களின் கண் வழியாகவும், பெண்களின் காது வழியாகவும் நுழைகிறது என்கிறது போலந்து நாட்டு பழமொழி. அதேசமயம், இளம் காதலர்கள் விரும்புகிறார்கள். விவேகமானவர்கள் வருந்துகிறார்கள் என்கிறது இந்திய பழமொழி. காதல் ஒருவிநாடி, ஆனால், துக்கம் வாழ்க்கை முழுவதும் என்கிறது அரேபிய பழமொழி. காதல் செய்யும் பெண், நரியை விட ஆயிரம் மடங்கு தந்திரசாலி என்கிறது பிரான்ஸ் நாட்டு பழமொழி. கல்வீடு என்பது சுவர்களாலும், தூண்களாலும் ஆனது, காதல்வீடு என்பது அன்பும், கனவும் நிறைந்தது என்கிறது இந்திய பழமொழி.


காதலைப் பற்றிப் பேசும்போது பலமாகப் பேசாதீர்கள் மெதுவாகப் பேசுங்கள் என்கிறார் எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவை இல்லை. காதல் வந்து விட்டால் அழகு தேவையில்லை என்கிறார் ஆப்ரகாம் லிங்கன். அதேநேரத்தில், அழகைப் பார்த்து வருவதில்லை காதல். ஆனால் காதலிக்கப்படுபவர்கள் எல்லோரும் அழகானவர்கள் என்கிறது இந்திய பழமொழி. இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். உண்மையான காதலுக்கு முதுமையே கிடையாது. காதலுக்கு ஆதரவு இல்லாவிட்டாலும் அதை அழிக்க முடியாது. காதலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஒருவர் மீது ஒருவர் அவர்களே தானாக காதல் வலையில் சிக்குகிறார்கள்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

4 கருத்துகள்:

  1. காதல் பற்றிய பாடம் நடத்தி இருக்கிறீர்கள்...

    பகிர்வுக்கு நன்றி

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. காதலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஒருவர் மீது ஒருவர் அவர்களே தானாக காதல் வலையில் சிக்குகிறார்கள்.
    yes....very fact...

    பதிலளிநீக்கு
  3. காதலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஒருவர் மீது ஒருவர் அவர்களே தானாக காதல் வலையில் சிக்குகிறார்கள்.


    ஆம்....உண்மைத்தான்....நீங்கள் எப்படி.... இந்த காதல் இருக்கிறதே,....கொடுமை...

    பதிலளிநீக்கு