செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, செப்டம்பர் 17, 2011

இதற்கா தூக்குத்தண்டனை கொடுப்பீர்கள்?


பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் ராஜிவ்காந்தி கொலைக்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. எனவே இவர்களுக்குத் தூக்குத்தண்டனை கொடுக்கக்கூடாது என்பதுதான் தமிழர்களின் கருத்து. இவர்கள் செய்த குற்றம் என்ன?  ஒன்றுமில்லை. 

சாந்தன், சிவராசன் சொல்லும் வேலைகளைச் செய்து வந்தான். சிவராசன், ராஜிவ்காந்தி கொலையுடன் தொடர்புடைய வேலைகள் எதனையும் இவருக்குக் கொடுக்கவில்லையாம். பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வது ஆகிய வேலைகளை மட்டும்தான் இவருக்கு சிவராசன் கொடுத்தாராம்.


தமிழகத்தில் உள்ள தலைமைச்செயலகம், வேலூர் கோட்டை போன்ற முக்கியமான கட்டடங்கள் அமைப்பில் ஈழத்தில் கட்டடங்கள் கட்ட விடுதலைப்புலிகள் விரும்பினார்களாம். இதற்காக அந்தந்த இடங்களை புகைப்படம் எடுக்கும் வேலை முருகனுக்குத் கொடுக்கப்பட்டதாம். நளினி வீட்டில் தங்கியிருந்த போது இவருக்கும் நளினிக்கும் காதல் ஏற்பட்டதாம்.

தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் வரும் விடுதலைப்புலிகள் தொடர்பான செய்திகளைச் சேகரித்து பேபி சுப்பிரமணியத்துக்கு அனுப்பும் வேலை பேரறிவாளனுக்கு கொடுக்கப்பட்டதாம். நளினி வீட்டில் தங்கியிருக்கும் போது இவருக்கும் சிவராசனுக்கும் தொடர்பு ஏற்பட்டதாம். அந்தத் தொடர்பில் அவர் கேட்டுக் கொண்டதற்காக, சிவராசனுக்கு மோட்டார் சைக்கிளும் பேட்டரியும் பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தாராம்.

இவ்வளவுதான் இவர்கள் செய்துள்ளது. மற்றபடி ராஜீவ்காந்தி கொலை சதிச் செயலில் இவர்கள் நேரடியாக ஈடுபடவில்லையாம். கொலை நடந்த இடத்தில் இவர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாம். அதனால் இவர்கள் கொலையாளிகள் அல்ல.!அல்ல.!அல்ல.! புரிகிறாதா என்கிறார்கள் தமிழர்கள். இதற்கு யார் பதில் சொல்லனுமோ அவர்கள் சொன்னால் சரியாய் இருக்கும்.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும்  உங்கள் பாலமுருகன்.

2 கருத்துகள்:

  1. What are you trying to say here. Really i dont understand your side. If you write like this, How can you achieve your life ambition ??
    If you want to become a renowned journalist, you should show the clear side of the truth.
    I don't think you can be a good journalist. Even i don't think any one can offer you a job. Better try Politics. Because your always praised you on your own profile . :( Better grow up man.

    பதிலளிநீக்கு
  2. இவர்களுக்குத் தூக்குத்தண்டனை கொடுக்கக்க வேண்டும். தூக்குத்தண்டனை இவர்களுக்கு கொடுக்க கூடாது என்பது தமிழ்நாட்டின் அவமானம்.

    பதிலளிநீக்கு