செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

நாடாளுமன்றம் பற்றி தெரியுமா?



இந்திய நாடாளுமன்றக் கட்டடம் ‘சன் சாத்பவன்’ என்று அழைக்கப்படுகிறது. இது 1921 ஆம் ஆண்டு தொடங்கி 1927 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடம் ஏறத்தாழ ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் நடைப்பாதைகயில் 144 அகன்ற தூண்கள் உள்ளன. இந்தக் கல்தூண்களின் உயரம் 82 மீட்டர். நாடாளுமன்றத்துக்கு 12 நுழைவு வாயில்கள் உள்ளன. நாடாளுமன்றத்தில் மேலவை, கீழவை என இரு அவைகள் உண்டு. ஆண்டுக்கு மூன்று முறை கூட்டத் தொடர் நடைபெறும்.

1. பட்ஜெட் கூட்டத்தொடர். இவை, பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நடை பெறும். 2. மழைக்காலக் கூட்டத்தொடர். இவை, ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். 3. குளிர்காலக் கூட்டத்தொடர். இவை நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெறும்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து: