செர்னோபில் அணு உலை:
1986, ஏப்ரல் 26ம்தேதி ஆண்டு உக்ரைன் நாட்டில் செர்னோபில் அணுஉலை வெடித்து சிதறியது. அப்போது நிகழ்ந்த இந்த விபத்தின் தாக்கம் இன்றும் நீடிக்கிறது. 1986 முதல் 2000 வரை மூன்று லட்சத்து 50 ஆயிரத்து 400 மக்கள் வெளியேற்றப்பட்டு, மறுகுடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் நான்காயிரம் பேர் உயிரிழந்ததாக கூறுகிறது. ஆனால் உயிழிழப்பு இதைவிட அதிகமாக இருக்கலாம்.
புகுஷிமா அணு உலை:
2011, மார்ச் 11ம் தேதி ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டதில், அங்குள்ள புகுஷிமா, டைச்சி அணு உலைகளை நீரில் மூழ்கின. இதனால் தானியங்கி பேட்டரி, ஜெனரேட்டர் உட்பட பாதுகாப்பு இயந்திரங்கள் அனைத்தும் செயல் இழந்தன. அலை உலைகளை குளிர்விக்க தண்ணீர் இல்லாததால் அதில் இருந்த ஹைட்ரஜன் அதிக வெப்பமாகி யுரேனியம் உருகி விட்டது. இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சால் அங்கு 30 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். விபத்து நடந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும், அப்பகுதியில் உள்ள மண், தண்ணீரில் கதிரியக்க தன்மை உள்ளது. தற்போது அங்கு மழை பெய்தால் கூட கதிர்வீச்சு அதிகமாக உள்ளது.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக