செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

பாதிக்கப்பட்ட அணு உலைகள்.!


செர்னோபில் அணு உலை:


1986, ஏப்ரல் 26ம்தேதி ஆண்டு உக்ரைன் நாட்டில் செர்னோபில் அணுஉலை வெடித்து சிதறியது. அப்போது நிகழ்ந்த இந்த விபத்தின் தாக்கம் இன்றும் நீடிக்கிறது. 1986 முதல் 2000 வரை மூன்று லட்சத்து 50 ஆயிரத்து 400 மக்கள் வெளியேற்றப்பட்டு, மறுகுடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் நான்காயிரம் பேர் உயிரிழந்ததாக கூறுகிறது. ஆனால் உயிழிழப்பு இதைவிட அதிகமாக இருக்கலாம்.

புகுஷிமா அணு உலை:


2011, மார்ச் 11ம் தேதி ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டதில், அங்குள்ள புகுஷிமா, டைச்சி அணு உலைகளை நீரில் மூழ்கின. இதனால் தானியங்கி பேட்டரி, ஜெனரேட்டர் உட்பட பாதுகாப்பு இயந்திரங்கள் அனைத்தும் செயல் இழந்தன. அலை உலைகளை குளிர்விக்க தண்ணீர் இல்லாததால் அதில் இருந்த ஹைட்ரஜன் அதிக வெப்பமாகி யுரேனியம் உருகி விட்டது. இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சால் அங்கு 30 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். விபத்து நடந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும், அப்பகுதியில் உள்ள மண், தண்ணீரில் கதிரியக்க தன்மை உள்ளது. தற்போது அங்கு மழை பெய்தால் கூட கதிர்வீச்சு அதிகமாக உள்ளது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக