செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், டிசம்பர் 13, 2011

மோடியா கொக்கா?


வாட்நகர் என்ற சின்னக் கிராமத்தில், மத்தியதரக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர் நரேந்திர மோடி. இன்று நாடறிந்த முதலமைச்சர்களில் ஒருவர். பள்ளியில் படிக்கும் போதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் கவரப் பட்டு அதன் மாணவர் அணியில் தீவிர உறுப்பினராக இயங்கி, கல்லூரியில் காலெடுத்து வைக்கும்போது ஆர்.எஸ்.எஸ்.சின் மாநிலக் குழு உறுப்பினரானார். குஜராத் பல்கலைக்கழகத்தில் பொலிட்டிகல் சயின்ஸ் பாடத்தை விரும்பி எடுத்து அதில் எம்.ஏ. பட்டம் வாங்கியவர்.


1975ல் படிப்பு முடிந்த காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்து எழுந்த போராட்டத்தில் இவர் பல புதிய தொண்டர்களைச் சேர்த்து கட்டுக்கோப்பாக இயக்கிய திறமையைக் கவனித்த ஆர்.எஸ்.எஸ்.சின் மேலிடம், பா.ஜ.க.வின் உறுப்பினராக்கி பொறுப்புக்களை கவனிக்கப் பணித்தது. அப்போது தரப்பட்ட முக்கியப் பணிகளில் ஒன்று, சோம்நாத் திலிருந்து அயோத்திக்கான அத்வானியின் ரதயாத்திரை. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான மற்றொரு ரதயாத்திரை. பயணத் திட்டங்களையும் கூட்டங்களையும் கச்சிதமாகத் திட்டமிட்டு வெற்றியாக்கிக் காட்டியதில் மகிழ்ந்த அத்வானி, 1995ல் இவருக்கு அளித்த பொறுப்பு, கட்சியின் தேசியச் செயலாளர்.

2001ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஏற்பட்ட தோல்வியையடுத்து குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த கேசுபாய் படேலைப் பதவி விலகச் சொல்லி, புதிய முதலமைச்சராக மோடியை நியமித்தது கட்சித் தலைமை. இவர் பதவியேற்ற நேரத்தில், சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக பொருளாதாரத்தில் மிக மோசமான நிலையில் இருந்தது குஜராத் மாநிலம். இன்று அது இந்தியா விலேயே பொருளாதார வளர்ச்சியில் (ஆண்டுக்கு 10 விழுக்காடு) முதல் மாநிலம். இந்த மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. மது விற்பனை மூலம் அரசுக்கு வருமானம் வருவதில்லை.


இவர் முதலமைச்சராக பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் 2002 பிப்ரவரியில் குஜராத்தில் மதக்கலவரம் வெடித்தது. சிறுபான்மை சமூகத்தினர் மிக மோசமாக பாதிப்புக்குள்ளானபோது மோடி அரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது என்றும், அந்தக் கலவரத்தை மறைமுகமாக ஊக்குவித்ததென்றும் மற்ற கட்சிகள் இப்போதும் கூறி வருகின்றன. இதையடுத்து எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவை கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தது. 182 இடங்கள் உள்ள சட்டப்பேரவையில் 127 இடங்களை மோடி தலைமையில் பா.ஜ.க. கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.

இஸ்லாமியரின் எதிரியாகச் சித்தரிக்கப்படும் மோடி, அரசின் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இந்துக் கோவில்களையும் இடிக்க உத்தரவிட்டவர் என்பது ஊடகங்கள் அதிகம் வெளியிடாத செய்தி. மூன்றே உதவியாளர் களை வைத்துக்கொண்டு பணியாற்றும் கடின உழைப்பாளி. குஜராத்தில் தொடர்ந்து நீண்டகாலம் முதலமைச்சர் பதவியில் இருந்து வருபவர் என்ற பெருமைக்குரியவர் மோடி. இந்த 61 வயது முதலமைச்சர் திருமணம் குறித்து சர்ச்சைகள் நிலவுகின்றன.

குழந்தைப் பருவத்தில் அவருக்கு மணம் செய்து வைக்கப்பட்டது என்றும் ஆனால் அவர் வளர்ந்தபின் மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்கிறார் என்றும் சில தகவல்கள் சொல்கின்றன. வலைப்பூவிலும் (www.narendramodi.com), ஃபேஸ்புக்கிலும் (www.facebook.com/narendramodi), டிவிட்டரிலும் (www.twitter.com/narendramodi) சந்திக்கக் கூடிய ஒரு மாடர்ன் முதலமைச்சர் மோடி.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து:

  1. Your said modi resigned and won again at gujarat .

    But Former PM Vajpayee said on June 12, 2004 about Parliament election defeat "Gujarat riots a cause of defeat".

    "மோடி ஒரு கானல் நீர்"

    பதிலளிநீக்கு