செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, அக்டோபர் 07, 2011

ஹால்மார்க்கின் அவசியம் என்ன?


தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. இவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்கும் நகைகளின் உண்மையான மதிப்பு குறித்து சரியாக தெரிவதில்லை. நகைகளை வாங்குவோருக்கு அது 22 காரட்டா, 20 காரட்டா என்பதில் சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதைப் பயன்படுத்தி ஒரு சில கடைகளில் 20 காரட் தங்க நகைகளை 22 காரட் என்று கூறி விற்பனை செய்வதாக புகார் கூறப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஹால் மார்க் முத்திரை பதிக்கப்பட்ட நகைகளை வாங்குவது சிறந்தது.

தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் இந்திய தர நிர்ணய நிறுவனம் (பி.ஐ.எஸ்.) 2000ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனத்தில், ஹால்மார்க் தங்க நகைகளை விற்க விரும்பும் வியாபாரிகள், பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பதிவுபெற்ற வியாபாரிகள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை இடப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்ய முடியும்.

ஐந்து முத்திரைகள்:

ஹால்மார்க் தங்க நகைகளில் பி.ஐ.எஸ். முத்திரை, தங்கத்தின் நேர்த்தி முத்திரை (916), ஹால்மார்க் நடுவத்தின் முத்திரை, ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு, நகை விற்பனையாளரின் முத்திரை என ஐந்து முத்திரைகள் காணப்படும். இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது. பூதக்கண்ணாடி மூலம் இந்த ஐந்து முத்திரைகள் இருக்கின் றனவா? என்பதை சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு முத்திரை குறைந்தாலும் அது ஹால்மார்க் தங்க நகை என்ற அந்தஸ்தை இழந்துவிடும்.
23 காரட், 22 காரட், 21 காரட், 18 காரட், 17 காரட், 14 காரட், 9 காரட் நேர்த்தித் தன்மை கொண்ட நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. மேலும் ஹால்மார்க் நகைகளுக்கு அதன் விலையில் இருந்து கூடுதலாக ரூ.20 மட்டும் செலுத்த வேண்டும். அதாவது நாம் எத்தனை கிராம் நகை வாங்கினாலும், கட்டணம் ரூ.20 மட்டுமே. நகை வாங்குவதற்கான ஆதாரமாக வாட் வரி செலுத்தப்பட்டு ரசீது பெற்றிருக்க வேண்டும். ஹால்மார்க் தங்கநகையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்ற நடுவங்களில் சோதனை செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் ரூ.100.

புகார் தெரிவிக்கலாம்: ஹால்மார்க் அங்கீகாரம் பெறாத நகைக் கடைகளில், ஹால்மார்க் பெயரில் தங்க நகை விற்பனை செய்வதாக தெரியவந்தால், தொடர்புடையவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம். இதில் ஏதேனும் சந்தேக ங்கள் இருப்பின் 044-22541442, 044-22541216 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து:

  1. http://www.hindu.com/2011/06/24/stories/2011062453990700.htm

    Caution against using iridium, ruthenium in gold ornaments

    Special Correspondent
    Study says iridium isotopes carcinogenic: court

    BIS Director asked to appear before court on June 27

    Kochi: A Division Bench of the Kerala High Court on Thursday observed that the Central and State governments should be alert to the health hazards arising from the mixing of iridium and ruthenium with gold in ornaments by manufacturers.

    The Bench of Justice A.K. Basheer and P.Q. Barkathli pointed out that as per a study, the isotopes of iridium were highly carcinogenic. It was unfortunate that the issue had not been given priority.

    The court made the observation while hearing a case initiated suo motu on the basis of a letter in this regard.

    The Director, Bureau of Indian Standard (BIS), in an affidavit, submitted that an amendment proposed to the BIS Act was in limbo owing to differences of opinion between the Union Ministries of Commerce and Consumer Affairs.

    The proposed amendment mandated that gold alloys used for making ornaments and artefacts should be free of iridium and ruthenium.

    BIS stance

    The Director said the hallmarking of gold ornaments was voluntary and, therefore, no action could be taken against jewellers who did not do hallmarking.

    The court impleaded the Ministries of Commerce and Consumer Affairs as respondents and directed the Director, BIS, Thiruvananthapuram, to appear before the court on June 27.

    பதிலளிநீக்கு