செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

பெட்ரோல் - இப்போது எவ்வளவு?


இந்தியாவில் பெட்ரோல் விலை கடந்த 22 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ் சமாக லிட்டருக்கு 62 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 8.50 ஆக இருந்தது. டீசல் லிட்டர் 3.50 ஆக இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் (1994 பிப்ரவரியில்) பெட்ரோல், டீசல் விலை இரண்டு மடங்காக முறையே 16.78, 6.98 ஆக அதிகரித்தது. இதன் பிறகு படிபடியாக உயர்ந்து 2005ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை 43.49 ஆகவும்,டீசல் 30.45ஆகவும் விற்பனையானது. 2010ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை 53 ஆக அதிகரித்தது.


இதன்பிறகு, பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவ னங்கள் உள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், நடுவண் அரசு, பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது. அதாவது, சந்தை நிலவரப்படி, எண்ணெயை சந்தைப் படுத்தும் நிறுவனங்கள், பெட்ரோலின் விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளித்தது.
இதன் காரணமாக, இதுவரை இல்லாத அளவிற்கு மே-15 அன்று லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியது. தற்போது சென்னையில், டீசல் 43.95 ரூபாயும், சமையல் கியாஸ் 404.40 ரூபாயும், மண்ணெண்ணெய் 13.54 ரூபாயாகவும் உள்ளன. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 70.63 ரூபாயாகவும் இருக்கின்றன.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து:

  1. பெட்ரோல் விலை ஏற்றம் அவசியமா? பெட்ரோல் விலை உயர்வு உண்மைகள்? என்று கொஞ்சம் அலசி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்... பட், பெட்ரோல் விலை உயர்வின் வரலாறு அருமை..

    பதிலளிநீக்கு