இந்தியாவில் பெட்ரோல் விலை கடந்த 22 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ் சமாக லிட்டருக்கு 62 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 8.50 ஆக இருந்தது. டீசல் லிட்டர் 3.50 ஆக இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் (1994 பிப்ரவரியில்) பெட்ரோல், டீசல் விலை இரண்டு மடங்காக முறையே 16.78, 6.98 ஆக அதிகரித்தது. இதன் பிறகு படிபடியாக உயர்ந்து 2005ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை 43.49 ஆகவும்,டீசல் 30.45ஆகவும் விற்பனையானது. 2010ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை 53 ஆக அதிகரித்தது.
இதன்பிறகு, பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவ னங்கள் உள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், நடுவண் அரசு, பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது. அதாவது, சந்தை நிலவரப்படி, எண்ணெயை சந்தைப் படுத்தும் நிறுவனங்கள், பெட்ரோலின் விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளித்தது.
இதன் காரணமாக, இதுவரை இல்லாத அளவிற்கு மே-15 அன்று லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியது. தற்போது சென்னையில், டீசல் 43.95 ரூபாயும், சமையல் கியாஸ் 404.40 ரூபாயும், மண்ணெண்ணெய் 13.54 ரூபாயாகவும் உள்ளன. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 70.63 ரூபாயாகவும் இருக்கின்றன.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
பெட்ரோல் விலை ஏற்றம் அவசியமா? பெட்ரோல் விலை உயர்வு உண்மைகள்? என்று கொஞ்சம் அலசி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்... பட், பெட்ரோல் விலை உயர்வின் வரலாறு அருமை..
பதிலளிநீக்கு