செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், நவம்பர் 01, 2011

வர்ணஜாலம் காட்டும் ரங்கோலி.!


நமது இந்து கலாச்சாரத்தில் வீட்டின் முன் தினமும் கோலமிடுவது மங்களச் சின்னமாக கருதப்படுகிறது. தற்போது விழாக்கள், விசேஷங்கள் போன்றவற்றிற்கு கலர் பொடிகள் கொண்டு கோலமிடுவது வழக்கத்தில் உள்ளது. இதில் ரங்கோலி எனப்படுவது வண்ணங்களின் அணிவகுப்பாகும். இந்த ரங்கோலி கோலங்கள் மகாராஷ்டிரா மாநிலத் திலிருந்து தொடங்கி மெல்ல இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது. 

இந்த ரங்கோலி தென் இந்தியாவில் கோலம் என்றும், வட இந்தியாவில் சவுக்பூரணா என்றும், ராஜஸ்தானில் மதனா என்றும், பீகாரில் அரிபனா என்றும், வங்காளத்தில் அல்பனா என்றும் அழைக்கப்படுகிறது. கோலங்கள் பற்றிய ஒரு சுவராசியமான கதை ஒன்று உண்டு. அக்காலத்தில் இருந்த ஒரு மன்னனின் நாடும், மக்களும் அந்நாட்டு இளவரசனின் மரணத்தினால் மிகவும் துக்கமடைந்திருந்தது. எல்லோரும் பிரம்மாவை வேண்டி அழுதனர்.


பிரம்மா, அவர்கள் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து மன்னரிடம், இளவரசனைப் போன்ற உருவப் படத்தை தரையில் வரையும் படியும் அந்த படத்திற்கு தாம் உயிர் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படியே இளவரசன் உயிர் பெற்றெழுந்தான் என்பது புராணக் கதை. அதிலிருந்து உயிரோட்டமுள்ள கோலம் உருவானது என்று நம்பப்படுகிறது. இதனாலே மலர்கள், அரிசி மற்றும் மாவின் மூலமாக கோலமிட்டு இறைவனை வணங்குகின்றனர். மேலும், கலர் பொடிகளைத் தவிர மலர்களைக் கொண்டும் தற்போது ரங்கோலி வரைகின்றனர்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக