செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, பிப்ரவரி 18, 2012

காதல் பள்ளிக்கூடங்கள்..!


காதலை கற்றுத்தர தற்போது பல ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால், பழங்காலத்தில் இத்தகைய வசதிகள் இல்லை. அதனால், கோவில்களில் காதலை கற்றுத் தரும் விதமாக சிலைகள் அமைத்தார்கள். இந்த வகையில் முழுக்க முழுக்க ஆண், பெண் உடலுறவு தொடர்பான விசயங்களை மட்டுமே கொண்டு சிலைகள் வடிவமைக்கப் பட்டன. இவற்றைதான் ‘காதல் பள்ளிக் கூடங்கள்’ என்று அழைக்கிறார்கள்.


மத்தியப்பிரதேசத்தின் ஒரு மூலையில் அமைந்துள்ள சிற்றூர் கஜூராஹோ. அந்த சின்ன ஊரின் கோவில் கற்களில் செதுக்கப்பட்டிருக்கும் அழகிய சிற்பங்களை சிற்றின்ப கண்கொண்டு பார்ப்பதா அல்லது பேரின்ப உணர்வுடன் காண்பதா என்று விளங்காமல் ஆன்மிகவாதிகளே திகைக்கிறார்கள். அந்த சிற்பங்கள் ஆண், பெண்ணின் பிறந்த மேனி, அங்க அழகுகளை அற்புதமாக சித்தரிக்கின்றன. போதாக்குறைக்கு ஆண், பெண் உடலுறவு காட்சிகளை விதவிதமாக வகை வகையாக விளக்குகின்றன.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கஜூராஹோவில் சண்டெல்லா என்ற அரச பரம்பரையினர் ஆட்சி நடத்தி வந்தனர். அவர்கள் சிற்றின்பப் பிரியர்கள். பெண்ணிடம் இன்பம் காண்பதுதான் பிறவி எடுத்த தன் பெரும் பயன் என்று கருதியவர்கள். அவர்கள் காலத்தில் கோவில் பணிக்கென ஆயிரக்கணக்கில் தாசிகள் இருந்தனர். ஆலய தாசிகள் என்றாலே அவர்கள் அரண் மனைக்கும் தாசிகளாதானே இருக்க முடியும். அவர்களுடன் கூடி பல விதங்களில் தாங்கள் அனுபவித்த இன்ப விளையாட்டு களை நிரந்தரப்படுத்தி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சண்டெல்லா வம்ச அரசர்கள் இத்தகைய சிலைகளை அமைத்தனர்.

இந்த சிற்பங்களைக் காண உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.ஒரிசா மாநிலத்தில் கொரைக் என்ற இடத்தில் அமைந்துள்ள அற்புதமான பழங்கால சிற்பங்கள் காணப்படுகின்றன. சிற்பங்கள் அமைந்திருக்கும் இந்த இடத்தை ‘காதல் பள்ளி’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த சிற்பங்கள் அனைத்துமே ஆண், பெண் உடலுறவு கொள்ளும் காட்சியை விதவிதமாக சித்தரிக்கின்றன.

கொரைக் சிலைகள் ஆபாசம் என்ற நினைவு எழாத வகையில் அற்புதமான கலை வளர்ச்சி மிளிர இந்த சிற்பங்களை அமைத்துள்ளனர். அந்த காலத்தில் காதலை கற்றுத் தரும் பள்ளிக் கூடங்களாக இந்த இரண்டு இடங்களும் அமைந்திருக்கின்றன.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக