செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், மார்ச் 22, 2012

உலகம் அழியுமா?


தென் அமெரிக்காவின் ஆதி நாகரிங்களுள் ஒன்றான மாயா நாகரிக மக்களின் நாள் காட்டி 2012 டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் அழியும் என ஆருடம் கூறி பீதியை கிளப்பியிருக்கிறது. மாயர்களது கணிப்புகளையும், அந்த கணிப்பிற்கு எதிரான வாதங்களையும் சற்றே அலசலாம்.


நட்சத்திர மண்டலம்:

நட்சத்திர மண்டலத்தில் ஒரு நாள் என்பது பூமியைப் பொறுத்தவரை 25 ஆயிரத்து 625 வருடங்கள். மாயர்கள் காலக்கணிதம் இந்த ஆண்டுகளை 5கால கட்டங்களாப் பிரிக்கிறது. நாம் இப்போது இருப்பது ஐந்தாவது காலக்கட்டத்தின் இறுதிப்பகுதி. இந்த காலக் கட்டம் முடிந்த பிறகு அதாவது டிசம்பர் 21, 2012-க்குப் பிறகு புதிய யுகம் பிறக்கப் போகிறது என்கிறது அவர்களது காலக்கணிதம். சூரியன் நட்சத்திர மண்டலத்தின் மையப்பகுதியால் புதுப்பிக்கப்படுகிறது என்றும், இந்த நிகழ்வு 5,125 வருடங்களுக்கொரு முறை நடைபெறும் எனவும் அவர்கள் கணிதுள்ளனர்.

இதன்படி, 2012-ல் இத்தகையதொரு செயற்பாடு நடைபெற இருக்கிறது என்றும், இதனால் பூமியின் காந்தப்புலன்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுமெனவும் சொல்லப்படுகிறது. அப்போது உயர் சக்தியுடைய கரும் ஈர்ப்பு மையம், சூரியன், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்குமாம். இந்த கரும் ஈர்ப்பு மையத்தினால் மூன்றும் நேர்கோட்டில் வரும்போது பூமியும், சூரியனும் வெகுவாக பாதிக்கப்படும் என்பது தான் மாயர்களின் கணிப்பு. அப்போது பூமியினுடைய காந்தப் புலன்கள் திசை மாறும் எனப்படுகின்றது.


இதனால் துருவங்கள் இடம் மாறுவதுடன் அதுவே பூமியின் அழிவுக்கு வழிகோலும் என்கிறார்கள். எரிமலை வெடிப்புக்கள், சுனாமிகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பூமி அழிந்துவிடும் என்கிறது மாய நாள்¢காட்டி கணிப்பு. துருவங்களின் இடமாற்றத்தி னால் பூமி ஒளியின்றி 40 வருடங்கள் இருண்டு பூமியை புகை மண்டலங்கள் மறைக்கும் எனப்படுகிறது. துருவங்களின் இடப்பெயர்ச்சி என்பது விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப் பட்ட கருத்துதான் என்றாலும் அது 2010-ல் நிகழுமா என்பது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

கலியுகம்:

மத்திய காலத்தில் வாழ்ந்த எதிர்காலம் பற்றி கணிப்பதில் வல்லுநரான நொஸ்ராடமஸ் முதல் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் வரை இனி வரும் காலங்களில் பூமியில் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகலாமென எதிர்வு கூறுகின்றனர். நொஸ்ராடமஸ், ஹிட்லர், நெப்போலியன் போன்றோரின் ஆதிக்கம் வீழ்ச்சி பற்றி கூறிய கணிப்புகள் அப்படியே நிகழ்ந்தன. அவர் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் பற்றியும் தன் கணிப்பில் கூறியிருந்தார். இவரும் 2012-ல் உலகில் பெரிய மாற்றங்கள் நிகழும் என்று கணித்திருக்கிறார்.


இ-சிங் எனப்படும் பண்டைய சீன ஜோதிட முறை எதிர்காலத்தைக் கூறும் வழிகாட்டி யாகக் காணப்படுகிறது. இந்த ஜோதிடமும் 2012 உடன் காலக்கெடு முடிவதாகவும் உலகம் அழிய நேரிடும் என்று கூறுகிறது. கலியுகம் ஆரம்பித்து 5,000 வருடங்களின் பின்னர் சுவர்ண யுகமொன்று தோன்றுமெனவும் அது பத்தாயிரம் வருடங்களுக்கு நிலைக்குமெனவும் கிருஷ்ண பகவான் கங்கா தேவிக்குக் கூறியதாக பிரம்மவை வர்த்த புராணத்தில் குறிப்பிடப்படுகிறது. மாயர்களைப் பொறுத்தவரையில் 5 ஆவது காலக்கட்டம் கி.மு.3114-ல் ஆரம்பித்து இந்துக்களைப் பொறுத்தவரையில் கலியுகம் கி.மு.3102-ல் ஆரம்பித்தது.

புதுயுகம்:

மாயர்களும் இந்துக்களும் தமக்குள் எந்தவித நேரடித் தொடர்புகளு மில்லா மலே 2012-ம் ஆண்டு ஒரு புதிய உலகம் உருவாகுமென்பதை கணித்துள்ளனர். கலியுகம் இப்படித்தான் இருக்குமென இந்து மதம் கூறுகிறது. கலியுகத்திலே கோபமும், போட்டிகளும் பொறாமையும் நிலவும்.


மனித நேயம் இருக்காது. தீய பழக்கங்களுக்கு மக்கள் அடிமையாவர், நீதி நியாயங்கள் தழைக்காது. தர்மம், உதாசீனப்படுத்தப் படும். இவையாவுமே கலியுகத்தின் வெளிப்பாடுகளாகக் குறிப்பிடப்படுகின்றன. இதன்படி உலகம் அழியப்போவதில்லை. தன்னைப் புதுப்பித்துக் கொள்ளப்போகிறது எனக்கூறலாம். கலியுகத்தின் எதிர்மறைச் செயல்கள் மறைந்து மனித நேயமிக்க நீதி, நியாயம் கூடிய புதுயுகம் ஆரம்பிக்கப் போகிறது எனச் சொல்லப்படுகிறது.

திருவிவிலிய நூலில் உலகம் (2012-ல் அழிந்துவிடும் என்று குறிப்பிடப்படவில்லை.) அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளதால், கடவுளுக்கும், சாத்தானுக்கும் கடைசி யுத்தம் நடக்கும்போது இந்த அழிவு நடக்கும் என்கிறது பைபிள். யுத்த முடிவில் கடவுள் தன் இறுதித் தீர்ப்பை பெருவெள்ளம், ஆழிப்பேரலை, பூகம்பம், கடல் கொள்ளுதல் என எந்த இயற்கை நிகழ்வு மூலமாகவும் வெளிப்படுத்தலாம் என்கிறது விவிலியம். அந்த இறுதி தீர்ப்பு 2012-ல் வரக்கூடும் என்பது சிலரது கருத்து.

எரிமலை வெடிக்கும்:


இந்த பூமியின் ஆயுள் எப்போதோ முடிந்து விட்டதாம். இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவும், 2012-ல் அழிவின் உச்சகட்டம் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள். இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றின் வாயில் இருப்பதா கவும், அது வெடித்துச் சிதறினால் உலகம் தூள்தூளாகிவிடும் என்றும் அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆறு லட்சத்து 50 ஆயிரம் ஆண்டு களுக்கு ஒருமுறை இந்த எரிமலை வெடிக்குமாம். அப்படிப்பார்த்தால், இந்த 2012-ல் அந்த எரிமலை வெடிக்கப் போகும் வருடமாம்.!

புவியின் காந்தப் புலம் வடக்கு, தெற்கு என பூமியில் காந்தப்புலம் இருப்பது தெரிந்தி ருக்கும். இந்த காந்தப்புலம்தான் உலகை நிலைப்படுத்தி இயங்க வைக்கிறது. ஆனால், ஒவ்வொரு 75 ஆயிரம் வருடங்களுக்கும் ஒரு முறை பூமியின் காந்தப்புலம் தலைகீழாக மாறுமாம். அப்படி மாறும்போது அடுத்த 100 ஆண்டுகளுக்கு காந்தப் புலம் என்பதே இல்லாமல் போகுமாம். அப்படி இல்லாமல் போகும் தருணத்தில் புற ஊதாக்கதிர்கள் வெளிப்பட்டு மனிதன், விலங்கினம், தாவரங்கள் என அனைத்தையும் நொடியில் பொசுக்கிவிடுமாம். இவையெல்லாம் 2012 அழிவுக்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.

உலகம் அழியும்:

நாசா விஞ்ஞானிகளுக்குட்பட்ட பல விஞ்ஞானிகள் 2012-ல் உலகம் அழிந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமில்லையெனத் தெரிவிக்கின்றனர். அடுத்த 450 ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்று இந்திய விஞ்ஞானி அய்யம் பெருமாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள நான்கு டன் ஒளியாகவும், வெப்ப மாகவும் வெளிப்படுகிறது. விஞ்ஞானிகளின் அதிநுட்ப ஆராய்ச்சியில் இன்னும், 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை.

பூமிக்கு ஆபத்து: 

பலர் கூறுவது போல் 2012-ல் கண்டிபாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங் கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது என்கிறார் அய்யம் பெருமாள்.


எந்த ஆபத்தும் இல்லை:

அமெரிக்காவின் வான ஆராய்ச்சி நிலையமான ‘நாசா’, 2012-ல் பூமிக்கு எதுவும் ஆபத்து இல்லை. நமது கிரகம் நாலு பில்லியன் ஆண்டுகளாக சரியாகவே இயங்கி வருகிறது. அனைத்து விஞ்ஞானிகளுகும் நன்றாகத் தெரியும். இப்படித்தான் 2012-ல் நிப்ரூ என்ற கிரகம் பூமியை நோக்கி வருகிறது என்றார்கள். 

அது இல்லை என்றதும் டிசம்பர் 21 என்று சொல்கிறார்கள். மாயன் நாள்காட்டியை ஆதாரமாக காட்டுகிறார்கள். எப்படி போன வருஷ நாள்காட்டி டிசம்பர் 31 உடன் முடிந்து புது நாள் காட்டி வருகிறதோ அது போலத்தான் மாயன் நாள்காட்டியும் 2012-ல் அதன் நீண்டகாலக் கணித சுழற்சி முடிந்து அடுத்த தொடர்ச்சி ஆரம்பமாகும். அதனால் பூமிக்கு எந்த ஆபத்துமில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கட்டுரையாளர்: டி.எஸ்.பத்மநாபன், மாலை முரசு. கருத்துகள் வரவேற்கப் படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக