செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், மார்ச் 19, 2012

“...மக்கள் பக்குவப்படவில்லை.!”



தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஒருமுறை வன்முறை வெடித்தது. 5-2-1922 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரி சௌரா என்ற ஊரில் தடையை மீறி ஊர்வலமாகச் சென்ற மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர்களை விரட்டிச் சென்றார்கள்.

தப்பியோடியவர்கள் காவல்நிலையத்துக்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டார்கள். ஆனால், கோபம் அடங்காத மக்கள் அந்தக்காவல் நிலைய துக்கே தீ வைத்துவிட்டார்கள். இதன் விளைவு? 22 காவலர்கள் தீயில் சிக்கி மாண்டனர்.


இச்செய்தியறிந்த மகாத்மா காந்தி சொல்லொண்ணா துயரம் அடைந்தார். போராட்டம் தடம்மாறிச் செல்வதால் ஒத்துழையாமை இயகத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மக்கள் இழைத்த தவறுக்குப் பிராயச்சித்தமாக தான் ஐந்து நாள்கள் உண்ணாநோன்பில் ஈடுபட்டார்.

நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற இளைய தலைவர்கள் போராட்டத்தை நிறுத்த வேண்டாம் என மகாத்மா காந்தியிடம் மன்றாடினார்கள். ஆனால், “மக்கள் இன்னமும் அகிம்சை வழிப் போராட்டத்துக்குப் பக்குவப்படவில்லை. அவர்களைப் பக்குவப்படுத்த நாம் தவறிவிட்டோம். எனவே, போராட்டத்தைத் தொடர்வது நாட்டுக்குக் கேடு விளைவிக்கும்” என்றார் காந்தியடிகள். இப்போதும், நாம் அகிம்சை வழிப்போராட்டத்தை புரிந்து கொண்டோமா என்பது உங்கள் பதிலுக்கே விட்டுவிடுகிறேன்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக