செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, மார்ச் 30, 2012

யார் இந்த உதயகுமார்?



சுப.உதயகுமார், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பில் தீவிரமாக இருக்கிறார். இவரது எதிர்ப்புத் தீவிரம் அடைய, போராட்டமும் 220 நாட்களை தாண்டி சென்றுக் கொண்டி ருக்கிறது. ‘அணுஉலை இயங்க வழியில்லை என்றால் எங்களது விஞ்ஞானிகள் இங்கு எதற்கு இருக்க வேண்டும்?...’ என்று ரஷ்யா கேள்வி எழுப்பியது. உதயகுமார் குறித்து பிரதமர் முதல், அமைச்சர் நாராயணசாமி வரை அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது?


போராட்டச் செலவுகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் பெறுகிறார் என்றெல்லாம் புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால், தமது சொத்துக் கணக்கை வெளியிட்டு அப்படியெல்லாம் என்று மறுக்கிறார். மக்களிடம் பணம் பெற்று முறையாக கணக்கு வைத்திருந்துதான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று உதயகுமார் கூறுகிறார்.

உதயகுமார் ஒருபடி மேலே சென்று, பொய்ப்புகார்கள் கூறுகின்றவர்கள் மீது வழக்கு தொடர்வேன் என்கிறார். எங்களுக்கும் வழக்குப்போடத் தெரியும் என்று அரசுத் தரப்பில் சவால் விடப்படுகிறது? இதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டிருந்த தமிழக அரசு கடந்த 19-ம் தேதி அமைச்சரவையைக் கூட்டி கூடங்குளம் அணுஉலை உடனடியாக செயல்படத் தொடங்க அனுமதி அளித்தது. 

இதனால், கூடங்குளத்தில் மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. எப்போது என்ன நிகழும் என்று கூற முடியாத நிலை. ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்களாக செயல்படாமிருந்த அணுஉலைகள் தற்போது முழுவீச்சில் உற்பத்தியைத் தொடங்கும் வகையில் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. அரசின் முடிவை எதிர்த்து உதயகுமாரும், போராட்டக்குழுவினர் சிலரும் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்படி பரபரப்புக்கான சுப.உதயகுமார் யார்?


குமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் பறக்கை சாலை சந்திப்பை யொட்டிய இசங்கைமணி வீதியை சேர்ந்தவர் உதயகுமார். நாகர்கோவில் பயோனியர் குமார சாமி கல்லூரியில் இளங்கலை கணிதம், கேரளப் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலமும் கற்றவர்.

1989 ஆகஸ்டு முதல் 2001 ஜனவரி வரையில் அமெரிக்காவில் ‘சமாதான கல்வி’ யில் முதுகலை பட்டம், ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பி.எச்.டி. பட்டங்களையும் பெற்றவர். தொடர்ந்து ஐ.சி.எப். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் எஸ்.பொன்மணி, தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர்.

உதயகுமாரின் மனைவி மீரா. இவர்களுக்கு சூர்யா, சத்யா என்ற இரு மகன்கள். நாகர்கோவில் அருகே பழவிளையில் சாக்கர் மெட்ரிக் பள்ளியை உதயகுமார் அதன் தாளாளராக இருந்து நடத்தி வருகிறார். (இந்த பள்ளியைத்தான் தற்போது சிலரால் இடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகிறது.) இந்த பள்ளியின் முதல்வராக, மனைவி மீரா இருக்கிறார். 

பலமான குடும்ப பின்னணியும், ஆழமான கல்விப் புலமும் கொண்ட உதயகுமார் பொதுப் பிரச்சனைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு நிகழ்வு கள் அவருக்கு தூண்டுகோலாக அமைந்தது.! குறிப்பாக கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்தை அவர் கையில் எடுத்துதான் பிரபலமானார். (அது கிறிஸ்தவர்களின் போராட்டம் என்று பலர் கூறுகிறார்கள். இதுகுறித்து நாம் மற்றொரு கட்டுரையில் காணலாம்.)


அணுஉலை எதிர்ப்பு என்ற சித்தாந்தம் எப்படி உதயகுமாருக்கு எழுந்தது? இதை அவரே கூறுகிறார்..., “கடந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தியப் பெருங் கடலில் அமெரிக்காவும், ரஷ்யாவும் படைத்தளம் அமைத்தது, அந்நாடு களுக்குள் பனிப்போர் நிலவியது குறித்தெல்லாம் எனக்குத் தெரியவந்தது. ஒருவேளை இந்நாடுகளிடையே போர் ஏற்பட்டு அணு ஆயுதம் பயன்படுத்தப் பட்டால், இந்தியப் பெருங்கடலை யொட்டிய நாடுகள் இல்லாமல் போகும் என்ற அச்சம் எனக்குள் இருந்தது. அணு ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவுகளை அப்போதுதான் தெரிந்துகொண்டேன். 

இந்திய நிலமும், கடலும், இயற்கையும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே ஜி.பி.ஐ.ஓ. (குரூப் ஃபார் பீஸ்புல் இன்டியன் ஓசன்) என்ற அமைப்பை என்னைப் போன்ற சமூக ஆவலுள்ள இளைஞர்களுடன் இணைந்து அப்போதே ஏற்படுத்தி னேன். மேலும் ஹவாய் தீவுப்பகுதியில் நான் ஆசிரியராக பணியாற்றியபோது நடந்த சம்பவங்களும் மிகப்பெரும் தூண்டுதலாக இருந்தது.


ஹவாய் தீவுப்பகுதியில்தான் பிரான்ஸ் நாடு தனது அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டது. இதனால் அங்குள்ள பூர்வீக குடிமக்கள் பாதிக்கப்பட்டனர். இயற்கையும் அழிந்தது. இதற்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடந்தன. அதில் நானும் பங்கேற்றிருந்தேன். அணு ஆயுத பரிசோதனைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் வீதி வீதியாக சென்று விநியோகம் செய்துள்ளேன். கையெழுத்து இயக்கத்தையும் நடத்தியிருந்தேன்

1988-ல் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை ஒய்.டேவிட் என்பவர் தலைமையில் இயற்கை ஆர்வலர்கள் மேற்கொண்டிருந்தனர். அப்போதே அதற்கு ஆதரவாகச் செயல்பட்டேன். 1998-ல் இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த போது அணுஉலைக்கு எதிரான அமைப்பை குமரி மாவட்டத்தில் பீட்டர்தாஸ், மறைந்த அசுரன் உள்ளிட்டோருடன் சேர்ந்து தொடங்கி நடத்தினேன். 

அப்போதெல்லாம் கூடங்குளம் பகுதிக்குச் சென்றாலே மக்கள் எங்களை விரட்டுவார்கள். இந்த அனுபவம் பலமுறை ஏற்பட்டதுண்டு. காரணம், பேச்சிப்பாறை அணை நீரால் வளம் பெறும், வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் நிறைய வாக்குறுதிகள் கொடுத்திருந்தனர். ஆனால் அப்போது எங்களது பேச்சு எடுபட வில்லை.

கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் மட்டும் கொஞ்சம் ஒத்துழைப்பர். 2001-ல் நவம்பர் 1-ம் தேதி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வலுவாக தொடங்கப் பட்டது. இந்த அமைப்புதான் தற்போது கூடங்குளம் அணுஉலையை மூட வேண்டும் என்று போராடி வருகிறது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

2 கருத்துகள்:

  1. திரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி ...? - கூடங்குளம் தகவல்

    http://naanoruindian.blogspot.in/2012/03/blog-post_20.html

    திரு. உதயகுமாரின் மாபெரும் பொய் - அணுமின் நிலையம் 40 % மின்சாரம் தானா..?

    http://naanoruindian.blogspot.in/2012/03/40.html

    பதிலளிநீக்கு