செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், மே 08, 2012

“சிக்கலைத் தகர்த்தெறிக.!”



குறிப்பிட்ட முக்கியமான விசயங்களில் சிலரால் எதையும் உறுதியாகத் தீர்மானிக்க முடிவதில்லை. அவர்களிடம் சுயேச்சையான தீர்மான சக்தி இருப்பதில்லை. அவர்கள் அந்த விசயத்தை அர்த்தமின்றி தள்ளிப்போட்டுக் கொண்டே போவார்கள். அவர்கள் தீர்மானமான, உடன்பாடான முடிவுக்கு வரமாட்டார்கள். சந்தர்ப்பம் நழுவி விடும். குளிர் காலத்தில் தேன் சேகரிப்பது போல் காலந்தாழ்ந்து விடும்.


நீங்கள் ஒரு விசயத்தை சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்து ஒரு உறுதியான தீர்மானத்திற்கு வர முயல வேண்டும். உடனே உங்கள் மொத்த சக்தியையும் பிரயோகிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தை உடனே செயலில் காட்ட முற்பட வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் வெற்றியடைவீர்கள். அளவுக்கு மிஞ்சி சிந்தனையில் ஈடுபடுதல் காரியத்தைக் கெடுத்துவிடும்.

முக்கியமான விசயங்களில் உங்களை விட அதிக அனுபவமும், உங்கள் நலனில் உண்மையான நாட்டமுடையவர்களுமான மூத்தோர்களைக் கலந்து ஆலோசிப்பது நலம். “சிக்கலைத் தகர்த்தெறிக” என்ற முதுமொழியை நினைவில் வைத்திருங்கள். - சுவாமி விவேகானந்தர்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

1 கருத்து:

  1. உங்கள் ஆலோசனைகள் நன்றாகவே உள்ளன. ஆனாலும் இன்றைய கால நாகரீக வாழ்க்கையானது சிக்கல்கள் நிறைந்தைவையாக மாறிவிட்டன.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு