செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

முட்டாள்கள் தினம்: யாரிடமும் ஏமாறாதீர்கள்.!



ஏப்ரல் 1-ந் தேதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். ஏமாற்று வதும், ஏமாற்றப்படுவதும் இன்றுதான். ஏப்ரல் 1-ந் தேதியை பெரியவர்கள் எதிர்பார்க்கிறார் களோ இல்லையோ, குழந்தைகள் பெரிதும் வரவேற்கிறார் கள். காரணம், அன்றைய தினம் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி நண்பர்கள், உடன் பிறந்தோர், பெற்றோர் என அனைவரையும் ஏமாறச் செய்து மகிழ்ச்சியில் குதூகலிப்பது குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.


முட்டாள்கள் தினம் எப்படி வந்தது? என்பதற்கு பல்வேறு சுவாரசியமான வரலாற்று தகவல்கள் உள்ளன. நாம் இதற்கு முன்பு ஒரு வரலாற்று தகவல் கொடுத்துள்ளோம். இருப்பினும் இன்னொரு வரலாறு உங்களுக்காக...! பண்டைய காலத்தில் ரோமானி யர்கள் ஏப்ரல் 1-ந் தேதியைத்தான் புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்தனர்.ஐரோப்பிய நாடுகளிலும் இதுதான் நடைமுறையில் இருந்துள்ளது. இந்தநிலையில், 1562-ம் ஆண்டு கிரகோரி என்ற துறவி போப் ஆண்டவராக இருந்தார். இவர், ‘ஜார்ஜியன்’ என்ற புதிய காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். 

அதில் புத்தாண்டு தினம் ஏப்ரல் 1-ந் தேதிக்கு பதிலாக ஜனவரி 1 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. “இனிமேல் எல்லோரும் ஜனவரி 1-ந் தேதியைத்தான் புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும்” என்று போப் கிரகோரி உத்தரவும் போட்டார்.


பல்வேறு நாடுகள் புதிய காலண்டர் முறையை ஏற்றுக்கொண்டாலும் இங்கிலாந்து போன்ற நாடுகள் அந்த உத்தரவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், புத்தாண்டு தினம் மாற்றப்பட்ட தகவல் பல நாடுகளை சென்றடையவில்லை. அந்த நாடுகளில் முன்பு போலவே ஏப்ரல் 1-ந் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடினர்.

இவ்வாறு காலண்டர் மாற்றப்பட்டு புதிய காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது தெரியாமல் பழைய முறைப்படியே ஏப்ரல் 1-ந் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடியவர்களை கேலி செய்தனர். அவர்களை முட்டாள்கள் தினம் என்று சித்தரித்தனர். காலப்போக்கில் ஏப்ரல் 1-ந் தேதி முட்டாள் தினமாக மாறியது என்பது வரலாறு. அந்த வகையில் இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதால் யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக