செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், மே 01, 2012

மௌனத்தால் வ(ரும்)ந்த நன்மை.!



யுகதர்மம் என்றுள்ளது. அந்தந்த யுகங்களில் தர்மமும் மாறுவதுண்டு. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என 4 யுகங்கள். தானே சென்று கொடுப்பர் கிருத யுகத்ததில்; கூப்பிட்டுக் கொடுப்பர் திரேதா யுகத்தில்; வந்து கேட்டால்தான் கொடுப்பர் துவாபர யுகத்தில்; கசக்கிப் பிழிந்து கேட்டால்தான் கொடுப்பர் கலியுகத்தில். நாம் இருப்பது இந்த யுகத்தில்தான்.


தர்ம தேவதைக்கு நான்கு கால்கள். கடந்த மூன்று யுகங்களில், மூன்று கால்கள் வெட்டப்பட்டு விட்டதால், இந்தக் கலியுகத்தில் தர்மம் ஒரே காலில், அதாவது கால் பங்குதான் உள்ளது. முக்கால் பங்கு தர்மம் இப்போது இல்லை. இனி, அடுத்த கிருத யுகம் வரும்போதுதான், தர்மம் முழு அளவில் இருக்குமாம். கலியுகமே இன்னும் பல வருடங்கள் இருக்குமாம்.

கலிகாலம், முற்ற முற்ற இன்னும் பல கொடுமைகள் நடக்குமாம். இந்த கலியுகத்தில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதை புராணங்களில் காணலாம். முந்தைய யுகங்களில் பொய் சொல்ல பயப்படுவர். ஒருவர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு பசுமாட்டைக் கொல்வதற்காக துரத்தி வந்தான் ஒருவன். அந்த பசு மாடு, இவர் பக்கமாக ஓடி வந்து, பக்கத்து சந்து வழியாக ஓடி தப்பித்துக் கொண்டது. 

திண்ணையில் உட்கார்ந்திருந்தவரிடம் வந்து, “இந்தப் பக்கம் ஒரு பசு மாடு வந்து போயிற்றா? என்று கேட்டான் துரத்தியவன். இவர் யோசித்தார்... பசு மாடு இந்தப் பக்கம் போயிற்று என்றால் அது உண்மை. உண்மையைச் சொன்னால், அவன் பசு மாட்டை தேடிப் போய் கொன்று விடுவான்; அந்தப் பாவம் நம்மைச் சேரும். பசு மாடு வரவில்லை என்றால் அது பொய்யாகி விடும்; அந்த பொய் சொன்ன பாவம் நமக்கு வரும்...” என்று யோசனை செய்தபடி பேசாமல் இருந்தார்.


பசுவை தேடி வந்தவன் இரண்டு, மூன்று தடவை கேட்டும், இவர் பதில் சொல்லவே இல்லை. “ஓகோ! இவர் செவிடு போலிருக்கிறது...” என்று நினைத்து திரும்பிப் போய் விட்டான். பசு மாடு தப்பியது; தான் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்று சந்தோஷப்பட்டார். மௌனமாக இருப்பதும் கூட நல்லதுதான். அதிகம் பேசப், பேச அதுவே மனஸ்தாபத்தில் முடியும்.

அதனால்தான், சில பெரியவர்கள் மௌன விரதம் கடைப்பிடிப்பதுண்டு. இப்போது இளைஞர்களும் இதை உணர்ந்துள்ளனர்.! வீண் பேச்சு பேசினால்தானே விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு. அகம் ஒன்று வைத்துக் கொண்டு புறம் ஒன்று பேசுபவர்களை யும் ஒதுக்க இந்த மௌனம் சிறந்த வழி என்பதை அறிந்தவர்கள் நம்மிடம் கூறியது உண்டு.! இதனால் வீண் விவாதம் இருக்காது. அதற்காக, பேசாமல் இருக்கவும் கூடாது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி சாமர்த்தியமாக பேச வேண்டும்; ஆனால் சந்தர்ப்பவாதியாக இருக்கக்கூடாது என்பதே நம்முடைய வேண்டுகோள். உங்களால் முடியுமா?

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

1 கருத்து:

  1. வாழ்த்துகள் சகோதரரே..மிகவும் நல்ல பதிவு..உண்மையுங்கூட.....:) மௌனம் கொல்லவும் செய்யும், கொள்ளவும் செய்யும்..சிறப்பு
    //அகம் ஒன்று வைத்துக் கொண்டு புறம் ஒன்று பேசுபவர்களை யும் ஒதுக்க இந்த மௌனம் சிறந்த வழி // தொடரட்டும் தங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு