செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், ஏப்ரல் 05, 2012

கெட்டப் பெண்ணிடமும்... நல்லப் பெண்ணிடமும்...?



பெண்டாட்டியை அடிப்பவன், அவளுக்கு 3 நாள் ஓய்வு கொடுத்து, தானும் 3 நாள் பட்டியினிருப்பாள் - சுவிட்சர்லாந்து.
இந்த உலகில் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநிறுத்தும் கடமை ஆண், பெண் இருவருக்கும் இருக்கிறது. அது ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. லிலியன் வால்ட் (எழுத்தாளர்).
பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்களா என்று எனக்குத் தெரியாது;  ஆனால் கண்டிப்பாகத் தாழ்ந்தவர்கள் அல்ல - கோல்டர் மேயர் (முன்னாள் இஸ்ரேல் அதிபர்).


அத்திப் பூவையும், வெள்ளைக் காகத்தையும், நீரிலுள்ள மீனின் காலையும் பார்த்தாலும் பார்க்கலாம். ஒரு பெண்ணின் மனதிலுள்ளதைப் பார்க்கவே முடியாது - இந்தியா.
பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் இல்லாதவரை அவர்களுக்கு இந்த சமூகத்தில் சம உரிமை கிடைக்காது - எலிசபெத் ஸ்டாண்டன்.
பாதிரிமார்களுக்கும், பெண்களுக்கும் மறதி என்பது கிடையாது - ஜெர்மனி.
பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ, அந்த ஆண்கள், அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகிவிடுவர் - ரவீந்திரநாத் தாகூர்.
பெண்ணியம் என்பது வேறொன்றுமில்லை.பெண்களையும் மனிதர்களாகப் பார்ப்பதுதான் - பௌலர் த்ரேச்சர் (பெண்ணியவாதி).


எல்லா ஆண்களும் சுதந்திரத்தோடு பிறந்தவர்களாம்;  அது எப்படி பெண்கள் மட்டும் அடிமைகளாகவே பிறந்தார்கள்? - மேரி ஆஸ்டல் (இங்கிலாந்து எழுத்தாளர்).
கெட்ட பெண்ணிடம் அவளைப் புகழ்ந்து ஒரு வார்த்தை சொல். நல்ல பெண்ணிடம் உன் விருப்பம் போல் பேசு - போலந்து.
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். ஆண்களோ பெண்களோ எந்த வேறு பாடுமின்றி நடத்தப்பட வேண்டும் - ஒலிம்பி டி களக்ஸ் (பிரெஞ்சு நாடக ஆசிரியர்).
எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகில்லை என்று சொல்லியதில்லை பிரெஞ்சு.
பெண்ணுரிமை என்பது வேறொன்றுமில்லை. மனித உரிமைதான் - மஹ்னாஸ் ஆஃப்கமி (இராணிய பெண்ணுரிமைப் போராளி).


சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண் - காந்தியடிகள்.
எந்த நாடாக இருந்தாலும் பெண்கள் சமத்துவம் என்பது முன்னேற்றத்தின் முதல் படி - கோஃபி அன்னான் (ஐ.நா.சபையின் முன்னாள் தலைவர்).
பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் சமூகம் முன்னேறும். வருங்காலத் தலைமுறை வாழ்வில் உயரும் - கோஃபி அன்னான்.
ஒருவரது தகுதியை முடிவு செய்வது திறமைதான். மரபணு தரும் பாலின வேறுபாடு அல்ல - பெல்லா  அப்சக் (அமெரிக்க வழக்கறிஞர்).
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும் - பாரதியார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக