செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, ஏப்ரல் 07, 2012

“கணவன் தலை... மனைவி இதயம்...”



பெண்களின் ஆயுதங்கள் கண்ணீர்த் துளிகள் - ஜியார்ஜியா.
ஆணுக்கு அவக்கேடு செய்தாலும், பெண்ணுக்குப் பிழை சொல்லல் ஆகாது.
பத்து மனிதர்களின் கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கிறது - சுவீடன்.
நூறு தௌ¢ளுப்பூச்சிகளைக் காத்துவிடலாம். ஆனால், ஒரு கன்னியைக் கட்டிக்காப்பது கஷ்டம் - போலந்து.
ஒரு பெண் ஒரு செயலைச் செய்து முடித்தால், அது பெரிய சாதனையாகக் கருதப்படவில்லையென்றால், அதுதான் பெண்ணுரிமை.! - சூசன் சரண்டான் (அமெரிக்க நடிகை).


ஆண்டவன் எல்லா இடத்திலும் இருக்க முடிவதில்லை.  அதனால்தான் அன்னையைப் படைத்தான் - இஸ்ரேல்.
ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள். பெண்ணோடு பழகிய பின்பும் சிரிக்காதவன் ஏமாளி - ஜப்பான்.
கெட்டிக்காரப் பெண்தான் காதலிப்பவனை விட்டுவிட்டு தன்னைக் காதலிப்பவனை மணப்பாள் - செக்கோஸ்லேவியா.
கணவன் தலை... மனைவி இதயம் இப்படியுள்ள திருமணம் இன்பமானது - எஸ்தோனியா.
உண்மையிலேயே, சிறந்த நாடு, பண்பாடு மிக்க நாடு என்று உலக வரலாற்றில் எந்த நாடுமே இல்லை. எல்லா நாடுகளிலும் பெண்கள் இழிவுப்படுத்தப் படுகிறார்கள் - லிக்ரிடா மாட் (அமெரிக்க சீர்த்திருத்தவாதி).


சமூகத்தின் ஒரு பாதியான பெண்களை விடுதலை செய்தால் மட்டுமே, அவர்கள் மற்றொரு பாதியான ஆண்களை விடுதலை செய்ய முன் வருவார்கள் - எம்மிலீன் பாங்க்ஹர்ஸ்ட் (பெண்களின் ஓட்டுரிமைக்காகப் போராடியவர்).
ஒரு பெண்ணை வளர்ப்பதைக் காட்டிலும், திருமணம் செய்து வைப்பதுதான் கடினம் - போலந்து.
பெண்கள் கிடைத்ததை மதிக்கமாட்டார்கள். மறுத்ததையே விரும்பி வாடுவார்கள் - ஸ்பெயின்.
இயன்ற பொழுதெல்லாம் பெண்கள் சிரிப்பார்கள். அழ வேண்டுமென்று தீர்மானித்து விட்டால் அழுவார்கள் - பிரான்ஸ்.


மனிதர்களுக்குக் குணத்திற்கு முன்னால் அறிவு தேவை. பெண்களுக்கு அறிவுக்கு முன்னால் குணம் தேவை - ஜெர்மனி.
பெண்களின் பங்களிப்பு இல்லாமல் புதியதோர் உலகத்தை உருவாக்க முடியாது... பெண்கள் பங்கேற்காத அரசியல், அரசியலே அல்ல.! - அருந்ததி ராய்.
மனிதர்கள் மனிதர்களாகப் பார்க்கப்பட வேண்டும். அவர்களை ஆணா, பெண்ணா என்ற அடிப்படையில் வேறுபடுத்தக்கூடாது - மில்ஸ் லேன் (குத்துச் சண்டை வீரர்)

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக