மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரைக்கும் நீதி கேட்டு நெடும் பயணமாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி நடந்து செல்லக் காரணமான சம்பவம் அது. திருச்செந்தூர் முருகன் கோயில் உதவி ஆணையர் சுப்பிரமணிய பிள்ளையின் மர்ம மரணம் பற்றி விசாரிக்க அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., சி.ஜெ.ஆர்.பால் என்பவர் தலைமை யில் ஒரு கமிஷனை அமைத்தார். அவர் தந்த அறிக்கை அன்றைய அரசுக்கு எதிராக இருந்ததால், அதனை வெளியிடவில்லை. கருணாநிதி அதை ‘எப்படியோ வாங்கி’ வெளியிட்டார்.
பொதுவாக விசாரணைக் கமிஷன் அறிக்கைகள் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட பிறகு வெளியிட வேண்டும் என்பதுதான் மரபு. அதை சட்டமன்றத்தில் வைக்க அரசு மறுத்தபோது, அதை வெளியிட வேண்டிய அவசியம் கருணாநிதிக்கு ஏற்பட்டது. சபை மரபு என்ற காரணத்தைக் காட்டி ஒரு தவறு மறைக்கப்பட்டுவிடக் கூடாது அல்லவா? ‘பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்த்த நன்மை பயக்கும் எனின்’ - என்கிறது வள்ளுவம். அந்த அடிப்படையில் பார்க்கலாமே.!
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக