செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, ஏப்ரல் 13, 2012

காதலின் சின்னமா தாஜ்மஹால்?



காதல் என்றாலே எல்லோருக்கும் நிச்சயம் நினைவுக்கு வரும் ஒரு விசயம் தாஜ் மஹால். அதனை காதலின் சின்னமாக எல்லோரும் கருதுகிறோம். மிகவும் அற்புத மாக வடிவமைக்கப்பட்ட நினைவகம் புகைப்படத்தில் பார்க்கும் போதே மிகவும் ரம்மிய மாக உணருகிறோம். அதனால்தான் இது உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கி றது. தாஜ்மஹாலை உலக அதிசயங்களில் ஒன்றாக அதன் கட்டடக் கலைக்காக வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம்.


ஆனால் அதனை காதலின் சின்னமாக அறிவித்தது யார்? ஷாஜகான் மும்தாஜ் மீது வைத்திருந்த காதலால் கட்டியதுதான் தாஜ்மஹால் என்று நாம் நினைத்திருக்கி றோம். ஆனால் உண்மை அதுவா? ஷாஜகான் மும்தாஜின் இரண்டாவது கணவர். மும்தாஜ் ஷாஜகானின் மூன்றாவது மனைவி. இதுதவிர பல மனைவிகள் உண்டு. மும்தாஜ் அவளது 14 ஆவது குழந்தை பிறக்கும்போது இறந்தாள். ஷாஜகான் பெண்களுக்கான தேடல் அதிகம் கொண்டவர். அவருடைய அரசவை யில் அழகான பெண்களுக்கென்றே ஒரு இடம் வைத்திருந்தார். அங்கு ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது. 


ஆனால் அழகான பெண்களுக்கு மட்டும் அனுமதி. தாஜ்மஹாலை கட்டி முடித்தவுடன் இதேபோன்று இன்னொரு கட்டடம் அமைந்து விடக்கூடாது என்பதற்காக, அங்கு பணிபுரிந்த 22,000 பணியாளர்களின் கைகளும் துண்டிக்கப்பட்டன. மேலும் கட்டட வடிவமைப்பாளரின் விழியைப் பிடுங்கி, தலையை வெட்டிக்கொலை செய்திருக்கிறார் ஷாஜகான். தன்னுடைய மகள் ஜஹானாரா பேகமுடன் முறை தவறிய உறவு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலே சொல்லப்பட்ட விசயங் களில் எங்கு காதல் இருக்கிறது? இத்தனை பேரை கொடுமைப்படுத்தி கட்டப்பட்ட கல்லறை எப்படி காதலின் சின்னமாகும்?

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

3 கருத்துகள்: