செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், ஏப்ரல் 19, 2012

“காங்கிரஸ்காரனுக்கு வரலாறு தெரியுமா?”


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா முதலில் ஆதரிக்காது என்று மறைமுகமாக அறிவித்தது. ஒருபடி மேலே போய், குறிப்பிட்ட எந்த ஒரு நாட்டுக்கும் எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பது இல்லை என்பதுதான் இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாடு என்று பிரணாப் முகர்ஜி கூறினார். பின்னர் ஐ.நா.அவையில் இந்தியா வாக்களித்தது வேறு கதை.!

இருந்தாலும், பிரணாப் கூறியது உண்மையா? அவருக்கு இந்தியாவின் வரலாறே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உலகில் எங்கெல்லாம் அடக்கு முறையும் ஒடுக்கு முறையும் நடந்திருக்கிறதோ, அங்கெல்லாம் இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்து வந்திருப்பதுதான் பாரம்பரிய நிலைப்பாடு.!


யூதர்களின் மீது இனப் படுகொலையை நடத்திய ஹிட்ரலைக் கண்டிப்பதில் முதல் ஆளாக இருந்தவர் காந்தி. ‘மனித குலத்துக்காக ஒரு போர் நடத்தலாம் என்றால், ஓர் இனத்தைப் படுகொலை செய்கிற ஹிட்லரை எதிர்த்துப் போர் செய்வது முற்றிலும் நியாயமானதே’ என்றார் அவர். “உலகம் 2 முகாம்களாகப் பிரிந்து இருக்கிறது. ஏகாதிபத்தியவாதிகளும் பாசிஸ்ட்டுகளும் ஓர் அணியில் இருக்கிறார்கள். சோஷலி ஸ்ட்களும் தேசியவாதிகளும் எதிர் அணியில் இருக்கிறார்கள். பாசிசத்தையும் ஏகா திபத்தியத்தையும் எதிர்க்கிற உலக முற்போக்கு சக்திகளுடன் நாம் சேர்ந்திருக்கி றோம்” என்று லக்னோ காங்கிரஸில் பகிரங்கமாக அறிவித்தார் நேரு.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா - சோவியத் என, உலகம் இரண்டு குழுக்களாகப் பிரிந்தபோது, இந்தியா அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தது. அப்போதும் பிரதமர் நேரு, “பாசிசம், காலனியம், இனவெறி, ஆக்கிரமிப்பு ஆகிய வற்றை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று சொன்னார். இந்தோனேசியாவில் டச்சு அரசாங்கம் படைகளைக் கொண்டுபோய்க் குவித்தபோது எதிர்த்தார் நேரு.


அதற்குப்பிறகுதான், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலே தலையிட்டது. வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் மோதல் ஏற்பட்டபோது, போரை நிறுத்த இந்தியா கடுமையாக முயற்சித்தது. போர்க்கைதிகளின் பரிவர்த்தனைக்கு நடுநிலை நாடுகளின் கமிஷன் நியமிக்கப்பட்டது. அதன் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெனரல் திம்மையா இருந்தார். அமெரிக்கா, சோவியத், சீனா ஆகிய மூன்று நாடுகளையும் பகைத்துக் கொண்டு எடுத்த முடிவு இது.

இந்தோசீனா - பிரெஞ்சு காலனிப் படைகளுக்கும் வியட்நாம் புரட்சிக்காரர்களுக்கும் நடந்த போரை முடிவுக்குக் கொண்டுவர நம்முடைய நாட்டைச் சேர்ந்த கிருஷ்ண மேனனின் ஆறு அம்சத் திட்டம் பயன்பட்டது. சூயஸ் கால்வாயை எகிப்து நாட்டு உடைமை ஆக்கியபோது, பிரிட்டனும் பிரான்சும் அந்த நாட்டின் மீது படை எடுத்தன. ‘இது ஆக்கிரமிப்பு’ என்று நேரு கண்டித்தார். பெல்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற காங்கோ உள்நாட்டுப் போரை நிறுத்தியது இந்திய ராணுவம். சீனாவை, ஜப்பான் ஆக்கிரமித்தபோது, இந்தியா கண்டித்தது.

மக்கள் சீனக் குடியரசு அமைக்கப்பட்டபோது இந்தியாதான் அதை முதலில் அங்கீகரித்தது. ஐ.நா. சபையில் மக்கள் சீனாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று வாதிட்ட நாடும் இந்தியாதான். அதே சீனா, திபெத் நாட்டை ஆக்கிரமித்தபோது இந்தியா கண்டித்தது. தலாய்லாமா ஆயிரக்கணக்கான கைதிகளுடன் இந்தியா வர அனுமதித்தது. இப்படித் தொடர்ச்சியாக ஏகாதிபத்தியத் தன்மைகளுக்கு எதிராகப் போராடிய பாரம்பரியம் இந்தியாவுக்கு உண்டு.


கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் துணிச்சலான முடிவுகளை இந்திரா எடுத்தார். ராணுவ ஆட்சியில், வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். பலரும் கொல்லப்பட்டார்கள். சுமார் ஒரு கோடி மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள். ஜெனரல் அரோரா தலைமை யில் இந்திய ராணுவத்தை கிழக்கு பாகிஸ்தானுக்குள் விட்டார் இந்திரா. 93 ஆயிரம் வீரர்கள் இந்தியாவிடம் சரண் அடைந்தார்கள்.

வங்காளதேசம் என்ற நாடு உருவானது. அமெரிக்காவையும் சீனாவையும் எதிர்த்தே எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. இந்தப்பின் புலத்தில்தான், “இலங்கையில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது இனப் படுகொலை” என்று இந்திய நாடாளுமன்ற த்திலேயே பிரதமர் இந்திரா அறிவித்தார். உள்ளூர்த் துப்பாக்கிகளையும், தங்களுக்கு தொரிந்த தொழில் நுட்ப அறிவுடன் தயாரிக்கப்பட வெடிகுண்டுகளையும் வைத்து சிங்கள ராணுவத்துடன் போராடிக்கொண்டு இருந்த போராளி அமைப்புகளுக்கு நவீன ஆயுதங்களையும், உயர்தரப் பயிற்சிகளையும் கொடுத்தது இந்திராதான்.


தமிழ்நாட்டின் பல்வேறு மலைப்பகுதிகளில் விடுதலைப் புலிகள் பயிற்சி எடுத்துக் கொண்டது, பகிரங்கமாக இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன்தான் என்பது இன்றைய இளைய தலைமுறை பலருக்கும் தெரியாது. யாழ்பாணத்துக்குள் தடையை மீறி ஹெலிகாப்டரை அனுப்பி உணவுப் பொட்டலங்களைப் போட்டவர் ராஜீவ்காந்தி. தமிழர்கள் உரிமையைக் காக்க ஜெயவர்த்தானவுக்கு எதிரில் உட்கார்ந்து கையெழு த்துப் போட்டவர்.

“அணு ஆயுதங்களை 2010-ம் ஆண்டுக்குள் தடை செய்ய வேண்டும்” என்று ஐ.நா. பொதுச்சபையில் பேசியவர். தென் ஆப்பிரிக்க நிறவெறியை எதிர்த்தவர். நிறவெறி கொண்ட அந்த நாட்டுடன் வர்த்தகம் கூடாது என்ற முடிவெடுத்த நாடும் இந்தியா தான். இப்படி வர்த்தகம் செய்யாத ஆப்பிரிக்க அரசுகளுக்கு உதவ ‘ஆப்பிரிக்க நிதி திரட்ட வேண்டும்’ என்று அறிவித்தவரும் ராஜீவ்தான்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து விடுதலை பெறப் போராடிய நமீபியாவின் ஸ்வாபோ இயக்கத்தை இந்தியா ஆதரித்தது. நமீபியா விடுதலை அடைந்தபோது, தான் பிரதம ராக இல்லை என்றாலும், ராஜீவ் அந்த விழாவில் பங்கேற்றார். கம்போடியாவை வியட் நாம் ஆக்கிரமித்தபோது, இந்தியா எதிர்த்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் இதற்கான முயற்சி எடுத்தார். வியட்நாம் ராணுவம் இறுதியில் வெளி யேறியது. 


இப்படி நேருவும், இந்திராவும், ராஜீவும் தங்களுக்கென ஒரு கொள்கை வகுத்துக் கொண்டு, அதற்கு எதிரான நாடுகளைக் கண்டிக்கவும் தண்டிக்கவுமான முயற்சி களில் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறார்கள். இந்தப் பாரம்பரிய விசயங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் பூசி மொழுகிவிட்டார் பிரணாப் முகர்ஜி. “எந்த ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்தது இல்லை” என்று எஸ்.எம். கிருஷ்ணா சொன்னது நம்முடைய பாரம்பரிய குணாம்சத்துக்கே எதிரானது.

‘அநியாயம் எங்கே நடக்கிறதோ அங்கெல்லாம் நான் தோன்றுவேன்’ என்ற கிருஷ்ணரின் கீதா உபதேசமே நம்முடைய பாரம்பரியம். ‘சொந்தச் சகோதரர்களே தவறு இழைத்திருந்தாலும் தண்டனை கொடு’ என்று உபதேசித்தான் கிருஷ்ணன். மகாபாரதக் கதையில் மட்டுமல்ல... மகாவம்சக் கதையில்கூட நாம் பாடம் கற்கத் தயாராக இல்லை என்றால் பழியும் பாவமும் யாருக்கு?

நன்றி: ப.திருமாவேலன், முதன்மை செய்தி ஆசிரியர், ஜூனியர் விகடன்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

1 கருத்து:

  1. அப்போது ஆண்டவர்கள் இந்திய காங்கிரஸ்காரர்கள். இப்போது ஆள்பவர்கள் சோனியாவின் இத்தாலிக் காங்கிரஸ் அடிவருடிகள்அல்லவா? வரலாறு தெரிந்தாலும் அந்த இத்தாலிக்காரியை எதிர்த்து எப்படி வாய் திறப்பர்?

    பதிலளிநீக்கு